Wednesday, August 29, 2012

ஏன் கொண்டு வரமுடியாது சமூக மாற்றத்தை...? இணைய உலகம் பற்றிய ஒரு பார்வை!

விளைவுகளையும், தாக்கங்களையும், மாற்றங்களையும் கொடுக்காத பேச்சும், எழுத்தும், கூட்டமும் புதிதாய் மனிதர்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்று போகின்றன. கெட் டூ கெதர் என்றழைக்கப்படும் மனிதர்கள் கூடி அளவலாவும் நிகழ்வுகள் வாழ்வியலின் தேவைகள்தான் என்றாலும் அவை ஒரு போதும் வாழ்க்கைகான தீர்வுகளைச் சொல்லி விடுவதில்லை.  கேளிக்கைகள் எல்லாம் கடும் அயற்சியான வேலைகளுக்கு நடுவேயான நாம் எடுத்துக் கொள்ளும் ஓய்வுகள். அவை புத்துயிர் அளித்து மேலும் உற்சாகமளிக்கும் என்றாலும் முழுமையான ஓய்வுகள் நம்மை சோம்பேறியாக்கி விடும் என்பதும் உண்மை. இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வரும் அத்தனை பேரும் சமூக மாற்றத்தை விரும்பிதான் வருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது...! நம் சமூகத்திற்கு இன்னமும் என்ன வேண்டும்...? எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது என்று கருதும் ஒரு...

Friday, August 24, 2012

என்ன செய்து கிழிக்கப் போகிறோம் நாங்கள்...? ஒரு கழுகு பார்வை...!

   இந்த சமூகத்தினூடே வாழ்வதற்கான தகுதியாய் மீண்டும் மீண்டும் உரக்க சப்தமிட்டு தனது இருப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமை பலருக்கு இருக்கிறது. கூட்டம் சேர்ந்து கொண்டு, தன்னை கடந்து செல்லும் மனிதர்களை எல்லாம் கிண்டல் செய்து சிரிக்கும் புரையோடிப்போன மனோநிலையை ராஜ குணமாக எண்ணிக் கொண்டு தத்தமது புஜபலம் காட்ட முஷ்டியை எப்போதும் முறுக்கி நிற்கிறார்கள். நான் யார் தெரியுமா..? என்று கோபத்தோடு மீசை முறுக்க நிறைய பணமும், நிறைய ஆட்களும், நிறைய அதிகாரமும் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. மேலே சொன்ன எதுவுமே இல்லாமல் அவர்கள் இருக்கும் போது நீங்கள் யாரென்ற கேள்வியை யாரும் கேட்டு விட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாதே, அவமானம் பிடுங்கித் தின்று விடுமே என்ற காரணத்தால் தகுதி என்ற பெயரில் தெருக்குப்பைகளை எல்லாம் எடுத்து தத்தமது தலைகளில் ஏற்றிக்...

Friday, August 17, 2012

சமூக பிரச்சினைகளும் இணைய அட்டைக் கத்திகளும்,...!

வாழ்க்கையின் தடம் எங்கே ஆரம்பித்தது..? எங்கே செல்கிறது...? என்ற பிரஞைகள் அற்றுப் போய் வயிற்றுப் பிழைப்புக்காய் தினமும் அலாரம் வைத்து எழுந்து, அலுத்துக்கொண்டு உடல்வலியோடு படுக்கையில் சரியும் கோடாணு கோடி மக்களில் மிகையானவர்களுக்கு அன்றாடம் கணிணியைத் தட்டி பார்க்கும் வாய்ப்போ, இணையத்தில் காலம் மறந்து அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு தத்தமது மேதாவித் தனத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வாய்ப்போ கிடையாது. தன் முனைப்புக்களைத் தீட்டிக் கொள்ளும் களமாய்ப இன்று ஒரு கோர வடிவம் எடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் இணையப் பெருவெளியில் விர்ச்சுவல் மனிதர்கள் அரசியல் பேசுகிறார்கள், சமூக நலம் பேசுகிறார்கள், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் தயிர் கடையும் மத்தை வைத்துக் கடைந்து அங்கே ஜனநாயக வெண்ணையையும் கடைந்தெடுக்கிறார்கள். மதவாதிகள் மூச்சிறைக்க பிரச்சாரம்...

Monday, August 06, 2012

டெசோ மாநாடும்.....ஈழத்தமிழர் விடியலும்....! ஒரு ஆய்வுப் பார்வை....!

   தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கம் மீண்டும் சோம்பல் முறித்து எழுந்து ஒரு மாநாடும் நடத்தியும் விட எல்லாவிதமான முஸ்தீபுகளையும் செய்ய ஆரம்பித்தாகி விட்டது. ஈழ ஆதரவு இயக்கம் என்று கடும் ஆக்ரோசத்தோடு 1985லே ஆரம்பிக்கப்பட்டு இலங்கை அரசை நடு நடுங்கச் செய்த டெசோவும் இந்த டெசோவும் ஒன்றுதானா என்ற கேள்வி நமக்குள் எழுவதற்கு காரணமாய் பல்வேறு விடயங்களை இங்கே முன் வைக்கலாம். ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை எப்போது தனி ஈழம் பெற்று தருவதாய் ஒருபோதும் இருந்திருக்கவே இல்லை. சர்தார் வல்லபபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் தைத்துக் கொடுத்த ஒட்டுப்போட்ட துணியைத்தான் இன்று நாம் இந்திய தேசம் என்று ஏந்திப் பிடித்துக் கொண்டு தேசிய உணர்வென்னும் தொடர்ச்சியாய் பரப்பப்பட்ட பொது புத்தியில் இந்தியர்கள் என்று கூறிக் கொண்டு இறையாண்மையையும், தேசப்பற்றினையும் வலுக்கட்டாயமாக...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes