Thursday, October 06, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (6.10.2011)





பஞ்ச்: 1


சட்ட மன்றத் தேர்தல் கூட்டணி சந்தர்ப்பாவாத கூட்டணி அப்டீன்னு விஜகாந்த் சார் சொல்லியும் ஜெயலலிதா அம்மாவும் சொல்லித் தெரிய வேணாம். ஆட்டோமேட்டிக்கா மக்களுக்கே தெரியும். இதுல விஜகாந்த் சார் பெருமை வேற நேத்து ஒரு ஆள் இன்னிக்கு 29 ஆள்னு வாய்ச்சவடால் வேற, ரெண்டு கட்சிய சேந்த ஆளுகளும் சேந்து போட்ட ஓட்டுல ஜெயிச்சிருக்கோம் அதுக்கு காங்கிரஸ் எதிர்ப்பும், திமுக ஆட்சியின் அதிருப்தியும் சேந்து உதவுனுச்சுன்னு இவுங்களுக்கு எல்லாம் தெரியும இல்லை தெரியாத மாதிரி ஆக்டிங்கா?

தனிப்பட்ட முறையில சினிமாவுல நடிச்சத தவிர வேறு எதை அரசியல் அடையாளமா விஜயகாந்துக்கு சொல்ல முடியும்? கொஞ்சம் அடக்கி வாசிங்க விஜகாந்த் சார் குறைஞ்ச பட்சம் உள்ளாட்சித் தேர்தல் முடியுற வரைக்கும்...முதல்வர் சீட் ரொம்ப பக்கத்துல இருக்குற மாதிரி நீங்க நினைச்சுகிட்டு இருக்கறது தப்புன்னு மக்கள் சீக்கிரம் புரிய வைப்பாங்க!

பஞ்ச்: 2

போன ஆட்சியில மின்வெட்டுக்கு காரணம் திமுக அரசுன்னு குத்தம் சொன்ன மக்கள் இப்போ தொடரும் அதே மின்வெட்டுக்கு அதிமுக அரசுதான் காரணம்னு சொல்லிகிட்டு இருக்காங்க, போன ஆட்சியில இது அதிமுக அரசியல் செய்ய உதவுனுச்சு ஆனா இப்போ திமுகவுக்கு  குத்திக்காட்ட உதவுது.

ஆக மொத்தம் மொத்தமா மின்வெட்ட போக்குறதுக்கு என்ன வழின்னு தெரியாம விழி பிதுங்கி நிக்குது தற்போதைய அதிமுக அரசு. வெளிச்சந்தையில மின்சாரத்த வாங்கப் போறதா அறிவிச்சு இருக்குற அரசு, தெலுங்கான போராட்டதுனால ஆந்திராவுல இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரமும், மழை பாதிப்பால ஒரிசாவுல இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரமும் கிடைக்கல அதனால 1026 மெகாவாட் மின்சாரம் குறைவா கிடைக்குதுன்னு மூக்கை சிந்த ஆரம்பிச்சு இருக்கு.மின்சாரப் பற்றக் குறைய நிரந்தரமா தீத்து வச்சுதுன்னா கண்டிப்பா அது மக்கள் மனசுல ஏத்தி வச்ச விளக்கா அடுத்த எலக்சன்ல கூட ஜெயிக்கிறதுக்கு உதவும்...

பார்க்கலாம்...அடிப்படை மக்கள் பிரச்சினையை ஆளும் அதிமுக அரசு எப்டி சமாளிக்குதுன்னு!

பஞ்ச்: 3

பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீருக்குள்ள 11 ஆயிரம் சீனப் பாதுக்காப்பு படையினர் முகாமிட்டு இருகாங்களாம். பாகிஸ்தான் அங்க நிறைய கட்டிட வேலைகள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காம் அதுக்கு உதவ சீனா தன்னோட பொறியாளர்களை அனுப்பி வச்சு இருக்காம். அந்த பொறியாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பா பாதுகாப்பு படை வீரர்களையும் அனுப்பி இருக்காம்.

நம்மாளுங்க எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டே இருப்பாங்க. ஏன்னா நாட்டுக்குள்ள இவனுக இருக்க முடியாம பண்ணி வச்ச வேலைய பாக்குறதுக்கே நேரம் பத்தலையே....! ராச தந்திரம், ராச தந்திரம்னு சொல்லி மேல இருக்குன சீனாக்காரனயும் கவனிக்கிறது இல்லை, பக்குதுல இருக்குற பாகிஸ்தான் காரனையும் கவனிக்கீறது இல்லை, காலுக்கு கீழ இருக்க இலங்கைகாரனையும் வளத்து விட்டாச்சு...!  மூணு பேரு சுத்தி வளச்சு  அடிக்கப் போறானுக அப்ப என்ன பண்ணும் நம்ம பாதுகாப்பு அமைச்சகம்னு பாக்கணும்...?

கொசுறு: சிதம்பரம் ஐயா தேக்கடியில இருக்காப்ல, ஒய்வெடுத்துகிட்டு...!

பஞ்ச்: 4

திராவிட  மற்றும் தேசிய கட்சிகளோடு இனி கூட்டு இல்லைன்னு ராமதாஸ் ஐயா சொல்லியிருக்கிறத பாக்கும் போதும் கொஞ்சம் ஓவராவே புல்லரிக்குது. மக்கள் மத்தியில பாட்டாளி மக்கள் கட்சின்ற ஒரு கட்சிக்கு நம்பிக்கை வர இன்னும் அதிக நாள் ஆகும் ராமதாஸ் சார். அதோட இல்லாம வட மாவட்டங்கள்ள குறிப்பிட்ட சாதிய  வச்சு நீங்க பண்ற அரசியல விட்டு கொஞ்சம் வெளில வர்றதோட மட்டும் இல்லாம மொத்த தமிழகத்தையும் நீங்க கவர் பண்ண தென் மாவட்டத்துக்கு எல்லாம் அடிக்கடி வரணும்...

ஏதோ ஒரு புதிய மாற்றுக் கட்சி வராதன்னு துடிச்சுகிட்டு இருக்குற தமிழனுக்கு யாராச்சும் தீனி போட மாட்டங்களான்ற ஆசை இருக்குற வரைக்கும் உங்களுக்கு சான்ஸ் இருக்கு பட்... அடுத்த எலக்சன்ல நீங்க திமுக கூடவோ அதிமுக கூடவோ கூட்டு வைக்காம இருக்கணும்? அம்புட்டுதேன்..!

பஞ்ச்: 5

அதாவது ஊழ்வினைப் பயன் அப்டீன்றது ஏதோ மறு ஜென்மத்துல வந்து உறுத்தும் அப்டீன்ற மாதிரி எல்லோரும் நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனா அப்டி எல்லாம் இல்லை உடனே உடனே உறுத்தும்ன்றதுக்கு சாட்சியா காங்கிரஸ் கட்சிய நாம சொல்லலாம்.

திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளரா சுஜாதான்னு ஒரு அம்மாவ தங்கபாலு அறிவிச்சு முடிச்ச் உடனே அந்தம்மா கேக்குதாம் யார கேட்டு என்ன அறிவிச்ச? நான் தான் விருப்ப மனுவே கொடுக்கலையேன்னு...! சரின்னு சொல்லிட்டு இப்போ விஜயா சேகர்னு ஒரு அம்மாவ இப்போ வேட்பாளரா அறிவிச்சு நிறுத்தி இருக்காங்க..., இதுல என்ன காமெடின்னா இந்த அம்மாவும் விருப்ப மனு கொடுக்கலையாம்...

ஆக மொத்தம் விபரம் தெரிஞ்ச காங்கிரஸ்காரங்களே இந்த தேர்தல் விட்டு ஒதுங்கி இருக்கறது நல்லதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல...ஆனா தங்கபாலு சார் மட்டும் கண்ண மூடுனா மீண்டும் காமரஜார் ஆட்சியை அமைப்போம்ன்ற காங்கிரசோட தார்மீக கனவ கண்டுகிட்டு இருகாரு போலா...!

கொசுறு: ஆமா...சத்தியமூர்த்தி பவன்ல ஏதோ சண்டையாமே....தங்ஸ் சார்?



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

1 comments:

ஜோசப் இஸ்ரேல் said...

அரசியலில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தோலுரித்து காடும் பதிவு

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes