Wednesday, October 05, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (5.10.2011)


 
 
 
ஆயுதபூஜை விடுமுறை பற்றி பேசிக்கொண்டே டீ கடைக்கு சென்றனர் ரெங்கும் கனகும்... டீ கடை அண்ணாச்சியை காணாமல் தேடினர்..  டீ கடையின் உள்ளே சுத்தம் செய்து கொண்டு இருந்த அண்ணாச்சி வெளியே வர..

கனகு : என்ன அண்ணாச்சி இன்னைக்கு டீ இல்லையா.. என் பொண்டாட்டி தான் டீ போட்டு தர மாட்டுறா நீங்களும் இப்படி ஏமாத்திட்டீங்களே..

அண்ணாச்சி : இன்னைக்கு ஆயுத பூஜை இல்லையா... அதான் கனகு அண்ணே டீ கடை லீவ்... கவலை படாதீங்க நான் பிளாஸ்க்ல உங்களுக்கு டீ போட்டு வைச்சு இருக்கேன்..

ரெங்கு : என்ன கனகு போதுமா..???

கனகு : ம்ம அண்ணாச்சின்னா நம்ம அண்ணாச்சி தான் ... சரி சரி நீ உன் திருவிளையாடலை தொடங்கு... 

ரெங்கு : காந்தி ஜெயந்திக்கு அந்த கடை லீவான்னு ஒரே சந்தேகமா இருந்துச்சு.... அந்த அளவுக்கு பிளாக்ல சரக்கு ஓடுச்சு கனகு..

கனகு : இது எப்பவும் நடக்குறது தானே இப்போ தேர்தல் வேற... சொல்லவா வேணும்..

ரெங்கு : அது மட்டும் இல்லை இப்போ டாஸ்மார்க்ல வருமானம் குறைஞ்சு போச்சாம்..

கனகு : அட என்னப்பா எல்லாவனும் திருந்திட்டானா இல்லை வேற எவனாவது தனி கடைய தொறந்து போட்டானா..!!!

ரெங்கு : அதெல்லாம் ஒன்னும் இல்லை கனகு... இப்போதைக்கு யாரும் தனி கடை போடல... டாஸ்மார்க்ல தனியா ஒரு ட்ராக் ஓட்டுறாங்க. டாஸ்மார்க் ஊழியர்கள் வருமானம் எப்படி குறையுதுன்னு கண்டுபிடிக்க போறாங்களாம். சீக்கிரமே ரெய்டு நடக்கும்ன்னு வேற பேசிக்குறாங்க...

கனகு :  கண்டு பிடிப்பாங்கங்களா...!! எப்படி.... குடிச்சுட்டு போறவங்களை கூப்பிட்டு சரக்கு ஒரிஜினலா இல்ல.. டூப்ளிகேட்டா-ன்னு  கேப்பாங்களா..??

ரெங்கு : சரி அதவிடு..இந்த கேப்டன் சொல்றார் அவர்கட்சி கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினா அவர் கேப்பாராம்..??

கனகு : என்னய்யா சொல்ற அவர் பங்கு கேப்பேன் சொல்லியா ஓட்டு கேக்குறார்..??

ரெங்கு : அட கனகு அவர் லஞ்சம் வாங்கினா தட்டி கேப்பேன் சொல்றார்..

கனகு : கவுன்சிலர் ஆக்கினா தானே ஒருத்தர் கவுன்சிலர் ஆகுறதுக்கு முன்னாடியே லஞ்சம் வாங்கி வேட்பு மனுவை வாபஸ் வாங்கப் போனாரே அவர என்ன செய்யப் போறார்..கேப்டன்..

ரெங்கு : இந்த மாதரி எல்லாம் கேட்டா அவர் நாக்க கடிச்சிட்டு பஞ்ச் டைலாக் பேசுவார் கனகு உனக்கு தேவையா..??

கனகு : அந்த கொடுமைய கேக்க நான் ஆள் இல்லப்பா

ரெங்கு : திமுகவும் காங்கிரஸும் கூட்டணி வைச்சு இருக்காங்க தெரியுமா கனகு..

கனகு : எந்த தேர்தல்லய்யா...?? வர போற பாராளுமன்ற தேர்தல்லய்யா..??

ரெங்கு : இல்லை கணக்கு இந்த உள்ளாட்சி தேர்தல்ல தான்...??

கனகு : என்னய்யா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல .... நைட் அடிச்ச சரக்கு இன்னும் தெளியலையா..??

ரெங்கு : காரைக்குடி நகராட்சில 36 வார்டுல 27 திமுகவும் 9 காங்கிரஸும் கூட்டணி வச்சி கிட்டாங்களாம்.... இப்படின்னு காங்கிரஸ்காராங்களே சொல்றாங்க...  இந்த உடன்பாட்டுக்கு நம்ம ப,சி தான் காரணமாம்..

கனகு : பாருய்யா எப்படி எல்லாம் யோசிக்குறாங்கன்னு.. ஆமா இந்த விஷயம் நம்ம சீமான்க்கு தெரியுமா..??  தெரியலைன்னா யாரவது சொல்லுங்கப்பா அவர் இப்போ சும்மா தான் இருக்கார்..!!

ரெங்கு : பாவம்யா வைகோ தன்னுடைய தாம்பரம் நகராட்சி வேட்பாளர் வாபஸ் வாங்கியது கூட தெரியாம அவருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கார்...

கனகு : அட கொடுமையே.. பிரச்சாரம் பண்ணும போது ஒவ்வொரு அரை மணி நேரமும் வேட்பாளர் இருக்காரான்னு பாத்துக்கணும் போல... பாவம் அவரு நல்ல மனுசன்ய்யா அவங்க கட்சிகாராங்களே இப்படி செய்யலாமா...?

ரெங்கு : ஆமா கனகு ஊழல் செய்யாம ஜெயிலுக்கு போன ஒரே அரசியல்வாதி இவர் தான்.. இவர் மேல கேஸ் வேற போட்டு இருக்காங்க தேர்தல்விதி முறைய மீறிட்டார்ன்னு..

கனகு : பாருய்யா இதுலயே தெரியலையா அவர் ரொம்ப நல்ல மனுசன்னு...??

ரெங்கு : எப்படியா சொல்ற..

கனகு : பின்ன தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் தான் செயல்படுதுன்னு சொல்றாரே... அப்போ அவர் நல்லவர் தானே..??

ரெங்கு : சத்தியமூர்த்தி பவன்ல ஒரு சிறைச்சாலை கட்டலாம் போல... சும்மா சும்மா சிறை வைக்குறாங்க.

கனகு : என்னய்யா சொல்ற நம்ம ப,சி விசயம் பார்த்தியா??

ரெங்கு : இது வேற சிறை கனகு.. இளைஞர் காங்கிரஸ் சிறை வச்சிட்டாங்க... இது எந்த கட்சிலயாவது இப்படி நடந்து இருக்கா..??

கனகு : அப்போ அவங்க கட்சில இருக்க இளைஞர்கள் ஓட்டு எல்லாம் கிடைக்காதா..??

ரெங்கு : அது இருந்தா தானே கிடைக்குறதுக்கு... ரெண்டு நாளா இளைஞர் காங்கிரஸ் சத்திய மூர்த்தி பவன்ல ஒரே ஆர்ப்பாட்டம் நடத்திட்டு இருக்காங்க..

கனகு : அந்த கட்சில அவ்வளவு பேர் இளைஞர்களா..?? நேத்து எங்க வீட்டு பக்கத்தில் ஒரு காங்கிரஸ் மீட்டிங் பார்த்தேன் மொத்தம் 50 பேர் கூட இல்லையே...    

ரெங்கு : ஓஓஓஓ... கனகு உன் மன தைரியத்தை நான் பாராட்டுறேன்... நீ காங்கிரஸ் மீட்டிங் எல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டே .....பார்த்து.... கொஞ்ச நாள்ல நீயும் அந்த கட்சில சேர்ந்திட போற.. அந்த கட்சியில் ஈஸியா கிடைக்குறது..உறுப்பினர் கார்டு மட்டும் தான்....!!

கனகு : யோவ் யோவ் நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா.. நான் டீய குடிச்சிட்டு கிளம்புறேன்...!!



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes