Tuesday, November 29, 2011

மக்களை பலிகடா ஆக்கிய ஜெயலலிதா அரசு....! ஒரு காரசாரமான பார்வை...!

   எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் தன்னை ஒரு அரசியல் சக்தியாக வெளிப்படுத்தி காட்டிக் கொண்ட காலத்திலிருந்து தனக்கென மிகப்பெரிய அடையாளமாக செல்வி ஜெயலலிதா அன்று முதல் இன்று வரை கொண்டிருப்பது பிடிவாத குணம். 1989ல் திமுக வென்று கிட்ட தட்ட 13 வருட கால இடைவெளிக்குப் பிறகு அரியாசனத்தில் ஏறிய போது 27 இடங்களை அதிமுக ஜெ அணி பிடித்த போதுதான் அதிமுக தொண்டர் பலம் ஜானகி எம்.ஜி.ஆரின் பக்கம் இல்லை. அது மீண்டும் ஒரு திரை வசீகரமான ஜெயலலிதாவையே சுற்றியுள்ளது என்று அப்போதைய அரசியல்வாதிகளுக்கே தெரியவந்தது. எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரால் பெரிதும் மதிக்கப்பட்ட முக்கிய தலைவர்களை எல்லாம் எட்டி உதைக்கும் போக்குடனே செயல்பட்டு வந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசியல் அனுபவத்தையும், திராவிட பராம்பரியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. சாதுர்ய...

Monday, November 28, 2011

சுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...? ஒரு அலசல்..!

நம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?? பத்து சதவீதத்தினர் மட்டுமே நினைத்து பார்ப்போம். நாம் வசிக்கும் தெருவில் பத்து நாட்களாய் கழிவு நீர் வடிந்துகொண்டிருக்கிறது. எத்தனை பேர் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்திருப்போம்..?! யாராவது புகார் கொடுப்பார்கள் என்று அந்த இடத்தை விட்டு கடந்து சென்று விடுவோம்.  இதே நமது வீட்டில் இப்படி நடந்தால் விட்டு விடுவோமா..?? நேராக மாநகராட்சி அலுவலகம் சென்று கையோடு ஆட்களை அழைத்து வந்து சரி செய்வோம்.  பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான். பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள்....

Friday, November 25, 2011

இணையத்தில் கல்வி கற்கலாம் வாருங்கள்...

கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல். அரசு மாணாக்கருக்கு இலவச கணனியை வழங்கப் போவதால் இத்திட்டம் தமிழக மாணாக்கருக்குப் மிகுந்த அளவில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். எல்லா வகுப்பு மாணவருக்கும் இத்திட்டம் பயனளிக்கக் கூடியதா என இதைப் பற்றி விரிவான தகவல்களை சொல்லும்படி கேட்டோம். இந்த கல்வி சேவை பற்றி அவரது வார்த்தைகள் இதோ:- திரு. நாகராஜன் ரவி.( CEO ., GLOBAL INSIGHT GROUP):- ஆம் இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன்...

Thursday, November 24, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (24.11.2011)

 பஞ்ச் : 1 தேர்தல்ல நின்னு ஒட்டு கேக்குறப்பவே கஜானா காலியா இருக்குமா? இருக்காதா? இருந்தா என்ன பண்ணுவோம், இல்லங்காட்டி என்ன பண்ணுவோம்னு சொல்லி ஓட்டு கேட்க துப்பு இல்லாத அரசியல் கட்சிகளை கட்டிக்கிட்டு இந்த சனங்க படுற பாட்ட என்னனு சொல்ல? சவுடாலா 'ஆட்ட கொடுப்பேன், மாட்டை கொடுப்பேன், கிரைண்டர் கொடுப்பேன், மிக்சி கொடுப்பேன் லேப் டாப்ப கொடுப்பேன்'னு எதிர்த்து நிக்கிறவங்கள விட ஒரு படி மேல ஏறி வாக்குறுதி கொடுத்த அம்மணி.......திடு திப்புனு சொல்லுது மத்திய அரசு நிதி கொடுக்கல கஜானா காலி...ஏற்கனவே இருந்தவங்க கடன வச்சுட்டு போய்ட்டாங்கன்னு...ஒண்ணு கடன வச்சுட்டு முறையில்லாம ஆண்டுட்டு போய்ட்டாங்கன்னு சட்ட ரீதியா நடவடிக்கை எடுங்க...இல்ல...உங்க நிர்வாகத் திறமையால வேற எங்கனாச்சும் ஏதாச்சும் செஞ்சு சமாளீங்க....ஓட்டு கேக்கவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க...நீங்க...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes