Thursday, January 12, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (12.1.2012)



பஞ்ச் :1

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் படுகொலை செய்யப்பட்டதின் எதிரொலியாய் அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடுமையான வன்முறையை தூத்துக்குடி நகரம் சந்தித்து இருக்கிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் எந்த நியாயத்திற்கு வந்தாலும் அது தவறுதான்.

தனது தலைவர் கொல்லப்பட்டதற்கு தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பிடித்து அடிப்பதும், கடைகளை கொளுத்துவதும், அலுவலகங்களை அடித்து நொறுக்குவதும் எப்படி தீர்வாகும்? மிக மிக நுண்ணிய உணர்வுகளை தூண்டி விடக்கூடிய பிரச்சினைதான் சாதிப் பிரச்சினை...

என் நியாயம் உன் நியாயம் என்று பேசுவதை விட்டு விட்டு....மனிதநேயத்தோடு மக்கள் வாழ தகுந்த சூழலை அரசு மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் உருவாக்க வேண்டும்..! கொலைவெறியாட்டம் ஆடும் ரவுடிகளை தடுக்க முயலுகையில் துப்பாக்கி சூடு நடத்தும் போலிசாரையும் நாம் தான் திட்டுகிறோம்....சாதாரண முறையில் தடுக்க முயன்றால் போலீசுகாரன் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறான்டா என்றும் கூறுகிறோம்....!

வன்முறையில்லாத சமுதாயத்தை ஒரு அரசால் மட்டும் படைக்க முடியாது...மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
 
பஞ்ச் :2

நக்கீரன் கோவாலுவோட வரலாற எடுத்து பாத்தீங்கன்னா மூணு இல்லை நாலு லைன்ல அது முடிஞ்சு போயிடும். அம்மாவை எதுத்து காரசாரமா எப்பவும் எழுதி அடிவாங்குற மாதிரி கைது பண்ணி உள்ள போற மாதிரி போயி பத்திரிக்கையோட சர்க்குலேசன ஏத்துற வேலைய அம்மா ஆட்சியில தவறாம செய்வாப்ல...,

அப்புறம் வீரப்பன வைச்சு நல்லா காசு பாத்தாப்ல, பாரிஸ்ல பஸ்ல ஏறி தி.நகர்ல எறங்கி ரெங்கநாதன் தெருவல சரவணா ஸ்டோர்ல போயி துணி எடுக்குறது கணக்கா பொசுக்கு பொசுக்குனு இவுரு போயி காட்டுல பேட்டி எடுத்துட்டு வந்தப்ப இந்தியாவோட இறையாண்மையும் போலிஸியும் தெருவுல பலிங்கி வெளையாடிகிட்டு இருந்துச்சு..., அம்மா ஆட்சியில வீரப்பன கொன்னு போட்டதோட நக்கீரனோட பிசினசையும் சேத்தே கொண்டு புடிச்சி...

ஈழத்தமிழர் ஆதரவு போர்வையை போத்திகிட்டு போட்டோ வீடியோன்னு காசு பாத்திகிட்டு  இருந்த கோவாலுக்கு அதுலயும் ஒரு லெவலுக்கு மேல போக முடியலை... ஏன்னா கலைஞர் ஐயாவோட ஆட்சியில வாலு ஆடாம இருந்துச்சுனா ஐயா கடுப்பாயிட்டாருன்னா.. நக்கீரரு ரெண்டு கட்சியையும் பகைச்சுகிட்டு வெளையாட முடியாது...!

சாமியாரு நித்தி வெவகாரத்துல டவுசரு கிழியறதுக்கு முன்னாடி முந்திகிட்டு.. மாட்டுகறி மாமின்னு கவர் ஸ்டோரி போட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தாரு....ஆனா ஆபிச ஒடைச்சு சாணிய கரைச்சு ஊத்தினதோட அம்மா கட்சி ஆளுகளுக்கு சைலண்ட்டா இருக்க ஆர்டர் போட்டுடுச்சு போல....நக்கீரன் கோவாலு அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சிகிட்டு இஞ்சி தின்ன கொரங்காட்டமா இப்போ முழிச்சுகிட்டு இருக்காரு...!

அம்புட்டுதேன் நக்கீரரு கதையிங்க..!

பஞ்ச் :3
 
எதிர்கட்சி தலைவரு பயங்கர கோவமா இருக்காராமுங்க...! ஆமாம் சினிமாவுல கிளிசரின் போட்டிகிட்டு கண்ண செவக்க வச்சிகிட்டு..(அவுருக்கு கண்ணு செவக்க வேற காரணம் இருக்கு..ஹி ஹி ஹி) கையித்த கட்டி தூக்குவானுவோ.. இவரு பறந்து பறந்து காலாலேயே அடிப்பாரு..., வசனகர்த்தா எழுதி கொடுக்கிற டயலாக்க தொண்டைய அனத்திக்கிட்டு பேசி கைதட்டல வாங்கி தேசப்பற்று இருக்குற ஹீரோவா ஆகிப்புட்டாரு...

அரசியல் என்ன அம்புட்டு ஈசியாங்க....... மக்க சினிமாவ பாத்துபுட்டு ஓட்டு போட்டுருச்சுக.. ஆக்சுவலி சார்க்கு இப்போ என்ன செய்யிறதுன்னு ஒண்ணியும் புரியாம...என்ன பேசினாலும் இந்த சனம் நம்மள மதிக்க மாட்டேங்குது.. சினிமாவுல ஹீரோவா இருந்த நம்மள நெசவாழ்க்கையில் ஜீரோவா பாக்குதகளேன்னு ரெண்டு மூணு ரவுண்டு ஆனதுக்கப்புறம் கண்ணு செவக்க டெய்லி கோவப்படுறாராம்...

பொங்கல் கொண்டாட கரும்பு, அரிசி, வெல்லம் எல்லாம் கொடுக்கப்போறதா வேற சொல்லிக்கிறாய்ங்க.. ஆனா விசயகாந்த் எந்த அரிசி கொடுத்தாலும் சரி அவரு பருப்பு தமிழ்நாட்ல வேகாதுன்றது பாவம் அவருக்கு எப்புடி தெரியும்...?

பஞ்ச் :4

இராமேஷ்வரத்துக்கு சாமி கும்பிட வந்த ராஜபக்சேயோட மைத்துனர தேடிப் போயி, நம்ம தமிழர் கட்சிக்காரவுகளும், மதிமுக..காரவுகளும்....அடிடா.....அவனை ....உதைடா அவனைன்னு ஒரே ரகளையாமுங்க...

ஏய்யா..சோனியா வந்துட்டுப் போனிச்சி, ராகுல் வந்துட்டுப் போனாரு, பிரதமர் ஐயா வந்துட்டு போனாரு...அப்போ எல்லாம் ஏதாச்சும் போராட்டம் பண்ணினா பிரயோசனம் இருக்கு...! ராசபக்சே வீட்டு வேலைக்காரன அடிச்சு நமக்கு என்ன ஆகப் போகுது சாமி..? மறுக்கா அவெங்களும் அப்பாவிகள அங்க அடிக்க ஆரம்பிச்சா என்னாகும்..?

ஆளும் காங்கிரஸ் கட்சியோட மந்திரிமாருகளை குறிப்பா சிதம்பரம் ஐயா மாதிரி ஆளுகள தமிழ்நாட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு போராட்டம் பண்ணுங்க.. பிரோயோசனமா போகும்..

துரோகிய ஊருக்குள்ள வைச்சிகிட்டு.. எதிரி வீட்டு ஓணான பிடிச்சு அடிக்கிறதுதான் இனத்தோட வீரமா என்ன?
 
பஞ்ச் :5 

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அம்மா இன்று தொடங்கி வச்சது எல்லாம் சரிதான்....

கஜானால காசு இல்லாம அல்ரெடி விலைவாசிய ஏத்தி எங்க குரல்வளைய நெறி நெறின்னு நெறிச்சுக்கிட்டு இருக்கையில இப்படி  விரிவான திட்டம், அபாரமான திட்டம்னு எதுக்கு காச கண்ட மேனிக்கு செலவு பண்றாங்க? உங்க தேர்தல் அறிக்கைய நிறைவேத்த எங்க தலையில கைய வச்சு எங்களுக்கே கொடுங்கன்னு அவுங்கள யாரு கேட்டா...?

ச்ச்சும்மா கையில காசு இல்லாத நேரத்துல இது எல்லாம் தேவை தானுங்களா அம்மா?

#நாடு நமது வீடு..#


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

2 comments:

நாய் நக்ஸ் said...

எல்லாம் நம் விதி பயன்,.....

saidaiazeez.blogspot.in said...

பன்ச் 1: உணர்ச்சிவசப்பட்டு அல்ல, உணர்ந்து நட!
பன்ச் 2: சுயநலத்தால் நெற்றிக்கண்ணையல்ல, தன் சொந்த கண்களையே இழந்தவர்!
பன்ச் 3: நிழல் நிஜமாகாது
பன்ச் 4: தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பது இதுதானோ?
பன்ச் 5: ஊராமுட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes