Wednesday, August 31, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (31.8.2011)

வெகு நேரமாய் ரெங்குவின் வருகைக்காக காத்திருந்து, காத்திருந்து,டீ கடைக்கு தனியே சென்றார் கனகு. டீக்கடைவாசலில் நின்று கொண்டு செல்பேசியை எடுத்து நம்பரை தட்டினார்.. கனகு.. அவள் வருவாளா, அவள் வருவாளா.. ரிங் டோன் ஒலிக்க..  கனகு : ஹலோ ரெங்கு.. என்னய்யா கழுகுக்காக விழுந்து விழுந்து வேலை செய்றீயா..?? இன்னும் ஆளயே காணோம்   ரெங்கு : யோவ் இதோ தெரு முனைக்கு வந்துட்டேன் அங்கேயே இரு...  வண்டியை விட்டு முனங்கிக் கொண்டே வர ... கனகு : அட என்ன ரெங்கு முனங்கிட்டே வரே என்ன ஆச்சு..? ரெங்கு : ஒரே ட்ராபிக்.. நம்ம மக்கள் செய்ற போராட்டத்தால் தான்  கனகு : ஆமாப்பா பேரறிவாளன் நியூஸ் ஏதாவது கரண்ட் நியூஸ் சொல்லுப்பா...  ரெங்கு : இந்த விஷயத்தில் வாயே திறக்காத அம்மா இப்போ தான் வாய்திறந்து இருக்காங்க, மேதகு...

Tuesday, August 30, 2011

நிரந்தரமாய் நிறுத்தப்படுமா தூக்கு தண்டனைகள்?

குற்றமும் அதன் பின்னணியும் சரியாய் ஆராயப்படாமல் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கிலே மரண தண்டனை தீர்ப்பினை மூன்று பேருக்கு உச்ச நீதி மன்றம் கொடுத்திருக்கிறது. ஜெயின் கமிசன் போன்றவற்றின் அறிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் மூவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு 28.04.2000 ஆம் ஆண்டு அதாவது 11 வருடங்களுக்கு முன்பே கருணை வேண்டி கடிதம் அனுப்பினர். விசாரணைகள் முடிந்த ஒரு வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு ஒரு வழக்கில், கருணை வேண்டி மனு செய்த பின்பு அந்த கருணை மனுக்களை பாரத ஜனாதிபதி எடுத்து படித்து ஆராய்ந்து விசாரித்து தனது கருத்தினை கூற 11 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது தோழமைகளே..?  திரு. ராஜிவ் காந்தி அவர்கள்...

Monday, August 29, 2011

உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்....! விவசாயம் பற்றிய ஒரு பார்வை!

தாய் மண், தாய் மண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பல்வேறு விடயங்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். மேம்போக்காய் இந்த பதத்தை நாம் பயன் படுத்த புறக்காரணங்களாக ஓராயிரம் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் நிகழ்கின்றன. நிஜத்தில் விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நாம் என்பதையே காலத்தின் போக்கில் மறந்து விட்டோம். மண்ணோடு மண்ணாக கிடந்து உழவு செய்து, தானியங்களை விளைவிக்கும் ஒரு மிகப்பெரிய விவசாய நாட்டின் மைந்தர்கள் நாம் இன்று விவாசயம் என்றாலே ஏதோ கிராமத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் ஒரு பிற்போக்கு நிகழ்வாக கருதி நமது புத்திகளை பல்வேறு பட்ட நவீன விடயங்களோடு பொருத்திக் கொண்டு நவநாகரீக மனிதனாக நம்மைக் காட்டிக் கொள்ள பொய்யாய் முனைந்து கொண்டிருக்கிறோம். நாகரீகம் என்பது மேலை நாட்டவரின் கண்டுபிடிப்புக்களை உபயோகம் செய்வதோ, நுனி நாக்கு ஆங்கிலத்தில்...

Thursday, August 25, 2011

பஞ்ச்' சாமிர்தம் 25.08.2011 (நூறு நாள் அதிமுக ஆட்சி, நேரு கைது.. இன்னும் நிறைய..!)

பஞ்ச் 1: சினிமாவுல ஒவ்வொரு பிரேம்லயும் வந்து நின்னு மூச்சு விடாம பக்கம் பக்கமா வசனகர்த்தா எழுதி கொடுத்த வசனங்கள கண்ணு செவக்க பேசிட்டுப் போற விஜயகாந்த், அதிமுக ஆட்சி பற்றி ஒரு வருசத்துக்கு பேசமாட்டேன்னு சொல்லியிருக்கறது 2011 சூப்பர் காமெடியாவே அறிவிக்கலாம். எலக்சன் நேரத்துலயே முன்னுக்குப் பின் முரணா பிரச்சாரம் செஞ்சு, ஏகப்பட்ட குளறுபடிகள செஞ்சு இருந்தாலும், இத்தனை சீட்டுக்கள கொடுத்து மக்கள் ஜெயிக்க வச்சதுக்கு காரணம் புதுசா ஒருத்தன் வந்து ஏதாச்சும் செய்யமாட்டானா? அப்டீன்ற ஒரு எதிர்ப்பார்ப்பு +கடந்த ஆட்சி மேல இருந்த வெறுப்பு அப்டீன்றத விசய்காந்த் சார் புரிஞ்சுக்கணும். கேக்க வேண்டிய கேள்விகளை சரியான நேரத்துல கேக்காம இருக்கறதும் தப்புன்னு வெளங்கிகிட்டு,  மக்கள் பிரச்சினைகளை பேசவும் ஆளுங்கட்சியோட முரண்களை சுட்டிக் காட்டவும் நேரம், நாளு...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes