Friday, October 21, 2011

வாருங்கள் பதிவர்களே சரித்திரம் படைப்போம்....!


அன்பு சொந்தங்களே ....



பொதுவாக காலையில் எழுந்தவுடன் டிவி பேப்பர் என நாம எந்த ஊடகத்தை பார்த்தாலும் ,,,ஒரே விபத்து செய்திதான்......ரயில் விபத்து ..விமான விபத்து ...கப்பல் விபத்து,,இப்படி எத்துனையோ விபத்துக்கள் ....ஆனாமுக்கியமானது சாலை விபத்து...




முக்கியமாக இந்த சாலை விபத்துனால நம்மள்ள நிறைய பேர் ,,,எவ்வளவோ பாதிப்பு அடைந்திருப்போம் .....(நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ) இந்த விஷயத்தை சொல்லி மாளாது .....ஒவ்வொருவருக்கும் அவ்வளவு சோகம் இந்த விஷயத்தில் இருக்கும் .... 


நாம நேரடியா விஷயத்துக்கு வருவோம் .....



நாட்ல நடக்கிற விபத்துல 90 % விபத்து வாகனத்தால் நடக்குது, அதுவும் அதிலையும் இரவு நடக்கும் விபத்துக்கள் தான் மிக அதிகம் ...



Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.



இந்த விபத்துக்கு என்ன காரணம் என்று பார்த்தால்வாகனங்களில் உள்ள மிக பிரகாசமான முகப்பு விளக்குகளே (HEAD LIGHTS)..!!! அந்தந்த வாகனங்கள் தாங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள்  தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...





முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???





"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
 
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். ஒரே ஒரு அரசு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும் சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?
பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 
இந்திய அரசாங்கம்,, National Automotive Testing and R AND D Infrastructure Project,,    Ministry of Road Transport & Highways:,,,  Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009,,,Transport Secretaries OF Government of Tamil Nadu,,, 
இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய முடியும்.
அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம். (மின்னஞ்சல் பார்மேட் வேண்டுவோர் கழுகு மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யவும்)




இந்திய அரசாங்கம்:-
National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
Ministry of Road Transport & Highways:-
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in
Transport Secretaries OF Government of Tamil Nadu:-transec@tn.gov.in







 அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...




நம்மால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.
1.GOVT OF INDIA,, NEW DELHI


2.Ministry of Road Transport & Highways,NEW DELHI

3.Transport Secretaries,,  Government of Tamil Nadu,CHENNAI, 600 009.

மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள் ,,தேவையான மெயில் ID-கள் ,,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ..

நன்றி !!!

கழுகிற்கா

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

23 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான விழிப்புணர்வளிக்கும் இடுகை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறப்பான பதிவு, நக்கீரனின் முதல் சீரியஸ் பதிவென்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!

வைகை said...

முன்பை விட இப்போது உள்ள தங்க நாற்கர சாலையில் விபத்து அதிகமாக நடக்கிறது... காரணமாக அதில் பயணம் செய்த என் நண்பர்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்... இப்போது உள்ள சாலைகளில் யூ டேர்ன் எடுக்க நீண்ட தூரம் செல்லவேண்டி இருப்பதால் எதிர் திசையில் அதிகமாக வாகனங்கள் வருகிறதாம்... அதனால்தான் அதிக விபத்து என்று கூறுகிறார்கள்.. இதை கண்கானித்தாலே பாதி விபத்துக்களை குறைக்கலாம்!

இருதயம் said...

// "வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!//

நல்ல யோசனை ... கண்டிப்பாக செய்யலாம் ..

பதிவுக்கு நன்றி

Thozhirkalam Channel said...

நல்ல கருத்துக்களை என்றுமே நம் பதிவர்கள் தவறவிடுவதில்லை.. உங்கள் நோக்கம் நிறைவேறும்.. வாழ்த்துக்கள்

பொதுவாக வாகன ஓட்டிகள் முழுமையாக சாலை விளிப்புணர்வை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

SURYAJEEVA said...

இன்று மாலை என் வலை பதிவில் இதை பகிர்ந்து கொள்கிறேன்..

Madhavan Srinivasagopalan said...

thanks for information
But,
//• 300 % dialing phone.
400 %a drowsiness.// meaning please ?

அருண் பிரசாத் said...

பொதுவாக ஹை பீம்மில் ஹேட் லைட்டை வைத்து இருப்பதும் ஒரு காரணம்.... பகல் போல இரவிலும் வெளிச்சத்துடன் இருக்கும் சென்னை போன்ற மாநகரங்களில் கூட பலர் ஹைபீம்மில் தான் ஹேட் லைட் வைத்து இருப்பது வேதனையே....

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan சொன்னது…
thanks for information
But,
//• 300 % dialing phone.
• 400 %a drowsiness.// meaning please ?///

அது தூக்கம்.. பாதி உறங்கிய நிலை...

அம்பலத்தார் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.இதில் இன்னுமொரு விடயத்தையும் கவனிக்கவேண்டும் வாகனம் ஒளியை செலுத்தும் கோணம் சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்துக்கொள்ளவேண்டும் உயர்ந்தகோணத்தில் ஒளியை செலுத்தினால் எதிரே வருபவருக்கு சிரமமாக இருக்கும்.

Unknown said...

நம்மால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!
பதிவுக்கு நன்றி

Unknown said...

நம்மால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!
பதிவுக்கு நன்றி

எஸ்.கே said...

Nice article!

வெங்கட் said...

// "வாகனங்களின் முகப்பு விளக்கை
தயாரிக்கும்போதே விளக்குகளின்
உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!! //

அருமையான யோசனை..!
வாழ்த்துக்கள்..!

Unknown said...

பதிவுக்கு நன்றி

Anonymous said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...

வாருங்கள் பதிவர்களே சரித்திரம் படைப்போம்...-:)

மாய உலகம் said...

இன்றைய பரபரப்பான வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவாசியமான விழிப்புணர்வு பதிவு.. பகிர்வுக்கு நன்றி...

நாய் நக்ஸ் said...

அன்பர்களே..நண்பர்கள்.".மின்னஞ்சல் பார்மேட்".. கட்டுரையில் கொடுத்தால்
நல்லா இருக்கும் என்று கூறியதால்..இங்கே அந்த பார்மெட் தறபடுகிறது..


Please save us and others from road accidents by introducing an order that, "all head lights should be manufactured or sold with a black circle inside so that it can’t be removed easily. It should not be allowed to be sold without the black circle inside. Take this obligation as very urgent and do the needful".

அன்புடன் இதை பயன்படுத்தி கொள்ளவும் ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல விழிப்புணர்வு பகிர்வு. நன்றி

Rathnavel Natarajan said...

நல்ல பயனுள்ள விழிப்புணர்ச்சியூட்டும் பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

avainaayagan said...

விபத்துக்களுக்கு முகப்பு விளக்கும் ஒரு காரணம். இதற்கு உடனடி நடவடிக்கை தேவைதான். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். (அவைநாயகன் http://avainaayagan.blogspot.com வலைத்தளத்தையும் பாருங்கள்).

'பரிவை' சே.குமார் said...

விழிப்புணர்வளிக்கும் இடுகை.

நல்ல யோசனை. கண்டிப்பாக செய்யலாம்...

பதிவுக்கு நன்றி .

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes