
' உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
- விவேகானந்தர்
சித்தாந்தங்களும், தத்துவங்களும், கோட்பாடுகளும் கடந்த தனிமனித ஆன்ம விழிப்பே....சமூகத்தை சீர்திருத்துமென்ற கருத்தினை வலுவாய் பதிந்தபடி கட்டுரையைத் தொடர்கிறோம்.
அது என்ன ஆன்ம விழிப்பு...?
இது கடவுளோடு சம்பந்தப்பட்டதா? மதத்தோடு தொடர்புடையதா? சடங்குகளின் மீது சவாரி செய்வதா? சாதிப் பிரிவுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்வதா? அரசியல் சித்தாந்தங்களின் மீதேறி நின்று பயணிப்பதா? இது கொள்கையா? கோட்பாடா? தத்துவமா? பொழுது போக்கா? வாழ்க்கையோடு தொடர்புள்ளதா? தொடர்பற்றதா?
இப்படியாய்...