Thursday, June 30, 2011

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை...!

நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும். மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!  அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு...

Wednesday, June 29, 2011

யார் இந்த சுவாமி நிகமனானந்தா? ஒரு பளீச் ரிப்போர்ட்....!

ஒரு தேசம், இங்கே சுற்றி விரவியுள்ள பொது புத்திகள், பொறாமைகளை தன்னகத்தே கொண்ட மனிதர்கள், சுயநல அரசியல்வாதிகள், தத்தம் தகுதியறியா தலையற்ற முண்டங்கள் என்று சீரழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்தியம் பேசுகிறவர்களின் நாக்குகளை அறுக்க வருகிறவனின் தலைகளை கொய்வோம் என்று போர்ப்பரணி பாடுவதில் என்ன தவறு....? வன்முறை தேவையில்லை என்ற கூற்றினை மறுக்கும் மனிதர்களை எல்லாம் உலுப்பி எழச்செய்து கீதையையும், ரசூல் அல்லாவின் (சல்) போர்களையும் வாசிக்கச் சொல்லத்தான் வேண்டும். சத்தியம் சத்தியத்தால் வெல்லப்படலாம் ஆனால் அநீதிகளை எரித்துப் போட பிரமாண்ட வன்முறை தேவைப்படுகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு தேசத்து எல்லைகளிலும் ஆயுதமேந்திய மனிதர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு நன்மை செய்ய பத்து தீமைகளை எரித்துப் போடுவது வரலாற்றின் காட்சிகளில்நாம் கண்டது. இப்படிப்பட்ட ஒரு...

Tuesday, June 28, 2011

கறுப்பு பணம் என்னும் அரக்கன்..! ஒரு பொருளாதாரப் பார்வை...!

கறுப்பு பணம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது கள்ள நோட்டை தான் கறுப்பு பணம் என்று நினைத்து கொண்டு இருந்தேன், பிறகு தான்...தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கறுப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கறுப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்....என தெரியவில்லை கறுப்புப்பணம் என்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அதை பதுக்கி வைத்திருக்கும் அளவை கேட்டால் மயக்கமே வந்துவிடும் 70 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். வங்கியே முன்வந்து எங்கள் வங்கிகளில் கணக்குவைத்திருப்போர் விபரங்களை அந்ததந்த நாடுகள் கேட்டால் கொடுக்கத்தயார் என அறிவித்து இருக்கிறது ஆனால் அது நம் இந்திய அரசியல்வாதியின் செவிகளில் விழவில்லை போல...செவிகளில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள். அரசு இந்த...

Monday, June 27, 2011

மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது ஏதெனும் நல்லது நடக்கும் என்ற நமது ஆசைகளில் டன் டன்னாக மண் அள்ளிக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சி. கடந்து போன ஆட்சியின் ஒரு வலுவான கிடுக்குப் பிடியிலிருந்து தப்பித்தோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே காழ்புணர்ச்சி அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. கடந்த தி.மு.க அரசின் திட்டங்கள் நலம் பயப்பதாய் இருந்தாலும் கூட அதை தவிடு பொடியாக்கித்தான் தீருவேன் எனபதற்கா அரசுப் பொறுப்பு ஏற்றார்கள்? மக்களுக்கு நல்லது செய்ய வந்த அரசு கடந்த அரசு செய்த நல்ல விசயங்களை அழித்தொழிக்கத்தான் வேண்டுமா...? சாரசரி தமிழனின் ஆதங்கமாய் விரியும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...! உலகளாவிய தமிழர்கள் அனைவரின் கோபத்தின் விளைவாக தமிழகத்தின் முதல்வர் என்னும் சிம்மாசனத்தில் இருந்து அல்லாடும் வயதில் தூக்கி எறியப்பட்டார் கருணாநிதி. தூக்கி...

Friday, June 24, 2011

ஹலோ டாக்டர் உடலே...என் உடலே...(ஒரு ஆரோக்கிய பார்வை)

சுவரில்லாமல் சித்திரம் எப்படி செய்ய முடியும்? உடலின் ஆரோக்கியம் போற்றாமல் ஆயிரம் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் போராட்ட வடிவங்களையும் மனிதர்களுக்கு பகிரதலின்  அர்த்தங்கள் இருக்க முடியாது. தான், தனது குடும்பம் என்று செப்பனிட்டு நாம் இயங்க ஆரம்பிப்பதற்கு முன்னால்...தன் உடல் நலம் என்ற சூட்சும இலக்கை கழுகு உற்று நோக்கச் சொல்கிறது. உடல் ஆரோக்கியம் என்ற விசயம் பூர்த்தியான உடனேதான் ஒரு மனிதன் தன்னளவில் திருப்தியடைய முடியும். தன்னளவில் திருப்தியான மனிதனுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். தன்னம்பிக்கை அதிகமானால் செயல்களில் தீரம் வரும். செயல்களில் தீரமானால் வெற்றி என்பது எளிதாகும். வெற்றி பெற்ற மனிதன்...தான் மற்றும் தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு நிலையை மனிதன் அடைந்து அவன் தன்னிறைவு ஆகும் போது யாரும் எதுவும் சொல்லாமலேயே...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes