' உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
- விவேகானந்தர்
- விவேகானந்தர்
சித்தாந்தங்களும், தத்துவங்களும், கோட்பாடுகளும் கடந்த தனிமனித ஆன்ம விழிப்பே....சமூகத்தை சீர்திருத்துமென்ற கருத்தினை வலுவாய் பதிந்தபடி கட்டுரையைத் தொடர்கிறோம்.
அது என்ன ஆன்ம விழிப்பு...?
இது கடவுளோடு சம்பந்தப்பட்டதா? மதத்தோடு தொடர்புடையதா? சடங்குகளின் மீது சவாரி செய்வதா? சாதிப் பிரிவுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்வதா? அரசியல் சித்தாந்தங்களின் மீதேறி நின்று பயணிப்பதா? இது கொள்கையா? கோட்பாடா? தத்துவமா? பொழுது போக்கா? வாழ்க்கையோடு தொடர்புள்ளதா? தொடர்பற்றதா?
இப்படியாய் எழும் எல்லா கேள்விகளையும் வேரோடு பறித்து எறியுங்கள்...!
ஏனென்றால் ஆன்மீகம் என்ற வார்த்தைப் படிமத்தை நாம் கையாளும் போது பலருக்கு மதவாதிகள் புகுத்தி வைத்திருக்கும் பல சடங்குகள் தங்களின் மனக்கண் முன்னால் வந்து கரகாட்டம் ஆடத்தொடங்கும். ஆன்மீகம் என்ற வார்த்தைப் படிமாணத்தைக் கடவுள் தேடல் என்ற வார்த்தையோடு முடிச்சிட்டு வைத்திருக்கும் பொது புத்திகள், ஆன்மீகம் என்றால் ஏதோ ஒரு மதம் தொடர்புடையது அல்லது ஏதோ ஒரு மதம் சார்ந்து கடவுளைத் தேடுவது என்றெல்லாம் தொடர்ச்சியான கற்பிதங்களை புறத்தில் செய்தியாகவும், எண்ணங்களின் மூலம் அதிர்வுகளாகவும், ஜீன்களின் மூலம் குணாதிசயங்களாகவும் தொடர்ந்து பரப்பி வந்து கொண்டே இருப்பதின் விளைவுதான்...
ஆன்மீகம் என்றாலே அது மதம் சம்பந்தப்பட்டது என்ற எண்ணம் நமக்குள் எழுவதற்கு காரணம். மிகைப்பட்ட பேர்கள் ஆன்மீகம் என்ற சொன்ன மாத்திரத்திலேயே அது வாழ்க்கைக்கு எதிரானது என்று எண்ணி அது பற்றி பேசவே பயந்து அது என்னவோ வயதான காலத்தில் மரணத்தின் போது கற்றுக் கொள்ளும் பாடம் என்று காத தூரம் போய்விடுகிறார்கள்.
இன்னும் சிலரோ நாங்கள் கடவுளே இல்லை என்று கூறுபவர்கள். எங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இருக்கிறோம், வாழ்கிறோம் இந்த ஆன்மீகம் என்பது எல்லாம் பொய் என்று சொல்கிறார்கள்...ஏனென்றால் ஆன்மீகம் என்றால் அவர்களின் பார்வையிலும் மறைமுகமாய் கடவுள் என்னும் கற்பனை கதாபாத்திரத்தின் அரியாசனம் என்றுதான் அவர்களும் நினைக்கிறார்கள்...!
அன்பான புரிந்துணர்வு கொண்ட உறவுகளே...
ஆன்மீகம் என்பது கடவுள் தேடல் அல்ல; ஆன்மீகம் என்பது கற்பனையில் ஏதோ எண்ணிக் கொண்டு எங்கோ நகர்வது அல்ல்; ஆன்மீகம் என்பது வானிலிருந்து தேவதூதர்கள் வந்து தன் வாழ்க்கையைச் சீராக்குவார்கள் என்று நம்பும் மூடப்போக்கல்ல;ஆன்மீகம் என்பது சாமியார்களின் காலடியில் கவிழ்ந்து கிடப்பது அல்ல; ஆன்மீகம் என்பது கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் முயற்சியல்ல; ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு சில புத்தகங்களில் ஒளிந்திருக்கும் இறுதி உண்மையல்ல.....
இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்பது வாழ்க்கையை மறுப்பது அல்ல; அது வாழ்க்கையை முழுமையாய் ஏற்பது;
எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ எது, எது நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறதோ அதை மறுக்காமல் ஏற்று அதை முழுமையாய் நிகழ்த்திக் காட்டுவதே ஆன்மீகம். அப்படியான செயல்களைச் செய்யும் போது இந்த செயலைச் செய்து நான் வெற்றி பெற என்னைச் சுற்றி ஏராளமான மனிதர்கள் எனக்கு உதவியிருக்கிறார்கள், இயற்கை எனக்கு உதவியிருக்கிறது, பல சூழல்கள் உதவியிருக்கிறது, என்னால் மட்டும் இது விளைந்தது அல்ல; என் செயல்களின் விளைவுகள் கூட்டு முயற்சி என்ற தெளிவினை உள்வாங்கிக் கொண்டு நகரும் போது...
இதை நான் தான் செய்தேன் மேலும் என்னால் மட்டுமே செய்ய முடியும் என்பன போன்ற மாயக்கட்டுக்கள் தானே உடைந்து போகும். செய்யும் செயல், அதனை எப்படி செய்வது? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? என்றெல்லாம் உணர்ந்து தனக்கும் தன்னைச் சுற்றி இருக்கும் சூழலுக்கும் குந்தகம் இல்லாமல் வாழும் ஒரு வாழ்க்கைதான் விழிப்புணர்வான வாழ்க்கை. மனிதர்களை எதிர்கொள்ளும் போது எதிராளியின் மனோநிலையிலும் நின்று அவர்களின் கருத்துகளை ஆராயத் தொடங்கும் போதுதான் அவர்களின் புரிதலும் முரண்களும் நமக்குத் தெளிவாய் தெரிகின்றன.
நாம் எப்போதும் நமது நியாயங்கள், நமது தேவைகள், நமது புரிதல்கள் இவைதான் உலகின் இறுதி உண்மைகள் என்று எண்ணி விடுகிறோம். இது ஒரு மிகப் பெரிய மாயை. நாம் ஏற்றிருக்கும் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும், புரிதல்களும் நமது சூழலினால் நமக்கு வசதியானவையாகத் தோன்றுகின்றன. அது எல்லோருக்கும் வசதியாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் அறியாமையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில்...
நாம் எப்போதும் நமது நியாயங்கள், நமது தேவைகள், நமது புரிதல்கள் இவைதான் உலகின் இறுதி உண்மைகள் என்று எண்ணி விடுகிறோம். இது ஒரு மிகப் பெரிய மாயை. நாம் ஏற்றிருக்கும் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும், புரிதல்களும் நமது சூழலினால் நமக்கு வசதியானவையாகத் தோன்றுகின்றன. அது எல்லோருக்கும் வசதியாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் அறியாமையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில்...
ஒவ்வொரு மனிதனுக்கும் தான் யார்? என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதைப் பின்பற்றுகிறோம்? அப்படி பின்பற்றுவதின் பின்னால் ஒளிந்திருக்கும் தனது சுயநலங்கள் என்ன..? என்ன? தன் சுயநலத்தால் தன்னைச் சார்ந்திருக்கும் எத்தனை பேர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்? எது சரி? எது தவறு?
என்றெல்லாம் பகுத்துப் பார்க்கவேண்டும். அப்படி பகுத்துப் பார்க்க தன் உள்ளமையான ஆன்மா என்னும் உயிர்ச் சக்தியினை பற்றிய புரிதல் வேண்டும்.
நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும்தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...?
என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு.
என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு.
ஆன்ம விழிப்பு பெறும் போதுதான் நிஜத்தில் ஒரு மனிதன் உண்மையாகவே பிறக்கிறான். இப்படியான ஆன்ம விழிப்பு வாழ்க்கையை மறுத்தல் கிடையாது. வாழ்க்கையை ஒதுக்குதல் கிடையாது. இது வாழ்க்கையை முழுமையாய் ஏற்றுக் கொள்ளுதல்.
ஒவ்வொரு மனிதரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்களே..ஆனால் பிரச்சினை எங்கே ஏற்படுகிறது என்றால் ஒருவரைப் பார்த்து அவர் போல தானும் இருக்க வேண்டும் என்று ஒருவன் ஆசைப்படும் இடத்தில்தான். அவரைப் போல வரவேண்டும் என்ற விருப்பம் சரி... என்று கொண்டாலும் தனக்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதன் வழியே பயணித்து அந்த எல்லையைத் தொட யாரும் விரும்புவதில்லை. ஏற்கெனவே ஒருவர் சென்ற பாதையை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று தன் இயல்புக்கு முரணான ஒன்றை தேர்ந்தெடுத்து தன் சுய அடையாளத்தை இழந்து கடைசியில் தொலைந்தே போகிறார்கள்.
ஒரு தலை சிறந்த ஆன்மீகவாதியே மிகச்சிறந்த வெற்றியாளனாக வாழ்க்கையில் பரிணமிக்கிறான். பணம் சேர்த்தல் என்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாய் பார்க்கப் படும் மனோபாவம் போலியானது. பணக்காரர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது... பணம் என்பது வாழ்க்கையின் புறத்தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு காரணி...அவ்வளவே...
பணத்தின் தேவையும், அப்படி தேடியதின் காரணமும் அதனால் நிம்மதியும் கிடைக்க வேண்டுமெனில் ஒருவன் ஆன்ம விழிப்பு பெற்றவனாய் தன்னை உணர்ந்தவனாய் இருத்தல் வேண்டும்.
பணக்காரர்கள் எல்லாம் நிம்மதியாய் இருக்கிறார்கள், அவர்கள் தான் உலகின் சந்தோஷப் புருசர்கள் என்று யாரேனும் கூறினால்...அவர்களிடம் கேளுங்கள்...கோமணத்தோடு மலை மீது ஏறி எதுவும் வேண்டாம் என்று அமர்ந்தவர்கள் எல்லாம் துக்கத்தின் பிள்ளைகளா என்று? கோடிகளில் சந்தோசம் அடையலாம் என்றால்...இவர்கள் எல்லாம் எதைக் கண்டு சந்தோஷித்து நிற்கிறார்கள் என்று...
நாம் இங்கே நிறுவ விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...
அதாவது கோடிகளில்தான் சந்தோசம் என்று நீங்கள் அதை நோக்கி ஓட்டமாய் ஓடவும் வேண்டாம்..., கோமணம் கட்டிக் கொண்டு மலை மீது துறவியாய் அமர்ந்திருப்பவரைக் கண்டு துறவியாகவும் ஓட வேண்டாம்...
மாறாக நிஜத்தில் நீங்கள் யாரென்று உணருங்கள். உங்களின் தேவை என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்...எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள்...மேலும் எதைச் செய்தாலும் அதை முழுமையாக தெளிவாய்ச் செய்யுங்கள்..!
பிரியமான மக்களே...
நாம் இங்கே நிறுவ விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...
அதாவது கோடிகளில்தான் சந்தோசம் என்று நீங்கள் அதை நோக்கி ஓட்டமாய் ஓடவும் வேண்டாம்..., கோமணம் கட்டிக் கொண்டு மலை மீது துறவியாய் அமர்ந்திருப்பவரைக் கண்டு துறவியாகவும் ஓட வேண்டாம்...
மாறாக நிஜத்தில் நீங்கள் யாரென்று உணருங்கள். உங்களின் தேவை என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்...எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள்...மேலும் எதைச் செய்தாலும் அதை முழுமையாக தெளிவாய்ச் செய்யுங்கள்..!
பிரியமான மக்களே...
ஜனநாயக அரசியல் என்னும் சமூக கட்டமைப்புக்குள் வாழும் நீங்களும் நானும் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்வோம்; யாரை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்வோம் ஆனால் முழுமையான ஆன்ம விழிப்பு பெற்றவர்களாக அதைச் செய்வோம்...அப்படி செய்வதை நமது உள்ளுணர்வு ஏற்றுக் கொள்கிறதா என்று ஒவ்வொரு முறையும் சரி பார்ப்போம்....!
இந்த சமூகம் என்று மட்டுமில்லை உலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் விடியலுக்கும் இதுவரையில் வந்த எல்லா சித்தாந்தங்களும், கோட்பாடுகளும், மதங்களும் முழுமையான ஒரு தீர்வை இதுவரையில் கொடுத்து விட முடியவில்லை. மாறாக அவை மக்களைப் பிரித்துப் போட்டு பைத்தியக்காரர்களாய் ஆக்கித்தான் வைத்திருக்கிறது...
மாறாக....
மாறாக....
தெளிவான ஆன்ம விழிப்பே மானுட சமுதாயத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தி என்ற எமது சிங்க நாதத்தை கழுகு வாசகர்களாகிய உங்களிடம் சேர்ப்பித்து தொடர்ச்சியான எமது நகர்வுகளை அக்னிச் சுடராய் வெளிப்படுத்திக் கொண்டே இன்னமும் உற்சாகமாய் சிறகடிப்போம் என்ற உறுதியோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)