Wednesday, January 25, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (25.1.2012)




கனகுவும் ரெங்குவும் பேசிக்கொண்டு வந்தனர்.... என்னய்யா ரெங்கு இப்படி பயந்து பதுங்குற..?! என்ன உன் வீட்டு அம்மா வராங்களா..?? 

ரெங்கு : அட நீ வேறய்யா.. அங்க பாரு ஒரு வெறிநாய் போகுது... அதான். 

கனகு : அதுக்கு நீ ஏன்யா பயப்படுற..?! அதுங்க தானே பயப்படனும்..??

ரெங்கு : என்ன ஜோக்கா..?? போன வருஷம் வெறி நாய் கடிச்சு இருபதாயிரம் பேர் இறந்து போய் இருக்காங்களாம்..!! அப்போ பயப்படாம இருக்க முடியுமா..?? 

கனகு : அட கொடுமையே.. இது வேறயா... நாயை கொன்னா அனிமல் பிளானட்ல இருந்து வருவாங்க... நாம என்னதாய்யா பண்றது ... சரி.. சரி.. நீ என்ன கடிக்காம வா..

ரெங்கு : ஹெல்மட் போடலேன்னா போலீஸ் பிடிக்குது... போட்டா நாய் பிடிக்குது. என்ன கொடுமை கனகு..?! இதுல வேற அபராத தொகைய வேற உயர்த்திட்டாங்களாம். 

கனகு : அட பாவிங்களா..போலீஸ்க்கு கிம்பளம் உயர்வு வேறயா... இதுக்குதான் நான் பைக் யூஸ் பண்றதே இல்ல.. 
என்னாதான் அபராத தொகைய ஏற்றினாலும் அரசு கஜானா ரொம்ப போறது இல்ல.. போலீஸ் பாக்கெட் தான் ரொம்ப போகுது... ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வு. இன்னொரு பக்கம் இது. இதுக்குதான் பைக்கை தூக்கி போட்டுட்டேன்.

ரெங்கு : நீ பொழைக்க தெரிஞ்ச ஆளுய்யா... பொழைக்க வழி தெரிஞ்சா பக்கத்து நாட்டுகாரன்கிட்ட எல்லாம் அடிவாங்குவோமா...?

கனகு : என்னய்யா சொல்ற..?! யாரு உன்ன அடிச்சா..?? 

ரெங்கு : என்ன யாரும் அடிக்கலப்பா... ராமேஸ்வரம் மீனவர்களை தான் தினம் அடிக்குறாங்களே.. இலங்கை ராணுவம் ஒரு பக்கம் அடிக்குது. இன்னொரு பக்கம் இலங்கை மீனவர்கள் அடிக்குறாங்க... இது தான்யா வீட்டையும் கொடுத்துட்டு அடியும் வாங்குறது..

கனகு : நம்ம நாட்டுக்கு வர அமெரிக்காகாரனை அடிச்சா அமெரிக்கா சும்மா இருக்குமா..?! அவன் விடுற சவுண்ட்ல இவிங்க போய் காலுல விழுவாங்க... அதான்யா வல்லரசு நாடு. இவங்களால ஒரு சின்ன நாடு அதையே கட்டுப்படுத்த முடியல... அப்பறம் எங்க இருந்துய்யா உலகத்தையே கட்டுப்படுத்த போறாங்க...?!  இந்தியன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்குய்யா..

ரெங்கு : என்னய்யா கனகு இப்படி டென்சன் ஆகுற..?! டீய குடிய்யா.. அண்ணாச்சி.. சூடா இருக்கற கனகுக்கு சூடா ஒரு டீ போடுங்க..

கனகு : பின்ன என்னய்யா மீன் பிடிக்குற வேலையே செத்து செத்து பொழைக்கற வேலை. இதுல இவனுங்க வேற சுட்டு கொன்னு போடுறானுங்க... நம்ம ஆளுங்க அதுக்கு சன்மானமா நம்ம வரி பணத்தையே எடுத்து அவனுங்க கிட்ட கொடுக்குறானுங்க.. என்னைக்கு மக்கள் சூடாக போறாங்களோ அப்போ இருக்குய்யா இவங்களுக்கு... 

ரெங்கு : நீ வேறயா.. மக்கள் புரட்சி எங்க நடக்குது..?! செருப்பு புரட்சி தான் நடந்திட்டு இருக்கு நாட்டுல..

கனகு : இப்போ யாரு அடி வாங்கினது..  செருப்பு விக்குற விலைக்கு இப்படியா பண்ணுவாங்க...?!

ரெங்கு : யாரு... நம்ம ராகுல் தான் அடிவாங்கினார்..இதுல செருப்பால அடிச்சா எல்லாம் பயந்துட மாட்டாராம்.சொல்றார்..

கனகு : ஆமா.. ஆமா.. அவர் எப்படி பயப்படுவார்..?! அவங்க தான் பரம்பர பரம்பரையா அடிவாங்குறாங்களே... பயம் இருக்குமா என்ன..!! இனி இவரு சொல்லிட்டு திரிவாரு நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்னு...

ரெங்கு : அட இதுல அவங்களுக்கு பரம்பரை எக்ஸ்பிரியன்ஸ் இருக்கா...?! இதுல குரளி வித்தை காட்டுற மாதிரி அய்யா வாங்க அம்மா வாங்கன்னு வேற கூப்புடுறாங்கய்யா இந்த கட்சிகாரங்க..  

கனகு :  அட என்ன குரளி வித்தை காட்றாங்களா..நான் இப்பயே போய் பாக்குறேன்... யாரை யாருய்யா கூப்பிட்டாங்க.. 

ரெங்கு : ஞானதேசிகன் நம்ம பாரதிராஜாவை காங்கிரஸ்க்கு கூப்பிடுறார்ய்யா...

கனகு : யாருய்யா அது ஞானதேசிகன் அவரு என்ன ராகுல்காந்தியா..?? ஆமா அவருக்கு காங்கிரஸ் கட்சி மேல அவ்வளவு என்ன கோவம்..??

ரெங்கு : யோவ் அவர் தானய்யா தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்.. அவருக்கு என்னய்யா கோவம் இருக்க போகுது அவர்தானய்யா மாநிலதலைவர்.

கனகு : பின்ன இவர் தான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட கூடாதுன்னு பிரச்சாரம் பண்ணார். இவரை கூப்பிடுறாரே அதான் கேக்குறேன்... அதுக்கு பாரதிராஜா என்னய்யா சொல்றார்..?!

ரெங்கு : காமராஜரையே தோற்கடிச்சி இருக்காங்க...அதனால இவருக்கு அரசியல்ன்னா பயமாம்...

கனகு : ஆமா இவர் அப்படியே காமராஜர் போயா போ... ஆமா கள்ளுல அதிகம் கிக் இருக்கா பிராந்தில அதிகம் கிக் இருக்கான்னு பார்க்கலாமா ரெங்கு..?? 

ரெங்கு : இதுல எல்லாம் கிக் இருக்கான்னு எனக்கு தெரியாது ஆனா நான் எட்டி ஒன்னு உதைச்சா அதுல இருக்கும் பார் ஒரு கிக்... அதுவேணுமா..??

கனகு : யோவ் நான் கேட்கலையா கள் இறக்கும் இயக்கம் கேக்குறாங்க.. அதான் ஒரு டெஸ்ட் டிரைவ் போலாம் பார்த்தேன்.. 

ரெங்கு : ஏம்ப்பா நான் தெரியாம தான் கேக்குறேன்.. தென்னைல எல்லாமே வியாபாரம் செய்றாங்க போதிய அளவு வருமானம் வருது. இருந்தாலும் ஏன் இவங்க இந்த கள்ள பிடிச்சு தொங்குறாங்க.. கள்ளு இறக்க அனுமதி கொடுத்தா கள்ளச்சாராயம் சேர்ந்து ஓடும். அப்பறம் விஷசாராயம் குடித்து பலின்னு வரும் தேவையா..

கனகு : யோவ் நிறுத்து நிறுத்து.. அரசுக்கு பெரிய வருமானம் இழப்பு வரும் போல... ஏற்கனவே கஜானா காலியா இருக்கு இதுல அந்த வருமானமும் போய்டும் போலயே.... 

ரெங்கு : கள்ளு குடிச்சா நீ கல்லு தன் உடைக்கணும் ராசா..

கனகு : நான் வரலையா இந்த ஆட்டத்திற்கு... அண்ணாச்சி சீக்கிரம் கள்ளு போடுங்க "சாரி சாரி டீ டீ" 


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


2 comments:

Unknown said...

நல்ல நகைச்சுவையான பேச்சு வார்த்தை தோழரே

saidaiazeez.blogspot.in said...

ஹைடெக் பார்க்கிங் வேற வரப்போகுதாம். முதலில் பார்க்கிங் செய்ய இடத்தை ஏற்பாடு பண்ணி பிறகு கட்டணம் வசூலித்தால் நன்றாயிருக்கும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes