Thursday, January 19, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (19.1.2012)




பஞ்ச் : 1

தமிழகத்துல ஆட்சி மாற்றம் நடந்ததுக்கு காரணம் நடராசன் ஐயாதானுங்களாமே...?  அவரு மனசு வச்சிதான் கலைஞர் கூட போன வருசம் இருந்து இருப்பாருன்னு நினைக்கிறேன். யாருக்கும் கட்டுப்படாத ஒரு தலிவராம் நடராசரு... ஆனா ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் பயப்புடுவாராம்...ஒண்ணு நம்ம பழ. நெடுமாறன் ஐயா..... ரெண்டாவது அவுரு கல்யாணம் கட்டுன அம்மிணி...

தஞ்சாவூர்ல கொதி கொதின்னு கொதிச்சு இருக்காரு நடராசரு, ரெண்டு உலக்கு அரிசிய போட்ருந்தா கொதிச்ச கொதிப்புல பொங்கி சாப்டு இருக்கலாம் போலருக்கே...! அம்மாவுக்கு பூசாரிங்க எல்லாம் ஒண்ணு கூடி மந்திரிச்ச மந்திரிப்புல லவக்குனு ஒடன் பொறவா சகோதரிய வெளிய அனுப்பிடுச்சு.. இப்போ நடராசன் & கோ தைய தக்க தைய தக்கானு வெறி கொண்ட மாறி குதிக்க ஆரம்பிச்சுடுச்சு...

தானை தலைவர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழகத்தின் தலையெழுத்துதான்.. மாறவே மாட்டேங்குது...? எந்த சாமி குத்தமோ...??!!!!! 
பஞ்ச் : 2
துக்ளக் ஆண்டுவிழாவுல சோ சார் பண்ணியிருக்கிற காமெடிய நினைச்சா சிப்பு சிப்பாதான் வருது...

கையெல்லாம் இரத்தக்கறையோட ஒரு மனுசன் அதை டெட்டாயில் போட்டு கழுவிட்டு, சோப்பு போட்டு கழுவிட்டு அதுல சோத்த அள்ளி எல்லோருக்கும் போட்டு போட்டு, வாரி வழங்கி தன்ன கர்ண பிரபுன்னு காட்டிக்க நினைச்சானாம்....ஆனா அவன் எம்புட்டுதான் உதவி செஞ்சாலும் புத்திசாலியா இருந்தாலும் கொலைகாரப் பயடா இவன் அப்டீங்கறது எப்படி மறந்து போகும்?  இருக்கற கட்சியோட கொள்கை இந்துத்துவான்ற ஒரு கேவலமான மதவாதம்.அப்படி இருக்கையில மோடி நல்லவரா இருக்கட்டும் வல்லவரா இருக்கட்டும், எப்புடி வேணா இருக்கட்டும்...இருக்குற எடம் சாக்கடையாச்சே....அவர பிரதமர் வேட்பாளர் ஆக்கணும்னு சோ அண்ணாச்சி அத்துவானிக்கி ரெக்கமண்டேசன்....

ஒருவேளை மதவாத கட்சின்னு நினைச்சு யாரும் ஆதரவு தெரிவிக்கலேன்னா (அது என்ன ஒருவேளை...அது மதவாத கட்சிதானே சோ....சார்...???!!!!) அப்போ டாக்டர். புரட்சித்தலைவி, அம்மா. செ. செயலலிதாவ இந்திய பிரதமராக்க உதவி செய்யணும்ன்னு அவர் சொல்லியிருக்காரு...

தமிழ்நாட்ல ஏற்கெனவே 3 மணி நேரமா இருந்த மின்வெட்ட இப்போ 5 மணி நேரமா அம்மா மாத்தி சாதனை செஞ்ச மாதிரி, தலைமைச் செயலகத்த ஆஸ்பத்திரியா மாத்துன மாதிரி, லைப்ரேரிய குழந்தைகள் மருத்துவமனையா மாத்த சட்டம் போட்ட மாதிரி....பலப்பல அஜால் குஜால் திட்டங்கள செஞ்சி இந்தியா முழுக்க மாத்தணும்னு சோ சார் ஆசைப்படுறாரு போல....

நடக்க அலுப்பு பட்டுகிட்டு சித்தப்பன் வீட்ல பொண்ணு கேட்டானாம்ன்ற கதையாவுல்ல இருக்கு...???!!!!

பஞ்ச் : 3

எஸ்.எம். கிருஷ்ணாவ அனுப்பி தமிழர்கள் புனர்வாழ்வுக்கு இந்திய மகா தேசம் ரொம்பவே ஒதவுறதா காட்டிகிட முடிவு பண்ணி ஐயாவ இத்தாலிய தேசிய (இந்திய தேசியம் எல்லாம் போச்சு சாமி..)காங்கிரஸ்  அப்போ அப்போ ஒரு குத்தாட்டம் போடும்...! கிருஷ்ணா இந்தியாவுல இருந்து இலங்கைக்கு போற வரைக்கும் நீயூஸ் புளீச் புளீச்னு ப்ளாஷ் ஆகும்.. 

துரை அங்க போயி எறங்குன உடனே.. ஒண்ணியும் தெரியாது....! ராசபக்சேய சந்திச்சு கைய குலுக்கிகிட்டு பப்பரப்பான்னு சிரிச்சுக்கிட்டு ஒரு போட்டாவ போடுவாய்ங்க பேப்பர்ல...அம்புட்டுதான்...

என்னா தமிழர்களுக்கு வாழ்க்கை கொடுத்தாய்ங்க? எத்தனை வீடு கொடுத்தாய்ங்க? மக்கள் எப்படி இருக்காங்க? ஊரு எப்படி இருக்கு? அங்க இருக்க புள்ளக் குட்டிய எல்லாம் படிக்கிறதுக்கு என்ன ஏற்பாடுன்னு எல்லாம் ஒண்ணியும் சொல்ல மாட்டாய்ங்க.. தமிழர்கள் இருக்குற எடத்துக்கு சர்வதேச பத்திரிக்கையாளர்களயும் உள்ள விடுறது கிடையாது...

இவிங்க நடத்துற கூத்த நாம பாத்துட்டு நல்ல நாடகம்டான்னு உச்சு கொட்டணும்...எல்லாம் காலக் கொடுமை...!

தைரியம் இருந்தா சானல் 4 தொலைகாட்சிய தமிழர்கள் இருக்கும் ஏரியாக்குள்ள விடுவானா இந்த ராஜபக்சே..? அதை ஆதரிக்குமா இந்திய தேசிய (ஹி ஹி ஹி) ஆளும் காங்கிரஸ்...?
பஞ்ச் : 4

இயற்கைய தவிர வேறு யாராலும் கலைஞர் ஐயாவ அசைக்க முடியாது, அந்த ஆண்டவன தவிர வேறு யாராலயும் செயலலிதா அம்மாவ அசைக்க முடியாது, உலகமே எதுத்து நின்னாலும் சோனியா காங்கிரச அசைக்க முடியாது, உயிரே போனாலும் பா.ஜ.க-வ அசைக்க முடியாது, விளையாட்டுக்கு கூட விஜயகாந்த அசைக்க முடியாது....ஏன் இன்னும் சொல்லப் போனா தலை கீழ நின்னாலும் ராமதாஸ் ஐயாவ அசைக்க முடியாது...

இது எல்லாம் ஏன் தெரியுமா..?

எவன் அசைச்சாலும் அசைஞ்சு அசைஞ்சு கொடுத்துட்டு, எல்லா கட்சியிலயும் இருக்குற அயோக்கியத்தனங்கள தங்களோட வசதிக்காகவும் வாழ்க்கை சூழ்நிலைக்காகவும் வசதியா மறந்துட்டு வாழ்க.....ஒழிக கோசம் போடுறானே தொண்டன் அவன் இருக்கறதாலதான்....

ஐயாவும், அம்மாவும் அடிச்ச கொள்ளைகள் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு ரெண்டு கட்சியில இருக்க ஆளுகளுக்கும் தெரியும். தெரிஞ்சே கொடி புடிக்க,கோஷம் போட நீங்க இருக்கும் போது......

எந்த அரசியல்வாதியையும் யாராலையும் அசைக்கவே முடியாதுதான் சாமி...!


பஞ்ச் : 5
  
ஊரை அடிச்சு கொளுத்திப்புட்டு, புண்ணுக்கு மருந்து நாங்க கொடுக்குறோம்னு ஒருத்தன் சொல்றான்னு வச்சுக்கோங்க நாம அதுக்கு நன்றி சொல்வோமா இல்லை ஏண்டா எங்களை நீ அடிச்சன்னு கேப்போமா?

ஈழத்துல இருக்குற தமிழர்கள எல்லாம் கொத்து கொத்தா கொன்னு அழிச்சப்ப கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தா கூட சரி போடா போய்த்தொலைன்னு விட்டுடலாம்...ஆனா அப்படி கொல்றதுக்கு உடந்தையாவும் இருந்துட்டு இப்போ இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு ஒதவும்னு சொல்றவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லங்கறது நமக்குத் தெரியும்....

ஆனா.. தமிழர்களையும் அவனோட புத்தியையும் எவ்ளோ கேவலமா கணிச்சு, முட்டாப்பயலுகளா நினைக்கிறான் பாருங்க..அதுதான் கொடுமையிலும் கொடுமை...!


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

1 comments:

நாய் நக்ஸ் said...

கால கொடுமைகள்...
நாம் தமிழர்கள்....
சகித்து தான் ஆகவேண்டும்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes