Wednesday, December 29, 2010

வரலாற்றின் பக்கங்களில்...

முன் பின் முரணுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒற்றை பயணத்தில் கழுகு எட்டிய உயரத்திலிருந்து சற்றே தலை திருப்பி தாம் கடந்து வந்த திசையினை பார்க்கிறது. கவர்ச்சி அரசியலும், வன்கூட்டுகளும், பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் கூறப்படுபவர்களையும் தாண்டி.........சுயதன்மை என்ற ஒரு முகம் கொண்டு வானில் சிறகடிக்க முடிவு செய்த நிமிடங்கள் எத்தகையவை............? அரசியலும், மதங்களும், தற்பெருமை ஆர்வாலர்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு தேசத்தின் குப்பைகளை கழுகு தனியாக அள்ளிவிடும், சமுதாய கோணல்களை சரிசெய்து தமிழ் திரையின் அதிரடி நாயகனைப் போல தன்னை வரித்துக் கொண்டும் நகரவில்லை மாறாக பேசும் சக்தி இருக்கும் எமது நா.......நல்லன பேசட்டுமே........, பார்க்கும் சக்தி கொண்ட எமது கண்கள் நேர்நோக்கில் விரிவாய் பார்க்கட்டுமே...சத்தியங்களை எதிர் கொள்ளட்டுமே......, வலிவு கொண்ட...

Sunday, December 26, 2010

அஞ்சலி....

உறங்கிக் கொண்டிருந்த நீ விழித்ததேன்...? உறக்கத்திலிருந்த எம்மைக் கவிழ்ந்திருந்த இமைகளோடு கவிழ்த்து நீ கொண்டு போனதும் ஏன்? வாழ்க்கையை உன்னில் கொடுத்து உன் காலடியில் கிடந்த பொழுதினில் எம்மீது காதல் கொண்டாயோ ஆழிப் பேரலையே... எம் உயிர் அழித்த ஆழப்பேரலையே.... எல்லாப் பொழுதுகளையும்... விடிய வைத்தது இயற்கை விடியலைக் கொன்றழித்து... யுகங்களாய்ப் பசிக்கவைத்திருந்த உன் வயிற்றின் பசியடக்கினாய்... எம்மின் உயிர் நசுக்கினாய்...! சாந்தமாய் நின்ற உன் கட்டவிழ்ந்த நொடியில்.. ஏன் அலையே எம்மிடம் சொல்லவில்லை ஏன் கடலே சைகைகள் செய்யவில்லை... உன்னில் உப்புச்சுவை குறைந்ததென்று எம்மவரின் கண்ணீரைக் கடன் கேட்டது எப்படி நியாயம் ஆகும்? வாழ்க்கையை வாரி வாரி..... வழங்கிவிட்டு வஞ்சகமின்றி.. மொத்தமாய் உயிர் குடித்தது யுத்தமரபில்லையே இயற்கையே எம் உயிர் அழித்த செயற்கையே...! கருப்பு...

Saturday, December 11, 2010

திருமதி. மனோ சாமிநாதன் சிறப்பு பேட்டி...!

விளக்கங்கள் தெளிவுகள் எல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமான விவாதங்களிலும் அனுபவங்களிலும் இருந்து பெறப்படவேண்டியவையே என்பது நிதர்சனமான ஒன்று. நான் சொல்வதுதான் இறுதி உண்மை என்று நம்பும் மூளைகள் சர்வ நிச்சயமாய் ஆராயப்படவேண்டியவை. ஏதேதோ கருத்துக்கள் கொள்கிறோம்.. என்ன என்னவோ செய்கிறோம்...ஆனால் அனுபவசாலிகளின் வார்த்தைகளில் இருக்கும் உண்மைகளை எப்போதும் ஆராய்வதில்லை. தெளிவைத் தேடி நாமும் நமது சிறகினை விரித்தோம்.... பரந்த வானில் ....வந்திறங்கிய இடம் அமீரகத்தில் சார்ஜா.... திருமதி. மனோ சாமிநாதன் மூத்த பதிவர், முன்னாள் பத்திரிக்கையாளர், ஓவியர், 30 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவை நேசிக்கும் ஒரு அற்புதமான இல்லத்தரசி. சமகாலத்தில் பதிவுலகில் விவாதித்துக் கொண்டிருக்கும் கலாச்சரம் மற்றும் லிவ்விங் டு கெதர் பற்றியெல்லாம் அம்மாவிடம்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes