Wednesday, May 30, 2012

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்! பெற்றோர்களே உஷார்...

   கோடைவிடுமுறைகள் முடிந்து குழந்தைகள் பள்ளிக்கு திரும்பும் காலம் வந்துவிட்டது! நேற்றுவரை வீட்டில் ஆடி ஓடிக் கொண்டிருந்த பிஞ்சுகளை கூட பள்ளிகளில் சேர்க்க மும்மரமாய் இருப்பார்கள் பெற்றோர்கள்! கால்கடுக்க வரிசையில் நின்று பல பெரிய மனிதர்களின் சிபாரிசினைப் பிடித்து,ஆயிரக்கணக்கில் நன்கொடைகொடுத்து எப்படியாவது நல்ல பள்ளியில் சேர்ப்பது ஒன்றே அவர்களது நோக்கமாகக் இருக்கும்! கவனிக்கவும் இங்கே பெற்றோர்களை பொருத்தமட்டில் நல்ல பள்ளி என்பது குழந்தைகளை வறுத்தெடுத்து அவர்களை மதிப்பெண் வாங்க வைக்கும் தொழிற்கூடம்தான்!  ஆனால் அந்த பள்ளியில் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாக படிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது! இந்த அறியாத்தனம் மெத்தப்படித்தவர்களிடம் இருந்து கடைக்கோடி மக்கள் வரை ஒரே மாதிரி இருப்பதுதான் வேதனை! அரசாங்க அதிகாரிகளுக்கும்...

Monday, May 28, 2012

வெடிக்கட்டும் கருத்துப் புரட்சி....! ஒர் கழுகு பார்வை...!

  சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது ஜனித்த குழந்தைதான் கழுகு. வலைப்பூக்களில் கழுகின் மூலம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சந்தேகமோ கேள்வியோ நம்மிடம் எப்போதும் எழவில்லை என்றாலும் எழுதி என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியை நம்மிடம் தொடுத்துப் பார்க்காத ஆட்களும் இல்லை.. வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் முதலில் ஜனித்த இடம் ஒரு தனி மனித மூளை. அவை எழுத்து வடிவமாகவோ அல்லது பேச்சு வடிவமாகவோதான் பரவி ஆக வேண்டும். மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படும் கருத்துக்கள் கேட்பாரற்றுக் கிடக்கலாம் அல்லது ஏளனப்படுத்தப்பட்டுப் பார்க்கலாம்? யார் நீங்கள் என்று ஓராயிரம் கேள்விகள் எம்மை துளைத்தே எடுக்கலாம்..? சலனங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் சென்றடைய...

Wednesday, May 23, 2012

தேர்ச்சி என்னும் எமன்........! +2 தேர்வு முடிவுகள் மற்றும் பொதுப்புத்திகளுக்கு ஒரு சவுக்கடி..!

ஒட்டு மொத்த சமூகத்தின் ஓட்டமும் ஏதோ ஒன்றை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் எப்போதும் ஒரே திசையை நோக்கி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்வியலில் எதை முதன்மைப்படுத்துகிறோம்? ஏன் முதன்மைப்படுத்துகிறோம் என்று தெரியாமலும், தெரிந்து கொள்ள முயலாமலும் பொது புத்திலிருந்து தீர்மானங்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளும் மிகைப்பட்ட மனிதர்களுக்கு கடும் கண்டனங்களைக் கூறிக் கொண்டு இக்கட்டுரையை தொடர்கிறோம். நேற்று வெளியான +2 தேர்வு முடிவுகள் என்றில்லை, காலம் காலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதும் மாநில, மாவட்ட, வட்ட, ஊராட்சி, கிராமப்பஞ்சாயத்து என்று தொடங்கி பள்ளிகள் தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுப்பவர்களை சீராட்டியும் பாரட்டியும் புளகாங்கிதம் அடையும் நமது சமூகமும் ஊடகங்களும், மிகைப்பட்ட குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மற்றும் தேர்வு பெற்றிராத மாணக்கர்களை...

Monday, May 21, 2012

சோதனையான ஒரு வருட அதிமுக ஆட்சி....மிரட்சியில் மக்கள்...! ஒரு அலசல்!

   ஒரு வருடத்தை கடந்து போகையில் செய்ய வேண்டியவைகளை செய்யாமலும், செய்தவைகளை விளம்பரப்படுத்தி தம்மைத் தாமே பாராட்டிக் கொள்வதும்தான் சரி என்னும் மனப்போக்கினை இனி எக்காலத்தில் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அன்றுதான் அது மக்களின் சாதனையாகும். ஆட்சியில் இருக்கும் கட்சி... மக்களைப் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்கின்றது என்று பொருள். குருட்டாம் போக்கில் அடித்த அதிர்ஷ்டத்தில் மாற்றுக்கு வழியில்லாமல் வாக்குப் பெட்டியில் அதிமுகவின் பொறி அழுத்தப்பட்டதை ஜெயலலிதா அவர்கள் இன்றும்கூட உணரவில்லை என்பது போலத்தான் தெரிகிறது. கருணாநிதியின் ஆட்சி நல்ல ஆட்சியோ, கெட்ட ஆட்சியோ ஆனால் சாமானிய சடுகுடுகளால் கூட எந்த கருத்தினையும் கூறி விமர்சிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருந்தது. ஆட்சி மாறி அம்மா அரியணை ஏறியவுடன் ஓங்கி, ஓங்கி கருணாநிதி அன் கோ-வை...

Tuesday, May 15, 2012

பேஸ்புக் மற்றும் வலைப்பூக்களில் நடக்கும் அத்துமீறல்கள்...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

இந்நேரம் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்கள் யாரேனும் பெண்களால் நடத்தபெற்று இருக்குமெனில் எத்தனை சமூக நல கொம்புகள் சேவை செய்ய வந்திருக்குமென்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.  மேலே நாம் கூறியிருக்கும் வரிகள் சட்டென்று கடந்த நொடியில் எமது புத்தியில் உதயமாகி இந்த நொடியில் எழுதப்பட்டது அல்ல. கடந்த மூன்றாண்டுகளாக சமூக வலைத்தளங்களினூடே தொடர்ந்து பயணித்து, கவனித்து அந்த கவனிப்பை கிரகித்து ஆராய்ந்து, அந்த தெளிவிலிருந்து வந்து விழுந்தவை. மொக்கையாய் எழுதும் பெண்களின் வலைத்தளத்திற்கு பின்பற்றுபவராய் சேருவதில் இருந்து, எவ்வளவு கேவலமாய் எழுதி இருந்தாலும் அதை ஆகா ஓகோ  என்று கருத்துரை வழங்குவது, வழிய, வழிய சென்று பாரட்டுவது, அம்மா என்று கவிதை எழுதி விட்டால் அழுது புரண்டு கண்ணீர் விடுவது,  தெருவில் கிடந்த முள் குத்திவிட்டது...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes