Friday, July 27, 2012

குழந்தைகள் பலிக்கு பள்ளி நிர்வாகம் மட்டும் பொறுப்பா...???

அடுத்தடுத்து பள்ளியில் விபத்து, உயிரிழப்பு, என மாணவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லாமலிருக்கிறது. என்  வீட்டருகிலிருக்கும் பள்ளியில் சக மாணவர்  தாக்கியதில் மாணவன் ஒருவன் அதே இடத்திலே உயிரிழந்தான்.  ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம், இப்பொழுது மாணவி ஒருவர் பஸ்லிருந்து தவறி விழுந்துள்ளார். இப்படி அடிக்கடி மாணவர்கள் உயிர் இழப்புக்கு காரணம் பள்ளி நிர்வாகமா அல்லது மாணவர்களின் செயலா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது.  பள்ளியில் நிகழும் மரணங்களுக்கு பள்ளியே பொறுப்பு எனது வீட்டருகிலிருக்கும் பள்ளி மிகவும் பிரபலமானது. K.Cசங்கரலிங்கம் (KCS) என்றால் அனைவரும் அறிந்திருப்பார்கள், மைதானத்தில் சக மாணவன் தாக்கியதில் அந்த இடத்திலேயே மாணவன் உயிர் இழந்தார். ஆனால் மாணவன் மயக்க நிலையில் இருக்கிறானென்று  ...

Friday, July 20, 2012

மீண்டும் உயிர்த்தெழுகிறோம்.....! கழுகின் சமூக விழிப்புணர்வு பார்வை....!

இடைவெளிகளும் ஓய்வுகளும் எப்போதும் நம்மை சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள உதவும் காரணியாகின்றன. வழமையான தொடர் நிகழ்வுகளையும், பொதுப்பிரச்சினைகளை பற்றிய பார்வைகளையும், நிறைய நிறைய கருத்துக்களையும், நிறுத்தி விட்டு சட்டென்று புறத் தொடர்புகள் அறுத்துக் கொண்டு சப்தமின்றி இருக்கும் நொடிகளில் மூளையின் எல்லா பாகங்களும் புத்துணர்ச்சி அடைகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவு வீரியமும், வீரமும் ஒருங்கே உடலுக்குள் பாய மீண்டும் நாம் சீறிப்பாய முடியும். கழுகின் நீண்ட நெடிய பயணத்திலும் ஒரு தற்காலிக ஓய்வு தேவைப்பட்டது. அப்படியான ஓய்வு கழுகின் பார்வையை இன்னும் கூர்மையாக்கி அதன் இலக்கினை நோக்கிய பாதையில் மீண்டும் சிறகடிக்க புத்துணர்ச்சியைக் கொடுத்தும் இருக்கிறது. செய்திகளை எல்லாம் செய்திகளாய் வாசிக்கும் மக்கள் கூட்டம் ஒரு புறம், செய்திகளை தமது ஆதரவு மற்றும் எதிர்...

Monday, July 02, 2012

எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...! ஒரு உஷார் பார்வை...!

ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் பற்றி எப்போதேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துதான் போட்டு விடுகிறது. இணைய உலகில் தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும்  மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes