Friday, November 29, 2013

தேசிய அளவிலான தேர்வுகளும்...இந்தி மொழி திணிப்பும்...!




இன்றைய நிலையில் தேசிய அளவிலான எல்லா தேர்வுகளின் கேள்வித் தாள்களும் இரு மொழிகளிலேயே அச்சிடப் படுகின்றன. முதன்மையாய் ஆங்கிலம், இரண்டாவது இந்தி. போட்டி தேர்வுகளில் இவ்விரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால் அதிகம் பாதிக்கப் படுவது நம் தமிழக மாணவர்கள் மட்டும்தான். அதுவும் முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்று போட்டித் தேர்வுக்கு முயலும் மாணவர்கள்தான்.

எப்படி என்று கேட்பவர்களுக்கு. இந்தி நம் தேசிய மொழி என்ற தவறான எண்ணம் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா தனது அலுவலக மொழியாக மாநில வாரியாக இருபத்தி இரண்டு மொழிகளை ஏற்றுள்ளது. ஆங்கிலம் எல்லா மாநிலங்களிலும் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது. இப்படி இருக்க ஏன் இந்தியில் மட்டும் கேள்வித்தாள் அச்சிட என்ன காரணம்.

இந்தியாவின் மொத்த மாநிலங்களில் வெகு சில தவிர மற்றவை இந்தி மற்றும் இந்தி சார்பு மொழிகளையே தாய் மொழியாகக் கொண்டுள்ளது. அந்த அனைத்து மாநிலங்களிலும் இந்தி மிக நெருங்கிய மொழி. வட மாநிலங்கள் அனைத்துக்கும் இந்தி இன்றியமையாதது. அதுபோல் தென் மாநிலங்களிலும் தமிழகம் தவிர இந்தி எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடம் ஆக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தி கற்காதவர்கள் என்பது இல்லாத நிலை உருவாக சாத்தியக் கூறுகள் அதிகம்.

இப்படி இந்தியா முழுவதும்தமிழகம் தவிர்த்து  ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி கற்கப் படுகிறது என்றால் அது இந்திதான். இதன் காரணமாக தேர்வுத் துறைகளும் போட்டித் தேர்வுகளை தீர்மானிக்கும்போது பொதுவான மொழி என்ற வரிசையில் ஆங்கிலத்தை முதலிலும், இரண்டாவதாக இந்தியையும் தெரிவு செய்கிறது.

இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது, இந்தி என்பதும் மற்ற மாநிலங்களை பொறுத்தவரை பயிற்று மொழி, ஆனால் இது மூன்று முதல் ஐந்து மாநிலங்களுக்கு தாய் மொழியாக இருக்கும் பட்சத்தில் இது எப்படி நடுநிலையான நிலைப்பாடாக அங்கீகரிக்க முடியும்.

எப்பொழுதோ போராடி இந்தியை வேண்டாம் என்று சொன்னது நீங்கதானே என்று கேட்பவர்களுக்கு. அது எப்படியோ போகட்டும் இந்த பதிவில் அதை பற்று நான் பேச விரும்பவில்லை. காரணம் எங்கு எனது நிலைப்பாடு பொதுவான போட்டித் தேர்வு என்று ஆனபிறகு சில மாநிலங்களின் தாய் மொழியிலும் தேர்வுக்கான கேள்விகள் ஆச்சிடப்படுவது எந்த வகையில் நியமான விசயமாய் இருக்க முடியும். அவர்களுக்கு அது எழிமையாய் அமைந்து விடாதா.

இதற்க்கு மாற்று வழி என்று ஏதேனும் உண்டா..

முதல் வழி தேசிய அளவிலான அனைத்து போட்டித் தேர்வின் கேள்வித்தாள்களும் பொதுவான ஒரே மொழியிலேயே அச்சிடப் படவேண்டும். இதியாவில் நிலவும் பல மொழி நிலையில் இதற்க்கான சாத்தியம் ஆங்கிலத்தை பொதுவாய் தேர்ந்தெடுப்பது மட்டுமே..

இரண்டு : அவ்வழி கூடாதெனில் எல்லா மாநில பொதுப் பணித்துறையினருடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட இருபத்து இரண்டு மொழிகளிலும், மாநில வாரியாக ஆங்கிலத்துடன் இணைந்ந்து ( இப்போது ஆங்கிலம் இந்தி இருப்பது போல், ஆங்கிலம் நிலையாய் இருக்க மாநில வாரியாக இரண்டாம் மொழி அம்மாநிலத்தின் தாய் மொழியில்) இரண்டாம் மொழியை மாநிலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்து தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இதுவே சரியான நேர்மையான ஒரு போட்டித்தேர்வு நடத்த வழி ஆகும்.

 இப்படி நடக்கும்போது மட்டுமே அதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் உண்மையாய் அவர்கள் திறமையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாய் அங்கீகரிக்கப்படுவர். அதுவரை அதன் முடிவுகள் அனைத்தும் ஒரு பெரும் கூட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாய் அறியப்படும்.


       கழுகிற்காக
கௌதமன் ராஜகோபால் 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)  
  

1 comments:

saidaiazeez.blogspot.in said...

//முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்று போட்டித் தேர்வுக்கு முயலும் மாணவர்கள்//

//இதியாவில் நிலவும் பல மொழி நிலையில் இதற்க்கான சாத்தியம் ஆங்கிலத்தை பொதுவாய் தேர்ந்தெடுப்பது மட்டுமே..//

இந்த இரு கருத்துக்களும் நேரெதிராக உள்ளனவே கௌதமன். தமிழ் வழியில் கற்றவர்கள் எப்படி ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது? நாம் ஹிந்தி வேண்டாம் என்று கூறிவிட்டு ஆங்கிலத்திற்கு அடிமைகளாகிவிட்டோம். ஆனாலும் ஹிந்தி எதிர்ப்பு நடத்தியவர்கள் எல்லாம் ஹிந்தியில் புலமை பெற்று மத்தியில் பல சலுகைகளையும் பேற்றுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே!
செந்தமிழ் எனும்போது தேன் வந்து தன் காதில் பாய்வதாக கூறிய பாரதிக்கு பல மொழிகளில் புலமை இருந்தது என்பதை நாம் மறந்துவிட்டோம். இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழை அரசியலாக்குவோம்?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes