Monday, February 27, 2012

சினிமாத்தனமான போலிஸும் என்கவுண்டர் கொலைகளும்...! ஒரு அலசல்!

மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்கும் ஒரு சுற்றுப் புற சூழலில் தமிழத்தின் மிக முக்கிய பிரச்சினையாக சட்டென்ற மழைக்காளான்கள் போல ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கி இருந்த துணிகர கொள்ளைச் செயல்கள் தமிழக மக்களை திடுக்கிடத்தான் செய்தன. விலைவாசி ஏற்றம், மற்றும் கடுமையான மின்வெட்டு , இன்னபிற பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வாழும் சூழலும் மக்களைத் தொற்றிக் கொள்ள ஒரு அசாதரண நிலைக்கு சட்டென்று தமிழகம் தள்ளப்பட்டது. இப்படியான ஒரு சூழலில் அரங்கேறியதுதான் வேளச் சேரியில் நடந்த என்கவுண்டர் என்று காவல்துறையால் வர்ணிக்கப்படும் 5 கொலைகள். பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் இருப்பிடத்தை காவல் துறை புலனறிந்து, நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் தங்கிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்து அவர்களைச் சரணடையச் சொல்லியதாகவும்,...

Monday, February 20, 2012

மாணவனின் குரூரம்...கொலை செய்யப்பட்ட ஆசிரியை...! ஒரு அலசல்...!

பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில * சினிமா , டிவி தான் காரணம்\ * பெற்றோர்களே காரணம். *கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?! * ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை. இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!! மாணவனை குறித்த ஒரு பார்வை ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி...

Tuesday, February 14, 2012

பசுமைவாதிகளின் புதிய லேகியம்: சி.எப்.எல் பல்புகள்

பசுமை இயக்க கோமாளிகளின் எதிரிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது குண்டு பல்பு. நூறாண்டுகளுக்கும் மேலாக பயன்பட்டுவரும் குண்டுபல்பு மேல் இவர்களுக்கு கோபம் வர காரணம் அது அதிகமான மின்சாரத்தை விழுங்குகிறது என்பதுதான். அதற்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கிய நகைச்சுவை உணர்வாளர்களின் நைட் இன் ஷைனிங் ஆர்மராக வந்து சேர்ந்தது சி.எப்.எல் பல்பு. அறுபது வாட்ஸ் குண்டு பல்ப் பயன்படும் இடத்தில் 13 வாட்ஸ் சி.எப்.எல் பல்பு பயன்படுத்தினால் போதும் என்ற காரணத்தால் சி.எப்.எல் பல்பு மூலம் மின்சாரத்தை மிச்சமாக்கலாம் என கணக்குபோட்டு அதை ஹீரோவாக்கி, குண்டுபல்பை வில்லனாக்கி பிரச்சாரம் துவக்கினார்கள் பசுமைவாதிகள். குண்டு பல்பை பத்து சென்டு முதல் முப்பது சென்டு விலையில் வாங்கலாம்.சி.எப்.எல் பல்பு விலை மூன்றுடாலர் அல்லது இரண்டு டாலர்.இந்த அதிக விலையை நியாயபடுத்த ஒரு...

Monday, February 13, 2012

மக்களை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கும் கழக ஆட்சிகள்...!

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவிற்கோ அல்லது அதிமுகவிற்கோ வாக்கினை செலுத்தி விட்டு ஓட்டாண்டிகளாயிருக்கும் எம் தமிழ் மக்களுக்கு அனுதாபங்களைக்கூறி இக்கட்டுரையைத் துவக்குகிறோம்.  திமுகவின் ஆட்சியில் சலிப்புற்று அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுத்து விட்டு தற்போது என்ன சாதித்து விட்டோம் தோழர்களே? விலைவாசியில் மாற்றம் இருக்கிறதா? வாழும் தினசரிகளில் அபரிதமாய் ஏதேனும் புதிய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா? அரசினை ஆளும் கட்சிதான் மாறியிருக்கிறதே அன்றி வேறு ஏதேனும் குறிப்பிட தகுந்த நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்? மின்சாரத் தடையால் தமிழகமே இருண்டு போய் கிடக்கிறது என்று திமுகவைச் சாடிவிட்டு அதிமுகவை அறியணை ஏற்றியதால் மாற்றம் ஏன் ஏற்படவில்லை என்று யோசித்தாவது பார்த்தீர்களா? வரிச்சுமையை ஏற்றி விளையாடிய நமது சகோதரியின் அரசு...

Wednesday, February 08, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (8.2.2012)

கனகு நடந்து வர டீ கடை அண்ணாச்சியும் ரெங்குவும் பாட்டை போட... 'ஏலே இமயமலை! எங்க ஊரு சாமி மலை! எட்டு தெச நடுங்க எட்டு வச்சு வாராரு! கனகு : என்னய்யா ரெங்கு... பாட்டெல்லாம் பலமா இருக்கு... நான் என்ன விசயகாந்தா...? ரெங்கு : ஆமா கனகு... நீ நாக்கை கடிச்சிட்டே வந்தியா... அதான் டைமிங்க்கு ஏத்த பாட்டு. அவர் நாக்கை கடிச்சதுதான் தமிழ்நாடே பேசிட்டு இருக்கு....என்னா தில்லு... இதே மாதிரி எப்பயும் தெளிவா போனா சரிதான்.. கனகு : என்ன தெளிவா... அவர் அப்படி இருக்க மாட்டாரே...அதெல்லாம் சரி. ஏன் இந்த பழைய நியூஸ சொல்ற...??  ரெங்கு : செய்தி பழசு தான். ஆனா அந்த விஷயத்தை வைச்சே நம்ம தலைவர்கள் எல்லாம் அரசியல் பண்றாங்க... எங்க மக்கள் பார்வை விசயகாந்த மேல திரும்பிடுமோன்னு நினைக்குறாங்க போல...  கனகு : அது என்னமோ சரிதான்... எல்லா அரசியல்வியாதிகளும் அத பத்தியே பேசிட்டு...

Monday, February 06, 2012

தமிழ் திரட்டி நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

தமிழ் வலைப்பதிவுகளைச் எல்லாம் சங்கமித்து ஒரு இடத்தில் திரட்டிக் கொடுக்கும் மையமாக தமிழ்த்திரட்டிகள் இருக்கின்றன. திரட்டிகள் தமிழ் வலைப்பதிவுகளைச் சேகரித்து உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்களின் விழிகளுக்கு நல்ல கருத்துக்களையும் கட்டுரைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும்.  இதுவே திரட்டிகள் தொடங்கியதின் மையக்கருவாய் இருக்க வேண்டும் என்று நாங்கள் கணித்த போது திரட்டிகள் தங்களின் நிர்வாகச் செலவுகளை மீட்டெடுக்க கொஞ்சம் வியாபார யுத்தியோடு விளம்பரங்களையும் இன்ன பிற திட்டங்களையும் செயல்படுத்தினால் அவை எப்போதும் செழித்து நிற்கும் என்றும் எமக்குள் ஒரு எண்ணம் தோன்றிய காலங்களும் உண்டு. தமிழின் முன்ணனி திரட்டிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் திரட்டிகள் இன்று எந்த நோக்கத்துக்காக தங்களின் செயலினைத் தொடங்கின என்பது திரட்டிகளை நடத்தும் முதலாளிகளுக்கே...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes