Tuesday, August 31, 2010

எங்கே செல்கிறது உலகம் ?

சுற்றி நிகழும் அக்கிரமங்களை பார்த்து மெளனமாய் எத்தனை காலங்கள்தான் பயணிப்பது...! வெகுண்டு எழும் மானுட கூட்டம் ஒன்று சேர்ந்து திரும்பிப் பார்த்தால் எரிந்தே போய் விடாதா தீமைகள். தம்பி ரமேஷின் தீமைக்கு எதிரான் அக்னி அம்பு இதோ...பற்றியெறியட்டும் மனித மனங்கள்....அதில் அழிந்தே போகட்டும் தீமைகள்..... சென்ற வாரம் அதிர்ச்சியான இரு சம்பவங்கள் படித்தேன் அதுபற்றி இங்கு பார்ப்போம்..... சம்பவம் 1: நெடுங்காலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவர் இறந்தாலே நமக்கு மனசு பதறும்...யாரோ ஒருவரின் தவறால்....அங்க அவயங்கள் சீர்குலைந்து ஒருவர் இறந்தால்....நினைக்கவே நடுங்குகிறது மனது..... சென்னையைச் சேர்ந்த தையல் தொழிலாளியான ராம்நாத்தின் 21 வயது மனைவி குணசுந்தரி இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்...அதற்காக...

Monday, August 30, 2010

பா.ரா அவர்களுடன்..ஒரு கவித்துவமான பேட்டி....!

கழுகு தோழமையோடு கைகளை நமது தோளில் போட்டது...என்ன என்று ஒரு வித அன்போடு பார்த்தோம்....ஒண்ணுமில்லை மக்கா....வாழ்க்கையில் என்ன மிஞ்சப் போகுது அன்பும் பாசமும்தானே மக்கா மிச்சம்...கழுகின் பேச்சிலேயே ஒரு பாசமும் நெகிழ்வும் இருப்பதை கண்டு நாமும் கொஞ்சம் வித்தியாசமான உணர்வு நிலையில்தானிருந்தோம்..... இந்த முறை கடல் கடந்த பயணம் மக்கா....என்று சொல்லி நிறுத்திய கழுகு பேட்டி பேப்பரை நம்மிடம் கொடுத்து விட்டு....சொன்னது ஒரு படைப்பாளியை ஒரு மிகச்சிறந்த மனிதனை எவ்வளவு எளிமையாய் பார்த்தேன் தெரியுமா.... நேற்று இன்று வந்தவர்கள் எல்லாம் காலரை தூக்கிவிட்டு பந்தா காட்டும் இதே உலகத்தில்தான் பா.ரா. அண்ணன் மாதிரி படைப்புலக பிரம்மக்கள் தமக்கும் தமது படைப்புகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத மாதிரி எளிமையாயிருக்கிறார்கள். எல்லாவற்றின் ஆணி வேர் அன்புதான் என்று சொல்லாமல்...

Saturday, August 28, 2010

தன்னம்பிக்கையின் வேர்கள்...

எதிர்பாரத திருப்பங்களை கொண்ட வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது நடைபெறுவதில்லை. ஒரு வித புரிதலோடு வாழ்க்கையை நகர்த்த தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் எல்லோர் கையிலும் அவசியம் இருக்கவேண்டும். தன்னம்பிக்கை பற்றி எழுதிக் கொடுங்கள் என்று நமது தோழர் ஸ்டார்ஜனிடம் கூறினோம்...மகிழ்ச்சியின் மறுபெயரான.....தோழரின் சரவெடி...இதோ...! மனிதனின் வாழ்க்கை பல விசித்திரங்களை கொண்டது. அவன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்கிறான். ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போது எதிர்பாராத புதிய சூழ்நிலையை சந்திப்பது அவசியமாகிறது. உதாரணத்துக்கு இப்போது நாம் ஊருக்கு செல்கிறோம். அந்த பயணத்தில் பாதைமாறி செல்லும்போது நாம் எதிர்பாராத திருப்பத்தை சூழ்நிலையை அனுபவிக்கிறோம். அது நமக்கு நல்ல அனுபவமாகவோ அல்லது கெட்ட அனுபவமாக...

Monday, August 23, 2010

ஈரோடு கதிரின்....EXCLUSIVE பேட்டி...கழுகிற்காக!

அரிமா... அரிமா.. நானோ ஆயிரம் அரிமா...பாடலை முணு முணுத்த படி வந்த கழுகிடம்....என்ன? என்பது போல பார்த்தோம்... ? மீண்டும் ஒரு ஆட்டத்துடன் அருகில் வந்த கழுகு..... இந்த வார பதிவர் பேட்டி யார் தெரியுமா? என்று கேட்டது. அட... சொன்னாதானே தெரியும் என்று.... நாம் இழுக்க...சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த பேட்டிப் பேப்பரை காற்றில் ஆட்டிக் கொண்டு.... மீண்டும் பாட ஆரம்பித்தது...பூம்...பூம்...ரோபோடா..ரோபோடா... கழுகின் ஆட்டத்தை கவனிக்காமல் பாய்ந்து கபளீகரம் செய்தோம் பேப்பரை....பேட்டி...அட நமது கண்கள் விரிய...கத்தினோம்...." கழுகிற்கு சூட ஒரு மசால பால் பார்சல்...."கழுகை நைசாக கழட்டி விட்டு விட்டு...பேட்டிக்குள் மூழ்கினோம்..... " ஈரோடு கதிர் " எண்ணங்களை எழுத்தாக்கி எழுத்துக்களுக்குள் உயிர் பரவவிட்டு வாசிப்பாளனை எழுத்தின் தாளகதிக்கு ஏற்ப ஆட வைத்து பாட வைத்து....ஒரு...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes