
பாரளுமன்றத் தேர்தலுல் கூட்டணி வியூகத்திற்கான பல்வேறு கட்சிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கும் போது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பம் முதலே தெளிவான போக்கோடு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது.
40 தொகுதிகளுக்கும் எதேச்சதிகாரமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிராச்சாரத்துக்கு பிரதமர் கனவோடு புறப்பட்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளைப் பற்றிய எந்த ஒரு கவலையுமின்றி தன் மீதிருக்கும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின் காரணமாய இயங்க ஆரம்பித்திருப்பது தமிழக மக்களிடையே ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெறுப்பு சர்வ நிச்சயமாய் பாரளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்து வெற்றிவாய்ப்புகளின் எண்ணிக்கையை குறைக்கத்தான் போகிறது.
விஜயகாந்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணியோடு...