Friday, October 28, 2011

அத்து மீறும் பிள்ளைகள்.. ஆபத்தான விபத்துக்கள்! கலந்துரையாடலாக ஒரு ரிப்போர்ட்!

சம காலச் சூழல்களை பற்றிய எமது பார்வையை எமது குழும தோழமைகள் (மகளிர்), தங்களின் பார்வையில் அலசும் புதியதொரு பகுதியை எமது மரியாதைக்குரிய வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆழமான, தேவையான விடயங்களை இயல்பாய் பகிரப் போகும்.....இந்த உரையாடலுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்...! மகேஷ்: வாங்க கௌசல்யா எப்டி இருக்கீங்க? முகத்தை பார்த்தா ஏதோ கவலை ரேகை ஓடுற மாதிரி இருக்கே! ஏதும் பிரச்சனையா?  கௌசல்யா: ஆமா மகேஷ்... இந்த ஸ்கூல்ல படிக்குற பிள்ளைங்கள நெனச்சுத்தான்.., நெல்லையில் என் பையன் கூட படிக்கும் பதினைந்து வயதே பையன் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்து விட்டான்பா.  மஹா: அச்சோ! கவலையான விசயம் தான்...சாலை விபத்து எப்படி நடந்தது...? அதைப் பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..   கௌசல்யா: அந்த பையன் பைக் ஓட்டிட்டு போனபோது விபத்து...

Friday, October 21, 2011

வாருங்கள் பதிவர்களே சரித்திரம் படைப்போம்....!

அன்பு சொந்தங்களே .... பொதுவாக காலையில் எழுந்தவுடன் டிவி பேப்பர் என நாம எந்த ஊடகத்தை பார்த்தாலும் ,,,ஒரே விபத்து செய்திதான்......ரயில் விபத்து ..விமான விபத்து ...கப்பல் விபத்து,,இப்படி எத்துனையோ விபத்துக்கள் ....ஆனாமுக்கியமானது சாலை விபத்து... முக்கியமாக இந்த சாலை விபத்துனால நம்மள்ள நிறைய பேர் ,,,எவ்வளவோ பாதிப்பு அடைந்திருப்போம் .....(நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ) இந்த விஷயத்தை சொல்லி மாளாது .....ஒவ்வொருவருக்கும் அவ்வளவு சோகம் இந்த விஷயத்தில் இருக்கும் ....  நாம நேரடியா விஷயத்துக்கு வருவோம் ..... நாட்ல நடக்கிற விபத்துல 90 % விபத்து வாகனத்தால் நடக்குது, அதுவும் அதிலையும் இரவு நடக்கும் விபத்துக்கள் தான் மிக அதிகம் ... Statistics Related To The Road  Accidents In India • 93% of all accidents are caused due to human factors.•...

Wednesday, October 19, 2011

மனமென்பது மாயமா? மனித உள்ளுணர்வு சீரமைப்பு பற்றிய பார்வை...!

கழுகு தோழமைகளே.. வணக்கம். நம் மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும் தீபாவளி பக்கமா வந்திட்டுது..நம்மில் பலர் வேலை செய்கிறோம்,கை நிறைய போனஸ் வரலாம். சுய தொழில் புரிபவர்க்கும் ஓய்வு என்ற வகையில் குடும்பத்தோடு உறவாட ஒதுக்கப்போகிற மகிழ்ச்சியான தருணங்கள் நமக்காக காத்திருக்கின்றன. இந்த வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் உண்மையாகவே மகிழ்வாக இருக்கிறோமா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதன்பின் வரும் நாட்களில் ஏன் அதுபோல் மகிழ்வாக உணர்வதில்லை என்பதையும் சற்று உள்நோக்கிப்பார்ப்பது அவசியமாகத்தான் தெரிகிறது..:) நமது மனதில் வரும் சஞ்சலங்களுக்கு, துன்பங்களுக்கு பல்வேறு காரணம் இருக்கலாம்.பணம், உறவுகள், நட்புகள் குடும்பம் வேலை என காரணம் பலவாக இருந்தாலும் அத்தனையிலும் அடிநாதமாக மறைந்து இருக்கும் முக்கிய காரணத்தைப்பற்றிப்...

Monday, October 17, 2011

இந்தியர்களுக்கான 12 இலக்க அடையாளம்...! ஆதார் எண் பற்றிய ஒரு பார்வை!

ஆதார் என்றால் என்ன? ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்.அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும்.  இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக இந்தியா முழுவதும் செல்லுபடியாகக்கூடியது. ஆதார் பெயர்க்காரணம்:  அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால்  உருவானதுதான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம்.    ஆதாரில் அடங்கியுள்ளவை: இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு, இடது கை மற்றும் வலது  கை விரல்களின் ரேகை,  போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து வைக்கப்படும். தனித்துவம்: இந்த...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes