Thursday, September 29, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (29.9.2011)


பஞ்ச்: 1

வரலாறு காணாத அளவுல ஒரு பன்முகப் போட்டி இருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வகையில் பாத்தா சில முக்கியமான தடயங்களை தேர்தல் முடிவுகளோட விட்டுத் தரும்னுதான் சொல்லணும்...!

கடந்த 25 வருட அரசியல்ல அதிமுக மற்றும் திமுக இந்த ரெண்டு கட்சியும் தமிழர்கள் வாழ்க்கையில நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது நமக்கு நல்லாவே தெரியும். ஆனா, முதல் தடவையா இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியா களம் காணுவதின் விளைவு இவற்றின் சொந்த பலம் என்ன அப்டீன்னு இந்த முறை தெளிவா காட்டிடும். 

இது ஒரு அவசியமான நிகழ்வுன்னு கூட சொல்லலாம்...! பார்க்கலாம் வெல்லப்போவது அதிமுகவா? திமுகவா...?இல்லை தேமுதிக கூட்டணியா அப்படின்னு?


பஞ்ச்: 2

இந்த ப. சிதம்பரம் இருக்காரே அவரு நல்லவரா? இல்லை கெட்டவரான்னு பிரதமர் மன்மோகன் சிங் கிட்ட கேட்டா.. தெரியலையேப்பான்னு டர்பன கழட்டி வச்சுட்டு தலைய சொறியிறாராம். உள்ள ஒக்காந்து கிட்டு ராசா ஒண்ணு ஒண்ணா எடுத்து விட இங்க சிதம்பரம் ஐயா டவுசர் கொஞ்சம் கொஞ்சமா கிழிய ஆரம்பிச்சு இருக்கு.

நம்ம பிரதமர் ஐயா நியூயார்க்ல இருந்துகிட்டு பேட்டி கொடுக்குறாங்க. சிதம்பரம் அப்பழுக்கற்றவர். அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அட... பிரதமர் ஐயா எங்களுக்கும் அவரைப் பத்தி நல்லா தெரியும். உள்ள இருக்காரே ராசா அவருக்கும் நல்லா தெரியும், ஆனா எதுக்கு இவர் டெண்டருக்கு அப்ரூவல் கொடுத்தாருன்னுதான் கேக்குறோம்..?

என்னமோ போங்க... பூசணிக்காய சோத்துல மறைக்க ட்ரை பண்ணினா கூட பரவாயில்லை. வெறும் பூசணிக்காய வச்சுகிட்டு இது சோறுன்னு சொல்லி 125 கோடி பேர முட்டாளாக்க பாக்குறீங்களே...நல்லா இருக்குங்கய்யா உங்க ஜனநாயகம்!

பஞ்ச்: 3

ஜீ தொலைகாட்சியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில ஒவ்வொரு குடும்பத்துல இருக்குற பிரச்சினைகளையும் அந்தந்த குடும்ப உறுப்பினர்களை வச்சே தீர்த்து வைக்கிறாங்க. திருமதி.நிர்மலா பெரியசாமி (சன் டிவில நியூஸ் சொல்லுவாங்களே....அவுங்களேதான்) மிக சாமர்த்தியமா பேசி அருமையா ஒத்துப் போக வைக்குறாங்க.

திரும்ப திரும்ப வரும் பிரச்சினை என்னனு பாத்தீங்கன்னா, காதல் கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம், பெத்தவங்க சப்போர்ட்டும் இல்லாம, புருசனும் சண்டை போட்டு வெறுத்து, இந்த பொண்ணு வேண்டாம்னு விட்டுட்டு வேற ஒருத்தி கூட தொடர்பு வச்சிக்கிட்டு போற மாதிரியேதான் இருக்கு.

ஒட்டு மொத்தமா பார்த்தீங்கன்னா காதல் சரின்னு நாம ஒத்துக்கிட்டாலும் தனிப்பட்ட முறையில ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனித்தனியா ஒருத்தர் இல்லேன்னா கூட ஒருத்தர் நிக்க முடியும் அப்டீன்ற ஒரு ரேஞ்ச்ல இருந்தா காதல் பண்ணுங்க. பெத்தவங்கள விடுங்க. கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா... குடும்ப உறவுகள எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டு தன்னோட துணை துரோகம் செய்றப்ப ரொம்ப கஷ்ட படுற சூழல் உருவாகிடுது. இதுல பெரும்பாலும் பெண்கள் நிறைய பாதிக்கப்படுறாங்க..!

இந்த விசயத்துல எல்லோருக்கும் விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் போது நாம என்ன செய்றோம்? ஏன் செய்றோம்? செய்றது சரியா? இப்டி பல தடவை தன்னை உற்றுப் பார்த்துக் கொள்வதோடு அனுபவஸ்தர்களின் அறிவுரையையும் கேட்டு நடந்தால்.. தெளிவான ஒரு சமுதாயத்தின் அங்கமா நாம இருப்போம். காதலுக்கு கண் இல்லைன்றது சரியாதான் இருக்கு...

பஞ்ச்: 4


மன்மோகன் சிங் ஐயாவுக்கு திரு. கருணாநிதி அவர்கள் திசைகாட்டும் விளக்காக இருக்காராம். சிங் ஐயா பொறந்த நாளைக்கு நம்ம ஐயா வாழ்த்து சொன்ன உடனே சிங் ஐயா ரொம்ப குஜாலா சொல்லியிருக்காரு..! பாராளுமன்றத் தேர்தல் வருது. திமுக உள்ளாட்சித்தேர்தல்ல கழட்டி விட்டுடுச்சு. ஏதாச்சும் சொல்லி கில்லி தேத்தி வைப்போம். பின்னால 40 சீட்டுக்கு உதவும்னு இப்பவே தூபம் போட ஆரம்பிச்சுட்டாங்க..ஒருவேள இப்படியும் இருக்குமோ? எப்படியும் எந்தக் கட்சியும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி வரப்போறதில்ல. திமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு குறைவா இருந்தா பழையபடியே உறவ புதுப்பிச்சிக்கிலாம்னு இவரும் வாழ்த்து சொல்லி இருக்கலாம். யாரு கண்டது..?



பின்குறிப்பு: சோனியா அம்மா ஒரு வேளை செயலலிதா அம்மாதான் வழிகாட்டும் வெளக்குன்னு சொன்னாலும் சொல்லுமோ? சொல்லும் சொல்லும் யாரு கண்டா...?! 

பஞ்ச்: 5

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தில சந்தனக்கட்டை வச்சு இருக்காங்கன்னு சந்தேகப்பட்டு ஒரு ஊரையே அடிச்சு துவம்சம் பண்ணி 18 பெண்களை கற்பழிச்சுட்டாங்கன்னு சொல்லி 269 காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மேல குற்றம் சாட்டப்பட்ட வழக்கோட தீர்ப்பு இன்னிக்கு சொல்லப் போறாங்க...


கிட்டத்தட்ட 19 வருசம் இந்த கேச விசாரிச்சு விசாரிச்சு, குற்றம் சாட்டப்பட்ட 269 பேர்ல 54 பேர் செத்து வேற போய்ட்டாங்க... ஏன்யா இந்தியாவுல மட்டும் நீதி கிடைக்க இவ்ளோ லேட்டாகுது..? ஒரு கேசுல குற்றம் சுமத்திட்டு மறுபடி பொறந்து வந்துதான் நியாயம் கேக்கணும் போல இருக்கே..?!


இது போன்ற சம்பவங்கள் நீதி வழங்கல் விசயத்துல தொடர்ந்து நடக்குறது ஏன்? சரி தப்புன்னு தெரிய கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்குறது சரி... அதுக்குன்னு.......இப்டியா? இந்தியனா பொறந்து மூளையில ஏறி ஒக்காந்து ஒத்துக்கிட முடியாத வேதனையான விசயம் இதுதான்!


  
கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

1 comments:

வெளங்காதவன்™ said...

இனித்தது வழக்கம்போல்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes