Wednesday, August 31, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (31.8.2011)







வெகு நேரமாய் ரெங்குவின் வருகைக்காக காத்திருந்து, காத்திருந்து,டீ கடைக்கு தனியே சென்றார் கனகு. 
டீக்கடைவாசலில் நின்று கொண்டு செல்பேசியை எடுத்து நம்பரை தட்டினார்.. கனகு..
 
அவள் வருவாளா, அவள் வருவாளா.. ரிங் டோன் ஒலிக்க..

 
கனகு : ஹலோ ரெங்கு.. என்னய்யா கழுகுக்காக விழுந்து விழுந்து வேலை செய்றீயா..?? இன்னும் ஆளயே காணோம் 

 
ரெங்கு : யோவ் இதோ தெரு முனைக்கு வந்துட்டேன் அங்கேயே இரு...


 
வண்டியை விட்டு முனங்கிக் கொண்டே வர ...




கனகு : அட என்ன ரெங்கு முனங்கிட்டே வரே என்ன ஆச்சு..?
 
ரெங்கு : ஒரே ட்ராபிக்.. நம்ம மக்கள் செய்ற போராட்டத்தால் தான் 

கனகு : ஆமாப்பா பேரறிவாளன் நியூஸ் ஏதாவது கரண்ட் நியூஸ் சொல்லுப்பா...


 
ரெங்கு : இந்த விஷயத்தில் வாயே திறக்காத அம்மா இப்போ தான் வாய்திறந்து இருக்காங்க, மேதகு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், என்னால் ஒன்றும் செய்ய முடியாது சொன்ன அம்மா மறுநாளே தண்டனையை குறைக்கனும் சொல்லி தீர்மானம் போட்டுட்டாங்க..  மக்களுடைய போராட்டத்தை பார்த்து பயந்துட்டாங்க போல் 

 

கனகு :  இந்தம்மா பயப்படுவாங்க போய்யா போய்யா இந்தம்மா யாரையும் பயமுறுத்தாம இருந்தா சரி தான், ஏன் இந்தம்மா முதல் நாளே இந்த தீர்மானத்தை போட்டா என்ன..?? எல்லாம் கலைஞ்ர் அய்யா என்ன சொல்றார் பார்த்துட்டு அப்பறம் முடிவெடுக்கலாம் நினைச்சு இருப்பாங்க...
 
 ரெங்கு : அத விட இன்னொரு காரணமும் இருக்கு வோய்.. கோர்ட்டுல இப்படி ஒரு தீர்ப்பு வர போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சு இருக்கும்.. அதான் கோர்ட் சொல்லிட்டா ..அப்பறம் கோர்ட் நல்ல பேர் வாங்கிடும் அதான் அம்மா முந்திடாங்க...!! 


 

கனகு : அட அதான் அடுத்தடுத்து தீர்மானம், தீர்ப்பு வந்துதா, அம்மா நல்லா தெளிவாகிடாங்கடோய்... நான் கூட மக்கள் போராட்டம் பார்த்து நல்லது செய்றாங்ளோ நினைச்சேன்.. அம்மா இன்னும் ஒரு படி மேல போய் தண்டனையை ரத்து செய்யவில்லையென்றால் பதவியை ராஜினாம செய்றேன் சொன்னா.. தமிழ் மக்களுக்கு அம்மா தான் விடிவெள்ளி.. 
 
ரெங்கு : அட போய்யா விடி வெள்ளி கடி வெள்ளி சொல்லிட்டு ஒரு கொடுமையான நியூஸ் கேளு .இதையெல்லாம் சொல்லவே கஷ்டமா இருக்கு... 


 
கனகு : என்ன ரெங்கு சொல்ற 
 

ரெங்கு : என்ன ஆச்சு ஆமாய்யா மூன்று பேரை தூக்கில் போடக் கூடாதுன்னு.. சொல்லி ஒரு பொண்ணு தீ குளிச்சிருச்சு தோழர் முத்துகுமாரன் உடல் தமிழகத்தை எழுப்பியதை போல் தன் உடல் இந்த தமிழகத்திற்கு பயன் படட்டும்னு சொல்லி லட்டர் எழுதி வைச்சு இருக்கு..



கனகு : என்ன கொடுமையா இது.. இப்படி பட்ட தற்கொலைய யாரும் அனுமதிக்க கூடாது.. தற்கொலை பிரச்சனைக்கு தீர்வாகாதுனு எப்போ தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ..!!!  இன்னும் அந்த பொண்ணு சடலத்தை அடக்கம் செய்யாமல் அரசியல் செயராங்கய்யா,, இது அந்த தற்கொலைய விட கொடுமை, இந்த பேரறிவாளன் விஷயத்தில் என்ன நடக்குதோ இல்லையோ.. நல்லா அரசியல் நடக்குது.. 


ரெங்கு : நாடே பதற்றத்தோடு இருக்கும் போது ஒரு ஆள் மட்டும் காமெடி பண்ணிட்டு திரியுறார்..
 
கனகு : அட யாருய்யா அந்த காமெடியன்..??  
 
ரெங்கு : விஜய்..
 
கனகு : என்ன விஜய்யா.. என்னய்யா அவர் டெல்லி போனதை சொல்றியா...


ரெங்கு : யோவ் என்ன சொல்ல விடுய்யா இது வேற மேட்டரு...

 
கனகு : சரி சரி சொல்லு நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்..

ரெங்கு : விஜய் அவங்க அப்பா தானய்யா காமெடி பண்ணிட்டு திரியுறார்

கனகு : என்னய்யா சொல்றார் அவரு... 

ரெங்கு : அவர் ரயில் இன்ஜின்னாம், ரசிகர்கள், ரயில் பெட்டியாம், விசய் ...சிக்கனல் காட்டுறவராம் 

கனகு : நிறுத்து நிறுத்து ஆமா யார் கரி அள்ளி போடுவா அதையும் விசயே செய்வாரா 

 
ரெங்கு : யோவ் வாய்ய மூடுய்யா..அவர் சிக்னல் காட்டிணா  போயிடுவாராம் ... ஆனா எங்க போவார் தான் டவுட் 

 
கனகு : இதுல என்ன டவுட் காசி ராமேஸ்வரம் போவார். இது என்னய்யா ரயில் கதை அவர் படத்தை விட மோசமா இருக்கு..

ரெங்கு : யோவ் பேசிட்டு இருக்க டீய சொல்லு...  

 
கனகு : அண்ணாச்சி ஒரு டீ.. சரி சரி நீ நியூஸ் சொல்லு 
 
ரெங்கு :  சீமான் பேச்சு ரொம்ப ஓவராதான்ய்யா இருக்கு அந்த ஆளு பேசுறதே சரி இல்லை மக்களை தூண்டி விடுற மாதரி பேசுறார்,  சிதம்பரத்தை ஆந்திராவில் கால் வைச்சு பார் சொல்றார், தண்டனையை குறைக்காம இருந்தா ராஜீவ் கொலையில் கமா போட்டு விடுவோம் சொல்றாய்யா..
 
 கனகு : என்னய்யா இப்படியெல்லாம் பேசிருக்கார்... என்னமோ சீமான்க்கு நேரம் சரி இல்லை போல,
 
ரெங்கு : இந்த மாதரி கலைஞர் ஆட்சியில் சீமான் பேசியிருந்தா.. அம்மா ஆட்சியை கலைக்கனும் சொல்வாங்க .. இப்போ வேடிக்கைப் பார்க்குறாங்க...
 
 கனகு : என்னய்யா உனக்கு அம்மா பத்தி தெரியலை அம்மா இப்போ சும்மா தான் இருப்பாங்க அப்பறம் இந்த ஆள ஓட ஓட விரட்டுவாங்க...  இன்னும் ஒரு வருஷம் பொறுத்திருந்து பாரு...


 
ரெங்கு : மாநாடு நடத்திய ராமதாஸ்.. 8 லட்சம் பேரோட வேலூர் சிறைய முற்றுகையிட போறாராம்...
 
கனகு : என்ன ராமதாஸ் மாநாடு நடத்தினாரா..?? அவர் கட்சி மாநாடா..??


 
ரெங்கு : இது தூக்கு தண்டனைய முற்றிலுமா ரத்து செய்யணும்னு சொல்லி மாநாடு..
 

 கனகு : என்ன தூக்கு தண்டனைய முற்றிலும  தடுக்கனுமா..?? அப்போ தீவிரவாத செயல்ல ஈடுபடுபவர்களையும் கொழந்த பசங்களை ரேப் பண்றவங்களையும் என்ன செய்றதாம்... தூக்கு தண்டனையை ரத்து செய்ய கூடாதுனு அதில் சில வழிமுறைகளைக் கொண்டு வரணும்.... எல்லோருக்கும் தூக்கு கிடையாதுன்னு அரசாங்ககம் சொல்லும்மா.. பார்ப்போம்..

 
ரெங்கு : நீ சொல்றது யோசிக்க வேண்டியவிஷயம் தான் கனகு. இந்த காலத்திற்கேற்ப தண்டனை கொடுக்கணும் இந்த விஷயத்தில் அரசு கொஞ்சம் மாற்றம் கொண்டு வரணும், அரசாங்கம் என்ன தான் செய்துன்னு பொறுத்திருந்து பார்க்கணும்... 




நான் இப்போ டீ ய பாக்குறேன்  



 அந்த டீ ய கொடுங்க..




கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes