Tuesday, December 27, 2011

அலைபேசி சேவைகளின் பயன்பாடுகள்....! ஒரு உஷார் ரிப்போர்ட்...!


அலைபேசி என்பது இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டதட்ட 70 கோடிக்கும் அதிகமான அலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் எவ்வளவோ நன்மைகள் இருந்தும் இதனால் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமானது. தேவை இல்லாமல் பணம் எடுப்பது. எந்த ஒரு நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதை எப்படி தடுப்பது என்று நிறைய பேருக்கு தெரியவில்லை.

இதை தடுப்பது எப்படி என்பதை விட வந்த பின் காப்பது எப்படி என்பதே பெரும்பாலும் நிறைய பேருக்கு தேவையாய் இருக்கும். ஒவ்வொரு அலைபேசி நிறுவனத்துக்கும் முன்பு தனி தனி வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண் இருந்தது. இப்போது ட்ராய் ஆனது அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ள 121-ம், ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் என்றால் 198-ம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எப்படி பிரித்துப் பார்ப்பது?

இங்கே புகார் என்பது உங்கள் பேலன்ஸ் தொகையில் ஏதேனும் ஒரு காரணத்துக்காக பணம் ஏதேனும் எடுத்து இருந்தால், அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை (நெட்வொர்க் பிரச்சினை, SMS/Call பிரச்சினை, இது போல) என்றால் நாம் 198 ஐ தொடர்பு கொள்ளலாம். அதே சமயம் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும் என்றால் நாம் 121 ஐ தொடர்பு கொள்ள வேண்டும். உதாரணம்: GPRS pack ரீசார்ஜ் செய்ய எவ்வளவு? எனக்கு இதற்கு valdity எவ்வளவு நாள் உள்ளது? என்பது போன்று. அனைத்து நிறுவனப் பயனர்களுக்கும் இது பொதுவானது.

காலர் ட்யூன்/ஹலோ ட்யூன் எனபதற்கு தான் அதிகமாக எடுக்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் இதை ஃபோன் கால் மூலமே ஆக்டிவேட் செய்கின்றன. இதற்கு அடுத்து ஏதேனும் ஒரு சர்வீஸ் Voice Call அல்லது SMS க்கு இதற்கும் Call தான். எனவே முதலில் எந்த எண்ணில் இருந்து இதற்கான அழைப்பு வருகிறது என்று கவனியுங்கள், பெரும்பாலும் ஒரே எண் அல்லது ஒரே எண்ணில் தொடங்கும் பத்து இலக்க நிறுவன எண் அல்லது வேறு ஏதேனும் 6 அல்லது 8 இலக்க எண். வந்தால் உங்கள் முதல் கடமை அதை Cut செய்வது. சில நிறுவனங்கள் Attend செய்த உடனேயே குறிப்பிட்ட சேவையை ஆக்டிவேட் செய்கின்றன. ஆனால் நாம் தொடர்பு கொண்டு கேட்டால் நீங்கள் ஏதேனும் ஒரு எண் Press செய்ததே இதன் காரணம் என்று சொல்வார்கள். எனவே இந்த விஷயத்தில் குறிப்பிட்ட எண்ணை கவனித்து Cut செய்வது நலம்.

இப்போது ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு உங்கள் கணக்கில் இருந்து பணம் தவறுதலாக எடுக்கப்பட்டு இருந்தால் அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம். பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களும் உங்கள் கணக்கில் இவ்வளவு பணம் எடுத்துள்ளோம் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி தான் தெரிவிப்பார்கள். நாமும் கூட எடுத்துள்ள தொகையினை அறிந்து கொள்வது இதன் வாயிலாகத் தான். சிலர் என்ன இது என்ற கோபத்தில் அந்த செய்தியை டெலீட் செய்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வது கூடாது. நம் கணக்கில் பணம் எடுத்துள்ளது தவறாக தான் எனும் பட்சத்தில் இதன் மூலமே நாம் நம் பணத்தை திரும்பப் பெற முடியும். எனவே முதலில் அதை நீக்காமல் வைத்து இருக்கவும். இப்போது எடுத்து இருந்தால் அதை திரும்ப பெறுவது எப்படி அல்லது, அதை Deactivate செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஏர்டெல்லில் மட்டும் இதனை நாம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளாமல் குறிப்பிட்ட வசதியை நிறுத்த முடியும். இதற்கு “STOP” என்று 121 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். உடனடியாக பதில் கிடைக்கும். என்ன வசதி நீங்கள் ஆக்டிவேட் செய்து உள்ளீர்கள் என்று. அதற்கு “STOP SERVICE NAME” என்று அனுப்புவதன் மூலம் நிறுத்த முடியும். (அல்லது உங்களுக்கு என்ன பதில் வருகிறது அதிலேயே அவர்கள் Stop செய்வதற்கான வழியும் சொல்லி இருப்பார்கள்). இதிலும் இல்லாமல் இருந்து பணம் எடுத்து இருந்தால் நீங்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

அதற்கு முன் உங்கள் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளவும், பணம் எடுப்பதற்கு முன் எவ்வளவு இருந்தது என்பதை நினைவு படுத்தி பார்க்கவும். தெரியாவிட்டாலும் பிரச்சினை இல்லை. 198 க்கு அழைத்து இதை சொன்ன பிறகு, அவர்கள் இந்த விஷயத்தை மறுத்தால் உங்களிடம் உள்ள குறுஞ்செய்தி மூலம் அதை அவர்களிடத்து சொல்லலாம்.
சில சமயம் உடனடியாக உங்கள் பணம் உங்கள் கணக்கில் திரும்ப தரப்படும். உடனடி தீர்வு இல்லை என்றால் உங்களுக்கு ஒரு புகார் எண் தரப்படும் அதை வைத்து மீண்டும் அடுத்த முறை இந்த விசயத்துக்கு தொடர்பு கொள்ளும் போது இதை சொல்வதன் மூலம் அவர்கள் ரெகார்ட்களில் இருந்து உடனடியாக கவனிப்பார்கள். இல்லை என்றால் திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அலைபேசி மூலம் இணையம் பயன்படுத்தும் நண்பர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நீங்கள் எந்த செட்டிங்ஸ் ஆக்டிவேட் செய்து இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று. ஒவ்வொரு நிறுவனமும் இரண்டு வகையான செட்டிங்ஸ் வைத்து இருக்கும். அதில் ஒன்று மட்டுமே இலவச வசதி உள்ளதாக இருக்கும். (இணையத்துக்கு என்று தனியாய் ரீசார்ஜ் செய்து இருந்தாலும் அவர்கள் தளத்தை வேறு தளம் செல்வதற்கு கட்டணம் எடுப்பார்கள்). உதாரணம்: ஏர்டெல்- ஏர்டெல் லைவ் மற்றும் மொபைல் ஆஃபிஸ். இதில் மொபைல் ஆஃபிஸ் தான் எல்லா இடத்திலும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருத்தல் அவசியம். இதில் சந்தேகம் இருப்பின் நண்பர்கள் அல்லது 121 அழைத்து கேட்கலாம்.

உங்கள் இணைய கணக்கில் உள்ள மீதத் தொகை, நாட்கள் அறிய:
Airtel - star 121 star 10#
Tata Docomo - star 111 star 1#
Aircel - star 111 star 10#

மற்றவை பற்றி தெரிந்தவர்கள் கீழே பகிரலாம்

அடுத்து சில நிறுவனங்களில் நாம் செய்யும் இ-ரீசார்ஜ் களுக்கும் Auto Activation என்ற முறையில் மாதா மாதம் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பார்கள். எனவே அவ்வாறு எடுத்து இருந்தால் உடனே சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு அதை Deactivate செய்வது உத்தமம். இது தேவை என்றாலும் நமக்கு நட்டமே. 50 ரூபாய் ரீசார்ஜ்க்கும், உங்கள் கணக்கில் எடுக்கப்படும் 50 ரூபாய்க்கும்(ரீசார்ஜ் 65 என்பது உத்தேச மதிப்பு) வித்தியாசம் உள்ளது. இந்த பாதிப்பு Reliance பயன்படுத்துபவர்களுக்கு அதிகம். #அனுபவம்.

சரி எல்லாமே சரியாக உள்ளது ஆனாலும் தொகை திரும்ப வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் நுகர்வோர் கோர்ட்டில் இதனை முறையிடலாம். உங்களுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி போதும் இதற்கு. மேலும் பலத்துக்கு நீங்கள் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசும் போது அதை ரெகார்ட் செய்து கொள்ளலாம். (அந்த வசதி இருந்தால்). இல்லை என்றாலும் பிரச்சினை இல்லை, நீங்கள் தொடர்பு கொண்டு பேசுவதை அவர்களும் ரெகார்ட் செய்வார்கள் எனவே அதை கொண்டும் நீதிமன்றத்தில் முறையிட முடியும். இதனால் நஷ்ட ஈடு, வழக்கு செலவு எல்லாமே குறிப்பிட்ட நிறுவனம் தரும். சமீபத்தில் ரிலையன்ஸ் ஒரு பெண் ஒருவருக்கு இது போன்ற புகாரின் அடிப்படையில் நஷ்ட ஈடு கொடுத்து உள்ளது.

இல்லை உங்களுக்கு அந்த நிறுவனம் பிடிக்கவில்லை வேறு ஒன்றுக்கு மாற வேண்டும் என்றால் MNP (Mobile Number Portability) பயன்படுத்தலாம். இதற்கு PORT”PORT Mobile Number” என்பதை 1900 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உங்களுக்கு ஒரு UniqueUnique Identity Number கிடைக்கும். இப்போது நீங்கள் மாற விரும்பும் அலைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவை அலுவலகத்துக்கு சென்று உங்கள் புகைப்படம், முகவரி சான்று உடன் கொடுக்க வேண்டும்.

இதெல்லாம் முன்னமே தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு தான் இந்தப் பதிவு. நான் பார்த்தவரை இந்த ஒரே சேவை மைய எண்ணை பற்றியே தெரியாதவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதே போல MNPயும் கூட எனவே இதை தெரியாதவர்களிடம் கொண்டு சேருங்கள். MNP பற்றி அறிய இந்தச் சுட்டியை http://ethirneechal.blogspot.com/2011/01/mnp.html அழுத்தி தெரிந்து கொள்ளவும்.


கழுகிற்காக
பலே பிரபு

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

5 comments:

சேலம் தேவா said...

மிக அவசியமான பதிவு பிரபு..!!

saidaiazeez.blogspot.in said...

விவரமான தகவலுடன் வந்துள்ள அருமையான பதிவு. ஆனால் இந்த 121 அல்லது 198 போன்ற எண்களை அழைக்கும் போது காத்திருக்கச் சொல்வது அல்லது இந்த எண்ணை அமுக்கு அந்த எண்ணை அமுக்கு என்று கும்முவது... கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

வெங்கட் said...

சொந்த அனுபவம்...

கஸ்டமர் கேர் விஷயத்தில்
டாடா டோகோமோ தான் நெ.1

கம்ப்ளைண்ட் செய்தால் தவறாக பிடித்த
பணத்தை திருப்பி தருவார்கள்..

ஏர்செல்லில் அவர்களிடம் பேசுவதே
குதிரை கொம்பு..

ஆனால்.. " இப்படி அடிக்கடி தொந்தரவு
பண்ணினா.. கம்பெனி மாறிடுவேன்னு
மிரட்டினா.. நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.! "

நாய் நக்ஸ் said...

தேவையான பதிவு...
ஆனால் PORT-னு மிரட்டினா
உடனே கூப்பிட்டு பேசுகிறார்கள் ....

ரவி சேவியர் said...

ஏர்செல்லில் அவர்களிடம் பேசுவதே
குதிரை கொம்பு..

ஆனால்.. " இப்படி அடிக்கடி தொந்தரவு
பண்ணினா.. கம்பெனி மாறிடுவேன்னு
மிரட்டினா.. நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.! "

மிகவும் உண்மை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes