Wednesday, January 11, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (11.1.2012)




கனகும் ரெங்குவும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டு டீ கடை நோக்கி சென்றனர்..

கனகு : என்ன ரெங்கு.. பொங்கலுக்கு ரெடியா..?? என்ன பண்ண போறே..?

ரெங்கு : என்னப்பா ரெடியா....? எப்பயும் போல டிவி முன்னாடி தான் உட்கார போறேன் ... இப்போ எந்திரன் வேற போட போறாங்க.. சொல்லவா வேணும்.. ஆமா நீ என்ன பண்ண போற..?

கனகு : நாங்க எல்லாம் சிங்கம்.. எங்கடா காளை இருக்கும் அத அடக்கலாம் பார்த்திட்டு இருப்பேன்..

ரெங்கு : நமக்கு அதெல்லாம் சரி பட்டு வராதுப்பா...!!

கனகு : ஆமா ஆமா உன்னால பொண்டாட்டியே அடக்க முடியல எங்க காளைய அடக்கப் போற..!

ரெங்கு : யோவ் போய்யா நான் போறேன்...

கனகு : சரி சரி கோவப் படாம நியூஸ் சொல்லு...

ரெங்கு : அப்பா சத்தியம் வாங்குவோம்னு சொல்றார்... பையன் சத்தியம் பண்றார்..

கனகு : யாரு அன்புமணியா..?? என்ன சத்தியம் பண்றார்... நாளை முதல்....

ரெங்கு : வாயில அடி வாயில அடி அன்பு மணி இல்ல சின்ன அய்யா...அப்படின்னு சொல்லுய்யா.

கனகு : யார் வாயில அடிக்க சொல்ற என்னய்யா சின்ன அய்யாவையா..விளக்கமா சொல்லு ரெங்கு..  ஆமா எதுக்கு அவர் சத்தியம் பண்ணார் ஏதாவது ரகசியமா..??


ரெங்கு :  அட பாவி கனகு உன் வாயில தான்... இனி எந்த காரணத்திற்காகவும் எந்த கட்சியுடன் கூட்டணி வைச்சுக்க மாட்டாங்களாம்.. இது சத்தியம் சத்தியம் சத்தியம் அடிச்சு சொல்லி இருக்காரு.. நம்ம சின்ன அய்யா..

கனகு : எத அடிச்சிட்டு சொன்னாரு.. தெளிவா தான் சொன்னாரா ரெங்கு.. எதுக்கும் ஒரு தடவ அவர்ட்ட கேட்டு பாரு... விடிஞ்சா என்ன சொல்வாரோ போய்யா.. என்ன அரசியல் நடத்துறாங்க இவங்க... 2016லயாவது ஆட்சியை நாங்க தான் பிடிப்போம்னு காலத்தை ஓட்ட வேண்டியது தான்...

ரெங்கு : சரியா சொல்ற கனகு.. இந்த செய்தி தெரியுமா உனக்கு...  இப்போ ஒரு பத்திரிக்கைய கொளுத்தி போட்டாங்களே அந்த பத்திரிக்கைய ஒபாமா பாராட்டினாராம்...

கனகு : என்னய்யா சொல்ற.. ஒரு வேளை "பீப்" சொன்னதாலே பாராட்டினாரோ..??

ரெங்கு : கனகு நீ வெளிய நடமாட வேணாமா.. இந்த வார்த்தைய சொல்லாதே... அவ்வளவு தான் நீ..  கிறிஸ்துமஸ் பற்றி ஒரு கட்டுரை அந்த பத்திரிகையில் வந்ததாம்.. அதை படிச்சு தான் பாராட்டினாராம் கனகு..

கனகு : யோவ் நீ சர்ச்சை இல்லாத நியூஸ் சொல்லுய்யா என் வாய் சும்மா இருக்காது.. நான் வரல அவர் பாராட்டினா என்ன பாரட்டலன்னா என்ன போ.. எனக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே இல்ல..

ரெங்கு : அட டா உனக்கு பாதுகாப்பா..??? பாதுகாப்பு அமைச்சகத்துக்கே பாதுகாப்பு இல்ல இதுல உனக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்ற..

கனகு : என்னய்யா சொல்ற எனக்கு புரியல..

ரெங்கு : மத்திய உள்துறை அமைச்சகத்தில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், மானிட்டர் எல்லாம் திருட்டு போகுதாம்.. அதுவும் இது இரண்டாவது முறையாம்... வெளிநாட்டுக்காரனுங்க நம்மைப்பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிச்சுக்கிட்டு இருப்பாய்ங்க...இந்தியா வல்லரசுன்னு நாம சொன்னத நினைச்சு...

ம்ம்ம்.....உள்துறை அமைச்சர் அலுவலகம் அங்கேயே பாதுகாப்பு இல்ல... உன்ன மாதரி சாதாரண மக்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கும்..

கனகு : இதான்யா வல்லரசு ஆக போற இந்தியா...எப்படி வளர்றோம் நாங்க..  சரி சரி சிதம்பரம் காணாம போகமா இருந்தா சரிதான்.... !!!

ரெங்கு : திமுக பொது குழு கூட போகுதாம்.. தலைவர் ஏதாவது புதுசா சொல்வாரா இல்ல.. இன்னும் கூட்டணியில் தொடர்கிறோம் சொல்வாரா.. ?? கனகு..

கனகு :  உனக்கும் வேற வேலை இல்ல.. உங்க தலைவருக்கும் வேற வேலை இல்ல..  டீ குடிக்கணும் நினைச்சா நம்ம கூட வர சொல்லு அதுக்காக பொது குழுவை எல்லாம் கூட்டி நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்கார்..

ரெங்கு : இல்ல கனகு சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூடுதே.. ஏதாவது புதுசா சொல்வார்..!

கனகு : அவர் ஒண்ணும் புதுசா சொல்ல போறது இல்ல.. கூட்டணி இல்லைன்னு சொன்னா ஏன் மத்திய அமைச்சர் பதவி கேள்வி வரும்....  அப்பறம்.அப்பா என்ன உள்ள தள்ள பாக்குறியான்னு...  அஞ்சா நெஞ்சன் பஞ்சா பறந்து பயந்து வருவார்...

ரெங்கு : அப்போ அவர் டீ குடிக்க தான் பொது குழுவ கூட்டுறார்... அப்படி தானே..??

கனகு : இல்லையா பின்ன... அடுத்த பொது குழு கூடும் போது கொஞ்சம் சக்கரை அதிகமா போட சொல்லுப்பா சொல்வார் பார்..  நீ என்ன நியூஸ் சொல்ற ரெங்கு நான் சொல்றேன் பார் நியூஸ் இப்போ

ரெங்கு : அட பார்றா என்ன நியூஸ் சொல்லு பார்ப்போம்..

கனகு : கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை.. தலைவர ரத்தத்தோடு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டாங்க நம்ம மக்கள்..

ரெங்கு : அட பாவிங்களா இது எந்த ஊர்ல நடந்த கதையா...ரொம்ப டெர்ரர்ரா தான்ய்யா இருக்காங்க

கனகு : கிருஷ்ணகிரி மாவட்டத்துல தான் இப்படி நடந்து இருக்கு.. ஏற்கனவே ரோடு போடுறேன் சொல்லி பஞ்சாயத்து தலைவராகி இருக்காரு.. அப்போ ரோடு போடாம டிமிக்கி கொடுத்துட்டார்.. இப்போ மறுபடி அவர் மனைவிய பஞ்சாயாத்து தலைவராக்கி இருக்கார்.. ரோடு போடுறேன் சொல்லி... நீ இன்னுமா ரோடு போடுறேன்னு மூக்குலே குத்தி இருக்காங்க நம்ம மக்கள்..

ரெங்கு : செம இன்ரஸ்டிங்கா இருக்குப்பா மேல சொல்லு

கனகு : நான் என்ன கதையா சொல்றேன்..  ராஸ்கல்.. இப்படி ஒவ்வொரு ஊரிலும் மூக்குல குத்தி குருதி வெளிய வந்தா தான் வாக்குறுதி நியாபகம் வரும் ..

ரெங்கு : வன்முறைய தூண்டிவிடாதய்யா உள்ள தூக்கி போட்டுட போறாங்க.. வா டீ குடிச்சிட்டு கிளம்புவோம்...

னகு : யார எங்களயா...?? நாங்க அப்போவே அந்த மாதிரி.. இப்போ சொல்லவா வேணும்..   அண்ணாச்சி டீ..ய போடுங்க...!!


   கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes