Monday, February 28, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......!

ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் நடக்கும் செய்திகளை சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினைச் செய்வதில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது.  சாதாரண வாழ்க்கையின் தகவல் பரிமாற்றத்தில் இன்று நேருக்கு நேராய் நாம் இருந்து வீடியோ சாட் செய்வது வரை வளர்ந்து இருக்கும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஊடகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதும் படி செல்வாவிடம் கூறினோம்....! ஒரு தொடராக வரப்போகும் இதன் முதல் பாகம் இதோ....  இன்றைய சூழலில் ஊடகம் என்ற ஒன்று இல்லாத வாழ்க்கையை நம்மால் சிந்தித்துப் பார்க்க இயலாது.அச்சு வடிவில் இருந்த ஊடகங்கள் நமக்கு வேண்டிய செய்திகளைத் தந்ததோடு நம்மை மகிழ்விக்கவும் செய்தன,...

Saturday, February 19, 2011

மேய்ப்பனில்லா ஆடுகள்.....மாணவ சமுதாயம் பற்றிய ஒரு கழுகு பார்வை!

எல்லா நிகழ்வுகளின் அவலங்கள் தாண்டி அதற்கு ஏதேனும் தீர்வுகள் இருக்குமா? என்று யோசித்தே பழக்கப்பட்ட கழுகின் மூளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் வெளிவரும் ஊடகங்களின் செய்திகள் எல்லாம் ஆச்சர்யத்தையும் வெறுப்பையுமே தூண்டுகின்றன. மனிதர்கள் தவறுகள் செய்யும் இடங்களில் எல்லாம் அவர்களின் மூளைகள் தப்பிப் போகின்றன. ஒன்று  அந்த தவறின் வீரியத்தினை விவரித்துப் பார்க்கும் விசாலம் கொண்ட மூளை மடிப்புகள் அற்றவர்கள் அல்லது வேண்டுமெனே செய்பவர்கள். இந்த இரண்டினையும் சீர்துக்கிப் பார்த்து மனிதர்களின் செயல்களின் நோக்கங்களில் தவறு இருக்கிறதா என்பது ஆராயப்படவேண்டும். நோக்கங்களில் தவறுகள் இருப்பின் அவை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது ஒரு குழுவின் செயல்கள் எந்த விதத்திலும் சமுதாயத்தையோ, அல்லது சுமூகமான வாழ்க்கை ஓட்டத்தையோ சிதைக்கும்...

Friday, February 18, 2011

மாணவர்களை உரசிப்பார்க்கும் கிரிக்கெட் போட்டிகள்......ஒரு அலசல்!

சமுதாயத்தின் சீர்கேடுகள் பற்றியும் அது பற்றிய தெளிவான பார்வையையும் நாம் கொடுக்க வேண்டிய ஒரு சமுதாயம் மாணவ சமுதாயம். இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டை நிர்வகிக்கப் போகும் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தேசத்தின் அங்கமாகப் போகும் வாக்காளர்கள். இவர்களின் மூளைகளில் செழுமையையும் தெளிவையும் புகுத்தினால் வரும் காலங்களில் நேர் நோக்கோடு உண்மைகளை அலசிப் பார்த்து உணரும் தெளிவான ஒரு சமுதாயமாக நாம் இருப்போம். தற்போதைய சூழலை உற்று நோக்கிய கழுகிற்கு கண்ணில் பட்டது மார்ச் ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்வுகளும் அதே நேரத்தில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளும்தான்...! தேர்வுகளை முன்னிறுத்தி இப்படிப்பட்ட போட்டிகள் மாணவக் கண்மணிகளின் கவனத்தை சிதறடிக்குமே என்ற எண்ணத்தை அரசு கைக்கொள்ளுமா? கைக்கொள்ள வேண்டும் ஆனால் செய்யாது..... இதோ இது பற்றிய ஒரு பார்வையை...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes