Saturday, July 30, 2011

ஆரோக்கியமே....முதல் விழிப்புணர்வு..! உடல் வலிகள் பற்றிய பார்வை..!

வாழ்க்கையின் ஒட்டம் பொருளீட்டும் திசையில் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவசரமான வாழ்க்கை முறையில் நாம் உடல் நலனையும் பேண வேண்டியிருக்கிறது என்ற உண்மையினை மறந்து விட்டு...உடலில் வரும் சிறு சிறு வலிகளைக் கூட நாம் அசட்டையாக கவனிக்காமல் விட்டு விடுகிறோம். சாதரணமாய் ஒன்றும் நிகழாது என்ற எண்ணம் எல்லோரிடமு மேலொங்கி இருக்கும்...ஆனால் மிகப்பெரிய விடயங்களின் ஆரம்பம் கவனக் குறைவின்று நாம் கடந்து செல்லும் ஆரம்ப நிலைகள்தான் என்பதனை இக்கட்டுரை வாயிலாக உங்களிடம் பகிர்கிறோம். பொதுவாக  நமக்கு தலைவலி போன்ற வலிகள் வரும் ஒரு மாத்திரை  போடுவோம்...வலி குறைந்ததும் அடுத்து வலி வரும் வரை இதை மறந்துவிடுவோம். ஆனால் எந்த வலி/நோயாக இருந்தாலும் சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்க வேண்டும். நோய் முற்றியபின் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்....

Friday, July 29, 2011

விளையாட்டை அரசியலாக்கும் கேவலம்...... ஒரு விழிப்புணர்வு பார்வை....!

 அரசியலை விளையாட்டாய் ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளையாட்டை அரசியலாய் மாற்றுவது எம்மாத்திரமாய் ஆகி விடப் போகிறது. 100 கோடிக்கும் மேல் மக்கள் வளம் கொண்ட ஒரு தேசத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் எத்தனை தங்கப் பதக்கங்கள் நம்மால் பெறப்படுகிறது? விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுக்காத அரசும், பணம் ஈட்டும் வழிகளில் மட்டும் கவனத்தை செலுத்தும் ஸ்பான்ஸர்களாலும், மிகைப்பட்ட பேர்கள் பொதுப்புத்தியில் ஊறிப் போன விளையாட்டாய் தலைமுறையாய் பார்த்து ரசிக்கா விட்டால் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று நாகரீகத்துக்காக விளையாட்டினை பார்க்கும், பேசும் எம் இளையர்களும் இருக்கும் வரை எல்லா விதமான விளையாட்டுக்களும் எங்கணம் வளரும். கிரிக்கெட் என்னும் அசுரனால நிறைய லாபம் பார்த்த இந்திய வியாபரிகள் அதைக் கட்டிக் கொண்டு அழுவதின்...

Thursday, July 28, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (28.7.2011)

பஞ்ச் 1:சமசீரு மேல அப்டி என்னங்கம்மிணி கோவம் ஒங்களுக்கு? கலிஞர் சார் கொண்டு வந்துட்டார்ன்ற கோவத்துல அவர எதுக்குறதா நினைச்சுகிட்டு மொத்த புள்ளைங்க படிப்பையும் க்ளோஸ் பண்ணிப்போட்டு போயிடுவீங்க போல இருக்கே சிஎம்ங்க...!  உயர் நீதிமன்றத்த மிதிச்சு உச்ச நீதி மன்றத்துக்குப் போனா அவிங்களும் பின்னால எட்டி உதச்சு அடிச்சு வெரட்டி உடனே அமல்படுத்து தாயின்னு ஒரு தீர்ப்ப சொல்லிப் போட்டாங்க..! அல்லாத்துக்கும் பொறவும் சட்ட திருத்த மசோதா அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டே இருக்காம கொஞ்சம் ஈகோவ விட்டுக் கொடுத்துடுங்கம்ணி. புள்ளக் குட்டிய எல்லாம் இன்னமும் ஒரு வெவரமும் தெரியாம முழிச்சுகிட்டு நிக்கிறத  பாத்தா பாவமா தெரியலீங்களா? ஒரு வெவரம் கேள்விப் பட்டோமுங்க நெசந்தானுங்களா....? நம்மளுக்கு வாதாடுன வக்கீலே நீங்க வெவரமில்லாமத்தான் ஆலோசனை...

Wednesday, July 27, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (27.7.2011)

" என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே....." டீக்கடையின் ரேடியோ கடும் சத்தத்தோடு பாடிக் கொண்டிருக்க....யோவ் டீ பட்டறை சத்தத்தை கொறையுமய்யா......அவரு பாட்டுக்கு பாடிட்டு போய்ட்டாரு...நீதி மறைஞ்சு மறைஞ்சு வரது வாடிக்கையா போச்சு...என்று கூறிக் கொண்டே இரண்டு டீ சொல்லிவிட்டு ரிப்போர்ட்டர் ரெங்குவும், கனகுவும் அமர்கிறார்கள்.... ரி.ரெ: என்னயா வெயிலு, கனகு இப்புடி கொளுத்துது ஓய்...! உமக்கு இந்த குளோபல் வார்மிங் பத்தி தெரியுமாய்யா? கனகு: ஆமாய்யா பூமி சூடேறிகிட்டே போகுதாம்....புவி வெப்பமடைதலுக்கு காரணம் ஓசோன் அடுக்குல விழுந்து இருக்குற ஓட்டை... ஓசோன்ல ஓட்டை விழக் காரணம் நாம் பயன் படுத்துற வேதிப் பொருட்கள்ள இருந்து வெளியாகுற கதிரியக்கம்...இதுக்காகத்தான் மரங்களை நடுங்க...மழை நீரை சேமியுங்கன்னு சொல்லி பெரியவங்க எல்லாம் காக்கையா...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes