Monday, April 30, 2012

எது ஆன்மீகம்...? போலி பரப்புரைகளுக்கு ஒரு சவுக்கடி...!

' உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். - விவேகானந்தர்  சித்தாந்தங்களும், தத்துவங்களும், கோட்பாடுகளும் கடந்த தனிமனித ஆன்ம விழிப்பே....சமூகத்தை சீர்திருத்துமென்ற கருத்தினை வலுவாய் பதிந்தபடி கட்டுரையைத் தொடர்கிறோம். அது என்ன ஆன்ம விழிப்பு...? இது கடவுளோடு சம்பந்தப்பட்டதா? மதத்தோடு தொடர்புடையதா? சடங்குகளின் மீது சவாரி செய்வதா? சாதிப் பிரிவுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்வதா? அரசியல் சித்தாந்தங்களின் மீதேறி நின்று பயணிப்பதா? இது கொள்கையா? கோட்பாடா? தத்துவமா? பொழுது போக்கா? வாழ்க்கையோடு தொடர்புள்ளதா? தொடர்பற்றதா? இப்படியாய்...

Thursday, April 26, 2012

சினிமா என்னும் கலை...!

எத்தனையோ கலைகள் இருந்த போதிலும் சினிமாவிற்கு மட்டும் ஏன்இவ்வளவு மவுசு. சினிமா மட்டும் எதனால் பெரும்பாலும் சகலமானவருக்கும் பிடிக்கிறது.சினிமாவின் தாக்கம், வீரியம் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது. மிகப்பெரும் வணிகம் சார்ந்த கலையாக சினிமா மட்டும் எப்படி உருவானது. இது முற்றுப்பெறாத முடிவில்லா கேள்வியாக இன்றுவரை இருந்து வருகிறது. மனித மூளைகளைத் தாண்டி மனிதமனங்களோடு பேசுகின்ற ஒரே சாதனம் கலை வடிவம் தான். கதை,கவிதை, இசை, நடனம்,ஓவியம், நாடகம்,பேச்சு, நிகழ்த்துக்கலை என்று நீளும் பல்வேறு கலைவடிவங்களில், ஏதாவது ஒன்றையாவது பிடிக்காத ரசிக்காத ஒரு மனிதன் கூட உலகில் இல்லை. அத்தனை கலை வடிவங்களும் ஒன்றிணைந்து தொழில் நுட்பத்தோடு திரையேறுகையில் அது மொத்த மனித சமூகத்தையுமே கவ்விப்பிடிக்கிறது.மொத்த மனிதர்களின் கலைதாகத்தை...

Monday, April 16, 2012

எது வசீகரம்....?!!!! மனித உடல் நிறங்கள் பற்றிய ஒரு ஆய்வுப் பார்வை...!

சினிமாவில் கதாநாயகனாய் நடித்து அதை மக்கள் ஏற்றுக் கொள்ள ஏதேதோ அளவுகோல்கள் காலங்கள் தோறும் இருந்திருக்கின்றன. பெண்களைப் போலவே முகவெட்டும் செக்கச் செவலென்ற தேகமும், முதிர்ந்த சிவப்போடு கூடிய உதடுகளும், மைதா மாவினை பிசைந்து நிரவி விட்டது போல உடல் வாகும், இருந்து விட்டால் போதும்... கூடவே தனது நீணட் கூந்தலை சிக்கலெடுத்துக் கொண்டே கதாநாயகியோடு போதுமான இடைவெளிவிட்டு தனது சொந்தக் குரலில் கர்நாடக சங்கீதத்தில் பிச்சு உதறினால்... ஒரு காலத்தில் மனிதர்கள் விரும்பி ரசித்தார்கள். அப்படியான ஆண்களைக் கண்டு பெண்கள் காதல் கொண்டு அலைந்தார்கள். தமிழ் சமுதாயத்தின் நீண்ட நெடு தொன் மரபில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பது பெரும்பாலும்தெருக்கூத்துக்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலமாகத்தான் தீர்த்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. கரடு முரடான ஆண்களும் பெருத்த மீசையும்...

Wednesday, April 11, 2012

கழுகு என்னும் போர்வாள்....!

ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சமூகம் என்ற கட்டமைப்பில் சேவைகள் அல்லது வழிகாட்டுதல்கள் காலம், காலமாக பல்வேறு தரப்பட்ட சமூகச் சூழல்களில், பல பரிமாணங்களில் மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. சமூக இயங்கு நிலையில் அறிவூட்டும் மனிதர்கள் எல்லோருமே ஒரு மேல் தளத்தில் நின்று கொண்டு தனக்கு கீழிருக்கும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு போதனையைச் செய்வதையும், சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை என்ற பெயரில் புறத்தில் செயல்கள் செய்து, மனிதர்களே...! பின்பற்றுங்கள்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes