Tuesday, May 31, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......VI

பாகம் I  பாகம் IIபாகம் IIIபாகம் IVபாகம் V   ஊடகங்களின் வளர்ச்சி பற்றிய சென்ற பகுதியில் இந்தியாவில் வானொலியின் வரவு பற்றிச் சிறிது பார்த்தோம். இன்றும் அதான் தொடர்ச்சியைப் பற்றிக் காணலாம்! இந்திய அரசு உதவ இயலாத நிலையினைத் தெரிவித்திருந்த போது அரசு சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடெங்கிலும் வேண்டுகோள்கள் பிறந்தன. அப்போது வானொலிப்பெட்டிகள்  தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த நிறுனவங்கள் தாம் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான ரூபாய்கள் முடக்கப்பட்டுவிடுமே என்றும் அரசிடம் முறையிட்டனர். ஆப்போதைய அரசு ஒளிபரப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தது. அவ்வண்ணம் 1930 ஏப்ரல் மாதம் முதல் நாளிலிருந்து இந்திய அரசின் தொழில் மற்றும் தொழில்சார் துறையின் கீழ் ( Industries and Labour Department ) " தி இந்தியன் ப்ராட்கேஸ்டிங் சர்வீஸ் ( The Indian...

Wednesday, May 25, 2011

வெற்றியின் வேர்கள்...! ஒரு தன்னம்பிக்கைப் பார்வை...

நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...? இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்..... தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்....... குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை....

Saturday, May 21, 2011

புதிய சட்டசபையை மாற்றியது சரியா? ஒரு விரிவான அலசல்..!

அரசியல் மாற்றங்கள், அதிருப்திகள், வெற்றிகள், தோல்விகள் தாண்டி சில சத்தியங்களை மீறுவதில் காழ்ப்புணர்ச்சிகளை காட்டுவதில் தமிழகத்தில் இருக்கும் மிக முக்கிய இரண்டு கட்சிகளிடம் இருக்கும் மனப்பக்குவங்கள் மிகவும் கேவலமானது என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஈழப்பிரச்சினையையும் ஊழலையும் குடும்ப அரசியலையும் பொறுக்க முடியாமல் மக்கள் அரியணையில் ஏற்றிய அ.தி.மு.க அரசு தனது முதல் செயல்பாட்டின் மூலம் மீண்டும் தங்களின் கோர முகத்தை காட்டியிருப்பது கொஞ்சம் பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக வடிவமைக்கப் பட்டிருந்த சட்டசபையை அதை தி.மு.க அரசு நிர்மாணித்தது என்ற ஒரே காரணத்துக்காக புறக்கணித்து விட்டு மீண்டும் பழைய கோட்டைக்கு சென்றிருக்கும் தமிழக முதல்வர் இன்னும் தான் ஒரு பணக்கார கான்வென்ட் பள்ளியின் மாணவியைப் போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes