Friday, December 30, 2011

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் II

நீ உன் பெற்றோர்களை கொல்லாதவரை..நீ சுதந்திரமடைய முடியாது- புத்தர் அதிர்ச்சியாக இருக்கிறதா? இருக்கத்தானே செய்யும்.. ஆனால், புத்தர் ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் என்று யோசித்தால் விஷயங்கள் புரிபடும். நீங்கள் இப்போது வருத்தப்பட்டுகொண்டிருக்கும் 99 சதவிகித விஷயங்கள் உங்களுக்கானதே அல்ல. அது எதோ ஒருவகையில், உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் சிறுவயதிலிருந்தே திணித்த எண்ணங்கள் தான். அதாவது, அவர்களின் எண்ணங்களை சரிவர நிறைவெற்ற முடியவில்லையே என்றுதான் நீங்கள் வருந்திகொண்டிருக்கிறீர்களே தவிர..அது உண்மையில் உங்களுடைய சொந்த எண்ணமாய் இருப்பதற்கு 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருக்கிறது. இன்னும் ஆழமாய் போவோம்.. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது ஒரு வெறும் வெள்ளைத்தாளாய் தூயமனத்தோடு பிறக்கிறது. அதனால்தான் குழந்தைகளிடம் அவ்வளவு கவர்ச்சி. அப்படி தூயமனத்தோடு பிறக்கும்...

Tuesday, December 27, 2011

அலைபேசி சேவைகளின் பயன்பாடுகள்....! ஒரு உஷார் ரிப்போர்ட்...!

அலைபேசி என்பது இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டதட்ட 70 கோடிக்கும் அதிகமான அலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் எவ்வளவோ நன்மைகள் இருந்தும் இதனால் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமானது. தேவை இல்லாமல் பணம் எடுப்பது. எந்த ஒரு நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதை எப்படி தடுப்பது என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இதை தடுப்பது எப்படி என்பதை விட வந்த பின் காப்பது எப்படி என்பதே பெரும்பாலும் நிறைய பேருக்கு தேவையாய் இருக்கும். ஒவ்வொரு அலைபேசி நிறுவனத்துக்கும் முன்பு தனி தனி வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண் இருந்தது. இப்போது ட்ராய் ஆனது அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ள 121-ம், ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் என்றால்...

Friday, December 23, 2011

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! புதிய விழிப்புணர்வுத் தொடர்..

எமது சிறகடிப்பில் பல்வேறு கோணங்களையும் வாழ்க்கைப் பாடங்களாக்கி அந்த அனுபவச் செறிவுகளை எமது வாசகர்களுக்கு எப்போதும் தெளிவான பார்வைகளாக்கியே வைக்கிறோம். விழிப்புணர்வு என்ற வார்த்தையை உச்சரித்த உடனேயே அது எமக்கு இல்லை மற்றவர்களுக்கு என்று ஒவ்வொரு மனமும் பளீச் சென்று ஒரு நாடகமிட்டுக் கொள்கிறது.அரசியல், ஆன்மீகம், சினிமா, கலை, பொருளாதாரம், கல்வி, வணிகம் என்று எல்லா துறைகளிலுமே விழிப்புணர்வு என்ற ஒன்று நம்மைக் மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை மறந்துவிட்டு சமூக அரசியல் சார்ந்த விடயங்கள் மட்டுமே விழிப்புணர்வு என்று ஒருசாரார் கொடி பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.ஆனால்.....கழுகின் பார்வையில் வாழ்வியல் இயங்கு தன்மையின் எல்லா பாகங்களுமே விழிப்புணர்வு அடைய வேண்டியவையே. சமூக அரசியல் கடந்த வாழ்வியல்தான் சமூகத்திற்கும் அரசியலுக்கும், இன்ன பிற விடயங்களுக்கு எல்லாம்...

Tuesday, December 20, 2011

விழிப்புணர்வு என்னும் வெற்றிச் சிறகு....!

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன. மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான...

Wednesday, December 14, 2011

மலையாளிகளை ஆட்டு மந்தைகளாக்கும் கேரள கேவல அரசியல்...! முல்லைப் பெரியாறு - ஒரு பார்வை!

முல்லைப் பெரியாறு பற்றி முணு முணுக்காத மனிதர்களே தற்போது இருக்க முடியாது. தமிழக, மற்றும் கேரள மக்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் தத்தம் கவனத்தை ஒட்டு மொத்தமாய் இன்று குவித்துப் போட்டிருக்கும் ஒரு இடம் முல்லைப் பெரியாறு. சர்வதேச எல்லைகளில் வேற்று நாட்டோடு எழும் பிரச்சினைகளை எல்லாம் நாம் சர்வ சாதாரணமாக எண்ணி கடந்து சென்று விடலாம்.. ஆனால்... முல்லைப் பெரியாறு ஒரு இனம் இரண்டு மாநிலங்களாய் ஒரு தேசத்துக்குள் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு விடயம். நாமெல்லாம் திராவிட இனம் என்று கூறும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இன்று நீ தமிழன், மலையாளி என்று இரண்டு மாநிலங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உருவான வரலாறு, பென்னி குயிக் என்னும் ஒரு மனிதனின் தொலை நோக்குப் பார்வை, அணையின்...

Monday, December 12, 2011

நவீன உலகின் பெற்றோர்களே....கவனியுங்கள்! ஒரு விழிப்புணர்வு பார்வை!

இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் அதிக வேலை வாய்ப்புக்கள் இருக்கும்ஒரு துறையாக கணிணி சார் பணிகளே இருக்கின்றன. வன், மற்றும் மென்பொருள் வல்லுனர்களின் ஊதியங்களை கணக்கில் கொண்டு பார்த்தோமானால்அது மற்ற துறைகளில் இருப்பவர்களின் சம்பள விகிதகங்களோடு ஒப்பிட்டுபார்க்கவே முடியாத உயரத்தில்தான் இருக்கிறது. இப்படியாக அதிக ஊதியம் பெறும் கணிணி சார்ந்து வேலை செய்பவர்களின்செலவிடும் வேகமும் வாங்கும் திறனும் தன்னிச்சையாக கூடித்தான்போகின்றன். இந்த வாங்கும் திறன் அதிகரிக்கும் போது அது எப்படி அவர்களின்குழந்தைகளைப் பாதிக்கிறது என்ற ஒரு பார்வையை இந்தக் கட்டுரையின் மூலம்பதிகிறோம். கட்டுரைக்குள் செல்வோமா ....!!! இன்றைய கணிணி யுகம் இந்தியாவில் மிக அருமையாக வளர்ந்து கொண்டுஇருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்னும் பலமாக முன்னேறிவருகிறது. வன்-மென் பொறியாளர்களின் சம்பளம்...

Friday, December 09, 2011

அங்கன்வாடிக் கூடங்களின் இன்றைய நிலைமை....! ஒரு விழிப்புணர்வுப் பார்வை...!

காலச்சக்கரத்தின் சுழற்சியில் எல்லாமே மாறி விட்டது. ஒரு காலத்தில் தனியார் ஆங்கில வழிக் கல்வி கற்கும் பள்ளிகளே இல்லாமலிருந்தது. எல்லா பிள்ளைகளும் அரசு பள்ளிகளைச் சார்ந்தே படிக்க வேண்டுமென்ற ஒரு சூழல் இருந்தது. தனியார் பள்ளிகள் மிகப்பெரிய நகரங்களில் அதுவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிலும் ஒரு இடமாக இருந்தது. இப்போது எல்லாமே மாறிப் போய் விட்டது. தடுக்கி விழுந்தால் ஆயிரம் ஆங்கிலப் பள்ளிகள். நடை, உடை, பாவனை எல்லாமே மாறிப் போன பல பிள்ளைகளைப் பார்த்து நமது பிள்ளைகளும் ஆங்கில வழிக் கல்வி கற்கச் சென்று இன்னும் நாகரீகமாய் இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் தவறென்றும் கூற முடியாது. தனியார் பள்ளிகள் வளர்வதற்கு அரசுப் பள்ளிகளின் தரமும், சுற்றுப் புற சுகாதரமும், ஆசிரியர்கள் பிள்ளைகளை எதிர் கொள்ளும் விதமும் மிக முக்கிய காரணமாய் ஆகி...

Tuesday, December 06, 2011

' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி....

நேற்றைய பேட்டியின் தொடர்ச்சி....உங்களின் எதிர்கால திட்டம் என்ன?தமிழ் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சமுக சேவையில் ஆர்வத்தை தோற்றுவிப்பது , ஈடுபட செய்வது , மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்ப்பது, கிராமங்களில் கணினி புரட்சி ஏற்படுத்துவது.நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?பிரச்சனைகள் என்பதை விட விமர்சனங்கள் , குறை சொல்வது என்பதே அதிகம். அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லையே , விமர்சனங்கள் , குறை சொல்வது பற்றி அஞ்சுவதில்லை , கவலைபடுவதில்லை , நாங்கள் செய்யும் நல்ல செயல்களில் மட்டும் நம்பிக்கை வைத்து செயல்படுகிறோம்பயனாளிகளைப் பற்றி எப்படி அறிகிறீர்கள்? முகநூல் நண்பர்கள், நண்பர்கள், மூலம் கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்புக்கு பரிந்துரை செய்வார்கள்,அவர்கள் கோரிகையை கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்பு பரிசீலனை செய்யும் .எந்த அடிப்படையில்உங்களின்...

Sunday, December 04, 2011

'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பேட்டி....!

விழிப்புணர்வுக்காய் ஒரு வலைத்தளத்தை உருவாக்கிய போது என்ன ஒரு உக்கிரம் கொண்டிருந்தோமோ அந்த சீற்றத்தில் கிஞ்சித்தேனும் குறைவின்றி கழுகு தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தடைகளையும், இகழ்ச்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு நேர்மறைப் பார்வைகளோடு அடுத்த தலைமுறையினரின் செழிப்பான வாழ்க்கைக்கு தேவையான அனல் பறக்கும் கருத்துக்களை இடையறாது விதைத்துக் கொண்டே அது செல்கிறது.இளையர்கள் நாளைய நமது தேசத்தை கட்டி அமைக்கப் போகும் சிற்பிகள் என்ற கருத்தில் யாருக்கும் முரண்கள் இருக்க இயலாது. எமது நீண்ட நெடிய பயணத்தின் போது எதிர்பட்ட சகோதரர் சபரி சங்கர் ஒரு வித்தியாசமான இளைஞர் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற ஒரு சமூக நல் இயக்கத்தை நிர்வகித்து, அக்னியாய் உருவான கனவினை தன் நண்பர்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சபரி...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes