Tuesday, December 06, 2011

' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி....


நேற்றைய பேட்டியின் தொடர்ச்சி....


உங்களின் எதிர்கால திட்டம் என்ன?

தமிழ் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சமுக சேவையில் ஆர்வத்தை தோற்றுவிப்பது , ஈடுபட செய்வது , மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்ப்பது, கிராமங்களில் கணினி புரட்சி ஏற்படுத்துவது.

நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?

பிரச்சனைகள் என்பதை விட விமர்சனங்கள் , குறை சொல்வது என்பதே அதிகம். அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லையே , விமர்சனங்கள் , குறை சொல்வது பற்றி அஞ்சுவதில்லை , கவலைபடுவதில்லை , நாங்கள் செய்யும் நல்ல செயல்களில் மட்டும் நம்பிக்கை வைத்து செயல்படுகிறோம்

பயனாளிகளைப் பற்றி எப்படி அறிகிறீர்கள்?

முகநூல் நண்பர்கள், நண்பர்கள், மூலம் கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்புக்கு பரிந்துரை செய்வார்கள்,அவர்கள் கோரிகையை கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்பு பரிசீலனை செய்யும் .

எந்த அடிப்படையில்உங்களின் உதவிகளைச் செய்கிறீர்கள்? எதிர்காலத்தில் அவர்கள் தங்களிடம் உதவி கேட்க கூடாது என்ற அல்லது ஒருவருக்கு காலம் முழுவதும் உதவும் எண்ணமா?

நன்றாக படிக்கும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் -மாணவிகளுக்கு மட்டும் உதவுவோம். அவர்கள் கல்வி தரம் தொடர்ந்து கவனிப்போம். அவர்கள் கல்விக்கு மட்டும் உதவாமல், அவர்களுக்கு பகுதி நேரத்தில் எப்படி சம்பாதிப்பது, சுய தொழில் பயிற்சி தருவோம் , பகுதி நேர வேலை பெற்று தருவோம். அதன் மூலம் அவர்கள் அடுத்த வருட கல்வி கட்டணத்தை கட்ட முடியும்.

ஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகள் மற்றும் (வேலைக்கு செல்ல முடியாமல் நிலையில் உள்ள ) மக்களுக்கு மட்டும் காலம் முழுவதும் உதவுவோம்.

வங்கி கடன் தெரியாத கிராமத்து பள்ளி - கல்லூரி மாணவர்கள் -மாணவிகளுக்கு வங்கி கல்விகடன் பற்றி வகுப்பு எடுப்போம், வங்கி கல்வி கடன் விண்ணப்பதை நிராகரிக்கும் வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் பேசி ஏழை மாணவர்கள் -மாணவிகளுக்கு வங்கி கல்விகடன் பெற்று தருவோம்

சம கால இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளைஞர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்த வேண்டும், இணையத்தில் எத்தனையோ நல்ல வாய்ப்புகள் உள்ளன , இணையத்தில் வெட்டி அரட்டை, செய்வதை விட்டுவிட்டு பயனுள்ளதாக சிந்தித்தால் நிறைய சாதிக்கலாம் . நம் நாட்டிலும் ஆயிரம் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகலாம்

இந்த விசயத்தில் யார் உங்கள் ரோல் மாடல்?

அன்னை தெரேசா,

நம் சமூகம் எத்தகைய ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ஊழலற்ற , லஞ்சமற்ற சமுகமாக , மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்

ஆதரவற்றவர்களைக் கண்டு பேசும் போது அவர்களின் மனோநிலை எப்படியிருக்கும்?

ஆதரவற்றகளுடன் பேசும்போது , நான் அவர்களிடம் சொல்லும் முதல் கோரிக்கை, என்னை உங்கள் நண்பனாக, சகோதரனாக பாருங்கள் என்று, அவர்களிடம் மனம் விட்டு பேசுவேன், பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்பேன். குழந்தைகளிடம் பேசும் போது குழந்தையாக மாறி அவர்களிடம் பேசுவோம். குழந்தைகள் எங்களை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறார்கள்.

இது போன்ற சமூக சேவைகளுக்கு கண்டிப்பாக ஒரு பெரிய தொகை தேவை படும் , உங்களால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடிகிறதா ?

கண்டிப்பாக தேவை படும், பலநேரங்களில் ஏழை மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே கவலை அளிக்கும் விசயம் , அதே நேரத்தில் நாங்கள் அனாவசியமாக நிதி வாங்குவதில்லை(கல்வி கோரிக்கை இல்லாத நேரத்தில் / உதவி தேவை படாத நேரத்தில் ) , தேவைக்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் கூட நிதி வாங்குவதில்லை, ஏழை மாணவர்களின் கல்வி கோரிக்கை பரிசிலிக்கபட்டு முகநூலில் சுவற்றில் போடப்படும், நண்பர்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பபடும் , அதை பார்த்து விருப்பம் இருப்பவர்கள் உதவுவார்கள் ,

நான் தொண்ணூறு சதவிதம் பணம் இல்லாமல் சேவை செய்கிறோம், அனாதை இல்லத்தில் டியூஷன் எடுப்பது, கணினி வகுப்பு எடுப்பது, தற்கொலை எண்ணம் கொண்டோருக்கு கவுன்செலிங் தருவது, ஹச், ஐ , வி - எய்ட்ஸ் விழிப்புணர்வு, பள்ளி படிப்பு முடிதோருக்கு உயர்கல்விக்கு வழி காட்டுவது, முதலியன.

கனவுக்கு செயல் கொடுப்போம் குழு

சபரியோடான பேட்டி முடிந்து விட்டது, ஆனால் ஆழமான அதிர்வுகளை சபரி நமக்குள் உருவாக்கி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இணயத்தளத்தில் தனது முழு பங்களிப்பினை எமது கழுகு விழிப்புணர்வு வலைத்தளத்திற்கு அவர் அளிப்பதாக உறுதியளித்த போது அவரது வார்த்தைகளுக்குப் பின் இருந்த ஆழமான சமூக நல் நோக்கு எத்தகையது என்பதை உணர முடிந்தது.

சமூக சேவை என்பது பொருள் உதவி மட்டுமல்ல நமது அறிவையும், கல்வியையும், அனுபவத்தையும் பகிர்வது என்பதை செம்மையா உணர்ந்து அதை செயல்படுத்தி வரும் சபரி சங்கருக்கு கழுகின் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு...

சபரியும் அவரது கனவுக்கு செயல் கொடுப்போம் குழுவும் வெறுமனே அறியப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல சர்வ நிச்சயமாய் பின்பற்றப்பட வேண்டியவர்களே என்பதை உங்களோடு பகிர்ந்து, எம் தேசத்து ஒவ்வொரு இளையரும் இப்படியான உணர்வினைக் கொண்டிருந்தால் இந்த தேசம் திருவாளர் அப்துல்கலாம் சொன்னது போல 2020ல் அல்ல அதற்கு முன்னரே ஒரு வலுவான வல்லரசாக மிளிரத்தான் செய்யும்...!


கேள்வி வடிவமைப்பு: கழுகு விவாதக் குழு


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)


3 comments:

தனி காட்டு ராஜா said...

Very Good to see this activities Keep it Up :)

நாய் நக்ஸ் said...

Intha pettiyai padikkum anbargal
sirithalavenum---- thangal ninaivugalai virithu parthal
athuve------ SABARIKKU------
kai koduthaal pol.........

saidaiazeez.blogspot.in said...

hats off to you mr sabari!
ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விலகிச்செல்கின்ற குணமுள்ளவர்களின் நடுவிலிருந்து பூத்துள்ள உங்களால் நாங்கள் அனுபவத்தை உணர்ந்தோம்!
நிச்சயம் எங்களின் பங்களிப்பும் உங்களுக்கு கிடைக்கும் நண்பரே!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes