Friday, April 25, 2014

எப்போது நிகழும் எழுவரின் விடுதலை..?



எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள்  மனிதர்களே.....? காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்களையெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் நாங்கள் சகித்துத் கொள்வது..?

இதிகாசமென்று  சொல்லி நீங்கள் ஒரு கதை சொல்வீர்கள் அதில் கடவுள் கதாபாத்திரம் உங்களுக்கு குரங்கு பாத்திரம் எங்களுக்கு! அவதாரம் என்ற பெயரில்   எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள்  என்ன நியாயம் இது? யார் சொல்லி சென்ற  சமமற்ற  சமூக   நீதி இது..?

ராமாயணகாலத்தில் இருந்து திரிக்கப்பட்ட பொய்கள்   இதோ  ராஜிவ்காந்தி கொலை வழக்கு வரை  நீண்டு கொண்டே  இருக்கிறதே.... எப்போது  தான் விடியும்  பாரத கண்டத்தின் தென்கோடி புதல்வர்களில் பொழுது? ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன்     இறந்து  போனாள்  கொலை செய்த  பெண்.   ஒரு சில  மாதங்களுக்கு    பின்னால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள் கொலைக்கு கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் 

ராஜீவ் கொலை என்னும்  ஒற்றைக் காரணத்தை கையில்  எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கிலே ஒரு இனமும்  கொன்றழிக்கப்பட்டாகிவிட்டது   குற்றவாளியென கருதப்பட்டவரையும்    கொன்று அவரின் கீழிருந்த விடுதலை  போராட்ட இயக்கத்தையும் அழித்துவிட்டோமென்று கூறிவிட்டீர்கள்... இன்னுமா தீரவில்லை உங்களின்  கொலைவெறி..?

இருபத்தி மூன்று வருடங்களாக  தூக்குக் கயிற்றின்  கீழ்  வாழ்வின் பெரும் பகுதியை கழித்து  விட்டு முறையற்ற விசாரணையினால் கிடைத்த   தண்டனை மிருகம் முழுவதுமாய் தங்களை தின்று  தீர்த்துவிடுவதற்குள் எப்படியாவது சுதந்திர காற்றை சுவாசித்து  நீதி எப்போதும் சாவதில்லை  என்பதற்கு சான்றாகி  சாவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த  எழுவரின் விடுதலை இதோ அரசியல் தகிடுதித்தம் செய்பவர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது  

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனயென்பது பதினான்கு வருடங்கள்தான் ஆதலால் இருபத்தி மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சிறையில் இருந்தவர்களை மாநிலஅரசு விரும்பினால்  வெளியே விடலாம்  என்று  தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற மாநிலஅரசு மத்தியஅரசோடு  ஆலோசனை செய்து அவர்களை விடுதலை செய்ய சொன்னது. சட்டம் சொல்கிறது மாநிலஅரசின் முடிவை மத்தியரசு கட்டுபடுத்த முடியாதென்று  ஆனால் தென்கோடியில் வாழும் நீங்களெல்லாம்  எங்களை விட இழிந்தவர்கள் என்று கருதி எப்போதும் நம்மை அடக்கும் ஆதிக்க மனபான்மை கொண்ட கூட்டம் சொல்கிறது இது தவறென்று....!  ஆமாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் இருந்த சுவடு தெரியாமல் போகப் போகும் ஆளும் மத்திய காங்கிரஸ்  இத்தாலிய மூளை எழுவர் விடுதலையை எதிர்த்து மனு செய்து மாநில அரசுக்கு முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதனால் இதோ சட்டமே தடுமாறி ஆதிக்க சக்திகளின்  நிர்பந்தத்திற்கு திணறி நிற்கிறது 

ஏழுபேரை தூக்கு கயிற்றில் ஏற்றிவிடலாம் என்று திட்டமிட்டு வர்ணித்து வஞ்சித்து ஜோடிக்கபட்ட வழக்கு தூக்கு தண்டனையை   கொடுத்த போது  ஒரு போதும்  நினைத்து இருக்காது இந்த ஏழுபேருக்கு பின்னால்  ஏழரை கோடி தமிழர்கள் திரண்டு நிற்பார்களென்று. இப்போது எழுவரின் தண்டனை அந்த  ஏழுபேரோடு மட்டும் தொடர்புடையது மட்டுமல்ல அது ஏழரை  கோடி தமிழர்களின் மானம்!

  இதோ மீண்டும் ஒரு யுத்தத்திற்கு நீதி முழுவீச்சில் தயாராகி விட்டது....  

ஏழரை கோடி தேசிய இனமக்களை தலைமை  தாங்கி  நடக்கும்  தமிழகஅரசிற்கும்  அநீதியை  நிறுவி உயிர் குடிக்க  கோரபற்களை  காட்டி  நிற்கும் காங்கிரஸ் கட்சிக்குமான யுத்தமிது!    ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்விலும் நீதி நிச்சயமாக வெல்லும் என்ற நமது நம்பிக்கையை  இருபத்தி மூன்று  வருடங்களாக தன் மகனுக்காக  போராடும் அம்மா அற்புதம்மாளுக்கு  ஆறுதாலாய் நாம்  கூறும்  அதே  நேரத்தில்   இறுதிவரை   எழுவரின்  விடுதலைக்கு   தோளோடு  தோள்  நின்று  போராடுவது  ஒவ்வொரு  மானமுள்ள  தமிழனின்  சமூக கடமை  என்பதை  நாம் இங்கு அழுத்தமாய் பதிவு செய்து கொள்கிறோம் 

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

கழுகு 


(கழுகு  உயரபறக்கும் ) 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes