Monday, June 25, 2012

சமூகத்தை குற்றம் சொல்பவர்களே....நீங்கள் மாறியிருக்கிறீர்களா..?

கிளர்ச்சிகளை ஊட்டும் திட்டங்களையும், விளம்பரப் பலகைகளில் பெயர் கோர்க்கும் அறிவிப்புகளையும், கோஷங்கள் போட்டு கும்பல் சேர்க்கும் வழிமுறைகளையும், வியாபார யுத்திகள் கொண்ட புத்திகளையும் கடந்து செல்ல முற்படுகையில் சராசரியான எம்மைப் போன்ற மானுடர்களின் விழிப்புணர்வுத் தன்மை என்பது மங்கித்தான் போய்விடுகிறது.

சுயமாய் சிந்திக்கவும், சுயமாய் திட்டமிடவும், விரும்பிய திசையில் நகரவும் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பொதுப் புத்தி என்னும் வலைப்பின்னல் நம்மை விடுவதே இல்லை.

காலம் காலமாக மானுட இனத்திற்கு நன்மை செய்கிறேன் என்ற போர்வையில், தம்மையும் தம்மைச் சுற்றி இருக்கும் சுய நல மிக்கவர்களையும் முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் போராட்டங்களும், மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களும், சமூக இயக்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும், சமூக நல் இயக்கங்களும் போதும் போதுமென்ற அளவிற்கு தங்கள் பெயர்ப்பலகைகளை இந்திய தேசம் முழுமைக்கும் மாட்டி வைத்திருக்கின்றன.

தனி மனித வாழ்வின் தரம் இன்னும் மாற்றப்படவே இல்லை அல்லது மாறவே இல்லை. தோற்றுப் போன வழிமுறைகளையே மனிதர்கள் மீண்டும் மீண்டும் தூசு தட்டி எடுத்து வைத்துக் கொண்டு அதை விடியலுக்கான பாதையென்று விடாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்

சமூக நல்நோக்கு என்பது தனிமனித விருப்பம். தனிமனித விழிப்புணர்வு. உணவினை காலமெல்லாம் தட்டில் இட்டு விட்டு அதை உதவி என்று உலகில் உள்ளோர் அறியச் செய்து என்னோடு இருக்கும் சக மனிதனை பிச்சைக்காரனாக்கி வைப்பதுதான் சமூக நல் நோக்கா?

பேச்சும் எழுத்தும் என்ன செய்து விடும் என்று ஏளனம் செய்யும் மனிதர்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் சரியாய் தங்களின் விழிகளை பதிக்காதவர்களே.. பேனா முனையிலிருந்து வீறிட்டு வெளிப்பட்ட சக்தி மிகுந்த எழுத்துக்களும், மக்களின் மனங்களைப் புரட்டிப் போடும் செறிவு நிறைந்த உணர்ச்சி மிகு பேச்சுகளும் புரட்சி விதையை மனித மனங்களில் விதைத்து மாற்றங்களின் காரணியாய் எப்போதும் இருந்திருக்கின்றன.

நமுத்துப் போன திட்டங்களை ஓராயிரம் மனிதர்களிடம் திணித்து இதை நீ செய்.. அதை நீ செய்.. என்று தம்மை அறிவு ஜீவிகளாய் காட்டிக் கொண்டு சகமனிதனை கை பிடித்து கூட்டி செல்கிறேன் என்று கூறுபவர்களே..... உமது பயணம் எதுவரை? ஒரு ஏழையின் ஒரு வேளை வயிற்றுப் பாட்டிற்கு நீங்கள் உணவழிக்கும் வழிமுறையில் உங்களின் திருப்தி இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை... 

ஆனால்...அடுத்த வேளை உணவுக்கு அவனை உழைக்க வைக்க என்ன வழிமுறையைச் செய்து கொடுத்தீர்கள் நீங்கள்....? மக்கள் பணி ஆற்றும் சிங்கங்களே.....அடுத்தவரோடு உங்கள் அனுபவங்களை புரிதல்களை தெளிவு படுத்தி விவாதித்து சரி தவறுகளை சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்காமல் மேடைகளில் முழங்கி இதுவரையில் என்ன சாதித்து விட்டீர்கள் இந்த சமுதாயத்தில்...

பெரியார், அண்ணா போன்ற புரட்சித் தலைவர்களின் பேச்சிலும் எழுத்திலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் மேம்போக்குத் தனம் மட்டுமா மிகுந்திருந்தது....அல்லவே.....அவர்களின் வழிமுறைகளை,வார்த்தைகளை கேட்கும் மனிதர்களின் புத்திகள் எல்லாம் தம்மை உலுக்கிக் கொண்டு, கேள்விகளை கேட்டு பகுத்தறியும் தன்மையினை அவனுக்குள்  புகுத்தி மாற்றத்தை அவர்களின் மனதிலே ஏற்படுத்ததானே செய்தது...?

வழிகாட்டுகிறேன் என்ற வழிமுறையை விட்டு தள்ளி நின்று, அதற்கு மாறாக ஒவ்வொரு தனி மனிதனையும் இந்த சமுதாயத்தின் பொறுப்புக்களையும் தத்தம் குடும்பத்தின் பொறுப்புக்களையும் உணரவைக்கும் ஒரு மிகப்பெரிய யுத்த களத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தயவு செய்து தெருவிற்கு வராதீர்கள் மனிதர்களே....சமூகம் என்பதை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உமது வீட்டினை சரி செய்வது...

தயவு செய்து யாருக்கேனும் கொடி பிடிக்கவும் கோஷங்கள் இடவும் செல்லுமுன் யோசியுங்கள் மானுடரே...! நீர் செய்ய வேண்டியது எல்லாம் உமக்கும் உம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சுமூகமான பகிர்தலைக் கொடுக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்வது. பொய்யையும் புரட்டு அரசியலையும் வாய் மொழியாக யாரோ சொல்வதைக் கேட்டு யாரையும் உங்கள் தலைவர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என் சமூகத்தீரே...

உணர்வுகளால் ஒருவன் உங்களைக் கட்டிப் போடுவான் அவன் உங்களுக்கு பொருளாய் உதவிகள் செய்ய ஒரு போதும் விரும்பமாட்டான். உமது நேரத்தை செலவு செய்து அவனுக்காய் கோஷமிடவும், ஊர்வலம் போகவும் அழைக்க மாட்டான். உம்மின் அகக் கண்களை திறந்து உமது உழைப்பை உமக்கே மூலதனமாக்கி, எழுத்தினை உமக்கு அறிவித்து வாசிக்கவும், அந்த வாசிப்பினால் உலகின் நடைமுறைகளை உமக்குள் ஏற்றி வைத்து தெளிவுகளை உங்களைக் கொண்டே கைகொள்ளச் சொல்வான்....

அவனே உங்கள் தலைவன்!!!!

அவன் எப்போதும் உங்களுக்கு நல் வார்த்தைகள் மட்டுமே கூறி உங்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க மாட்டான்..., மாறாக உமது வேலையைச் சரியாய் செய்யாவிடில் எப்போதும் உம்மைச் சாடி விரட்டுபவனாய் இருப்பான்.

கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு இணைய தளத்தின் மூலம் இதையே நமது செய்தியாக பகிர விரும்புகிறோம்.தெருவில் இறங்கி மனிதர்களை வழி நடத்த ஒருவன் வருகிறான் என்றால் அவன் தன்னிறைவு பெற்றவனாய் இருந்தால் தான் முழுமையான சமூக நல்நோக்கு இருக்கும் இல்லையேல் தத்தம் சுய நலக் கொம்புகள்தான் சமூக நல் நோக்கு என்று வேசமிட்டுக் கொள்ளும் என்று நம்புகிறோம். 

அதற்காகவே ஒவ்வொரு தனி மனிதரையும் முதலில் தன்னிறைவு அடைந்த மனிதராய் மாறச் சொல்கிறோம். தன்னிறைவு என்பது முழுமையான விழிப்புணர்வு இன்றி சாத்தியமே இல்லை. ஆதலால் தனி மனிதன் விழிப்புணர்வு கொள்ள எல்லா சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் காரணிகளையும் விதைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதன் முதற்கட்டமே எழுத்துக்களாய் பரிணமித்து இணைய உலகில் சிறகடித்துக் கொண்டிருக்கிறோம்.

கழுகின் வழிமுறைகளும் செயல் திட்டங்களும் ஒருக்காலமும் முன்னால் எப்போதும் எல்லோரும் செய்ததாய் இருக்கப் போவது இல்லை. இப்படி இல்லாமல் இருப்பதாலேயே பலருக்கும் எமது நகர்வுகள் பிடிபடுவதுமில்லை. மீன்களை வாங்கிக் கொடுத்து மனிதர்களை சோம்பேறிகளாக்கி தம்மை கர்ண பிரபுக்களாக, எப்போதும் உயரத்தில் வைத்துக் கொள்ள முனையும் வியாபார மனிதர்களின் முகத்திரைகளை கிழித்தெறியும் ஒரு யுத்தக் களத்தில் நாங்கள் எழுத்துக்களால் களமாடிக் கொண்டிருக்கிறோம்....

மீன் பிடிக்கக் கற்றுக் கொண்ட மனிதர்கள் மீன்களை பிச்சையாக கொடுக்கும் மனிதர்களின் முகத்தில் விசிறியடித்து உங்களின் பிச்சைகள் எமக்கு வேண்டாமென்று உறுதியாய் ஒரு நாள் கூறுவார்கள்.......... அந்த அற்புத தினத்தில்....பகட்டுத் தலைவர்களும், போலியாய் புரட்சிக் கொடி ஏந்தும் மனிதர்களும் பிழைப்பற்றுப் போய் தத்தம் கடைகளுக்கு பூட்டுக்களை போட்டு பூட்டி விட்டு...

உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற செவிட்டில் அறையும் உண்மையை உணரத்தான் போகிறார்கள். 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது இயற்கையின் விதி...!

தேவையற்ற மன அழுக்குகளை எல்லாம் தெளிவான பார்வைகள் கொண்டு கலைந்து, தீமைகள் என்னும் குப்பைகளை கொளுத்தி புதுப் புது முயற்சிகள் செய்து வெற்றிகளை குவித்து நாளும் மிளிர்வோம்...! ஒப்பற்ற சமுதாயத்தின் உயரிய குடிமக்களாவோம்...என்ற கருத்தோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்.

 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Friday, June 22, 2012

எப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...? வாக்கு எண்ணிக்கை நுட்பம் பற்றிய பார்வை...!

தெரிந்து கொள்ளலாமே….
உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான  தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்குடியரசுத் தலைவருக்கான  வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும் திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும்  அறிவோம். ஆனால், குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது ? அதற்கான விதிமுறைகள்என்ன? இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….



குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட  பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:
1) இந்திய குடிமகன்
2) வயது – 35 அல்லது அதற்கு மேல்
3) பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி
இதனோடு கூட, ஒருவர் அரசாங்கத்தின் பதவியில் இருந்து கொண்டு ஆட்சிபொருப்பின்
நிமித்தம் பொருளுதவி பெறுபவராக இருத்தல் கூடாது.எனினும், பின் வரும் பொருப்பு  
வகிப்பவர்கள் குடியரசுத் தலைவர்பதவிக்கு போட்டியிடலாம்:
1)   துணை குடியரசுத் தலைவர்
2)  மாநில ஆளுநர்
3)  மத்திய மற்றும் மாநில அமைச்சர் (பிரதான மந்திரியும் மாநிலமுதலமைச்சரும் இதில்  உள்ளடங்குவர்)
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, குடியரசுத் தலைவராக போட்டியிடுபவர், அவரைத் தேர்ந்தெடுப்பவர்களில்,50 பேரால் முன் மொழியப்பட்டு 50பேரால் வழி மொழியப் படவேண்டும்….15,000 இந்திய ரூபாய் வைப்புத் தொகையாக கட்ட வேண்டும். ஆறில்ஒரு பங்கு ஓட்டு பெறாவிட்டால்,  வைப்புத் தொகை பறி போகும்.
யார் தேர்ந்தெடுப்பார்கள் குடியரசுத் தலைவரை ?
இந்திய குடிமகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்கள் சேர்ந்துகுடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். சட்டசபை உறுப்பினர்கள்மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைதேர்ந்தெடுப்பதற்கும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
தேர்தலும் தேர்வும்…

தேர்தலின் விதிப்படி சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கையுடன் சமமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரின் ஓட்டும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தினால் வகுத்து வரும் விடையை அந்த மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு வகுப்பார்கள். இது தான், ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் உண்டான வாக்கு.

மாநிலத்தின் மக்கள் தொகை / 1000 = A.

A / மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு (மாநில வாரியாக இது வேறுபடும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த ஒட்டு மதிப்பு சட்டசபையின் மொத்த ஓட்டு மதிப்புடன் சமமாக இருக்க வேண்டும். இதன் படி,

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு (மாநில வாரியாக), அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு பெறுக்க பட்டு, இந்தியாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுக்கப் படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிபின் கூட்டுத் தொகை / பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாநில வாரியான கட்டமைப்பு புரிதலில் உதவியாய் இருக்கும். (மக்கள் தொகை – 1971 census படி – இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும்…..)
A

State / UT
1971 Census
1971 Census divided by 1000
# of MLA
Value of Each MLA's Vote
Total Value of MLA's Votes
UP
83,849,905
83849.91
403
83824
Andaman


0


AP
43502708
43502.71
294
43512
Arunachal
467511
467.511
60
480
Assam
14625152
14625.15
126
14616
Bihar
42,126,236
42126.24
243
42039
Chandigarh


0


Chattisgarh
11,637,494
11637.49
90
11610
Dadra


0


Daman


0


Goa
795,120
795.12
40
800
Gujarat
26,697,475
26697.48
182
26754
Haryana
10,036,808
10036.81
90
10080
HP
3,460,434
3460.434
68
3468
J&K
6,300,000
6300
87
6264
Jharkand
14,227,133
14227.13
81
14256
Karnataka
29,299,014
29299.01
224
29344
Kerala
21,347,375
21347.38
140
21280
Lakshadweep


0


Maharashtra
50,412,235
50412.24
288
50400
Manipur
1,072,753
1072.753
60
1080
Meghalaya
1,011,699
1011.699
60
1020
Mizoram
332,390
332.39
40
320
MP
30,016,625
30016.63
230
30130
Nagaland
516,449
516.449
60
540
New Delhi
4,065,698
4065.698
70
4060
Orissa
21,944,615
21944.62
147
21903
Pondicherry
471,707
471.707
30
480
Punjab
13,551,060
13551.06
117
13572
Rajasthan
25,765,806
25765.81
200
25800
Sikkim
209,843
209.843
32
224
TN
41,199,168
41199.17
234
41184
Tripura
1,556,342
1556.342
60
1560
Uttarkhand
4,491,239
4491.239
70
4480
WB
44,312,011
44312.01
294
44394
Total
233

        4,120

   549,474
# Number of MP's




766
Value of MP's Vote




           717


ஒற்றை வாக்கு மாற்று முறைப்படி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அது எப்படி என்கிறீர்களா ?
4 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். தேர்தலில் வெற்றி பெற 51 சதவீத வாக்குகள் பெற வேண்டும். ஒவ்வொரு சட்டசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வாக்களிக்கும் போது போட்டியிடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்...

A – 7000 ; B – 6000 ; C – 4000 ; D – 3000 என வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம் (முதல் முன்னுரிமையின் படி). மொத்த வாக்குகள் – 20,000. வெற்றி பெற 10001 வாக்குகள் பெறவேண்டும். யாரும் பெறவில்லை.

கடைசி இடத்தில் வந்தவர் பந்தயத்தில் தோற்றுவிட்டதாக கருதப்படுவார். அவருடைய முதல் முன்னுரிமை (First Preference) வாக்குகள் – 3000. இந்த 3000 வாக்குகளின் இரெண்டாவது முன்னுரிமை – A – 1000 ; B – 1500 ; C – 500 என வைத்துக் கொள்வோம்.
மொத்த வாக்குகள் = A – 8000 (7000 + 1000) ; B – 7,500 (6000 + 1500) ; C – 4,500 (4000 + 500).

இந்த நிலையிலும் யாரும் 10,001 வாக்குகள் பெறவில்லை. C பந்தயத்தில் தோற்றதாக கருதப்படுவார். C பெற்ற 4,500 வாக்குகள் Aக்கும் Bக்கும் மூன்றாவது முன்னுரிமை (Third Preference) படி பிரிக்கப்படும். A – 1500 ; B – 3000 என வைத்துக் கொண்டால், A – 9,500 ; B – 10,500 வாக்குகள் பெற்று, B வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார்.

இதுதான் ஒற்றை வாக்கு மாற்று முறை.

என்ன தோழர்களே ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்ற நுட்பத்தை அறிந்து கொண்டீர்களா? இப்படித்தான் நம்மைச் சுற்றி நிகழும் நிறைய நிகழ்வுகளின் மறைமுக நேர்முக பங்கேற்பளாராக நாம் இருந்தும் அந்த அந்த நிகழ்வுகளின் முழு உண்மைகளை அறிந்திராதவர்களாக நாம் இருக்கிறோம்..!

பெரும்பாலான நாடளுமன்ற உறுப்பினர்களையும், மற்ற கட்சிகளின் நாடளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் வேட்பாளரே ஜனாதிபதியாகும் சூழல் தற்போது இருந்தாலும்....இந்திய அரசியல் சுழற்சி எதை வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் திருப்பிப் போடும் என்பதால், நாம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை காத்திருப்போம்..நமது தேசத்தின் முதற் குடிமகனாகப் போகிறவர் யாரென்று அறிய....!

கழுகிற்காக 
ஷங்கர் மகாதேவன்

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes