Monday, January 31, 2011

கருத்துக்களை பகிர வரவேற்கிறோம்....!


அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது. அதன் பயன் பாடுகள் எந்த அளவு ஆக்கப்பூர்வ நிகழ்வுகளுக்கு பயன் தருகிறதோ  அதோ சதவிகிதத்தில் அழிவிற்கும், கேலிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இயன்ற வரை தொழில் நுட்ப வளர்ச்சியை மனித வள மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மனிதநேயம் செழித்து அதன் மூலம் தெளிவுகள் பிறந்து, மேலோட்டாமன தற்காலிக மாற்றங்கள் அன்றி வேரிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு அது எப்போதும் அழியாத நேர் நோக்கு கொண்ட மனிதர்களை தரவேண்டும் என்பது எமது உள்ளக்கிடக்கை என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.


பிரதிபலன் எதிர்பார்த்து கட்டுரைகள் வெளியிடுவதும், கருத்துரைகள் இடுவதும் என்று முழுக்க முழுக்க ஒரு அசாதாரண போக்கு பதிவுலகில் ஏற்பட்டு பிரச்சினைகளையும், பொழுது போக்குகளையும் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பதிலாக தனிப்பட்ட மனிதர்களை மையப்படுத்தியும், ஆக்கப்பூர்வமான விளைவுகளை தராத வகையிலும் இந்த ஊடகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். கழுகும் பலன்களை எதிர் பார்த்தோ கட்டாய கருத்துரைகளை எதிர்பார்த்தோ களத்தில் இறங்கவில்லை மாறக வாசிப்பாளர்களிடம் 0.01% அளவிலாவது கருத்து மாற்றத்தை உண்டு பண்ண முடியுமா? என்றுதான் தீவரமாக சிந்திக்கிறது.


தனி மரம் தோப்பாகாது, தனி மனிதர்களாக இருந்து யாரும் சாதித்ததாக வரலாறும் இல்லை.... மேலும் நாம் சிந்திக்கும் முன்னெடுத்து செல்லும் கருத்துக்கள் சரியா? தவறா? என்பதை விவாதிக்கவும், புதிய கருத்துக்களை செவி கொண்டு கேட்டு செயல்படுத்தவும்... என்ன வழி? என்ற கழுகின் யோசனைக்கு விடையாக தொடங்கப்பட்டதுதான் கூகிள் கழுகு குழுமம்.


உங்களின் கருத்துக்களைப் பகிருங்கள், மற்றைய புதிய கருத்துக்களை விவாதியுங்கள்...என்ற விண்ணப்பத்தோடு உங்களிடம் இந்த குழுமத்தை சேர்ப்பிக்கிறோம்.  கழுகு குழுமத்தில் இணைய   இந்த சுட்டியை தொடர்பு கொள்ளுங்கள்


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!







8 comments:

எஸ்.கே said...

இணைந்து செயல்படுவோம்!

சமுத்ரா said...

ஆம்..பதிவுலகம் 99 % குப்பை தான்..

மாணவன் said...

கழுகின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..

அனைவரும் ஒன்றுபடுவோம்.....

arasan said...

நிச்சயமா ஒன்றுபடுவோம் கழுகாரே

செல்வா said...

நிச்சயம் இணைந்து செயல்படுவோம் !

அன்பரசன் said...

நிச்சயம் ஒன்றுபடுவோம்..

வினோ said...

ஒன்றுபடுவோம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இணைந்து செயல்படுவோம்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes