Monday, September 10, 2012

தொடை நடுங்கிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாதம்...!


அடிப்படை நாகரீகம் தெரியாதவர்கள் சிங்களவர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். இந்தியாவின் இலங்கை ஆதரவுப் போக்கிற்கு ஜெயலலிதாவின் அரசு எதிராய் திரும்பி நிற்க வேண்டிய காலச் சூழலை தமிழக மக்கள்  உருவாக்கி இருக்கிறார்கள்.. ஈழப்போரில் கொல்லப்பட்ட ஏராளமான உயிர்கள் இன்னமும் தமிழக மக்களின்  மனதில் இருந்து மறையவில்லை.  ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த கணத்திலிருந்தே  ஜெயலலிதா இதை சரியாய் கணித்து வைத்திருந்தார்.

மூவர் தூக்கிற்கு எதிராய் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதில் இருந்து தொடர்ச்சியாய் ஈழ விசயத்தில் மிகவும் கவனமாய் காய் நகர்த்தி சென்று கொண்டிருக்கும் அம்மையார் அது தனது அரசியல் எதிர்காலத்திற்கு சரியாய் உதவும் என்பதையும் கணித்தே வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் என்றாலே பிடிக்காத ஜெயலலிதாவின் ஈழப்பாசத்தால் அதிர்ந்து போனவர்களில்  மிக முக்கியமானவர்களில் ஒருவர் கலைஞர், மற்றொருவர் இலங்கை அதிபர் ராஜபக்சே....!

திமுகவின் அரசியல் வரலாற்றில் எப்போதுமே தனித் தமிழ் ஈழத்திற்காக ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறார்கள். அந்தக்கால டெசோ  பேரணியால் தமிழகமே ஸ்தம்பித்துப் போய் குலுங்கியது எல்லாம் வரலாறு. 1989ல் திமுக ஆட்சியை இழந்தற்கு காரணமே விடுதலைப்புலிகளுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவுதான் என்று சமீபத்தில் அதிமேதாவி சுப்பிரமணிய சாமி பேட்டி கூட அளித்திருந்தார். திமுகவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் தங்கு தடையின்றி தமிழகம் வந்தனர், உதவிகளை பெற்றனர் இது யாவும் உண்மையே...!

இப்படியான அரசியல் வரலாற்றை கொண்ட திமுகழகம் மூன்றாம் கட்ட ஈழப்போரின் போது காங்கிரஸின் கிடுக்குப் பிடியில் மாட்டிக் கொண்டு வாய் திறந்து பேசமுடியாமல் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுப் போனது. ஈழத்தில் கொலைவெறியாட்டம் நடந்து மக்கள் கொன்று குவிக்கப்படுகையில் அப்போதைய தமிழக அரசு தனது ஆதரவை வாபஸ் வாங்கி இருந்தாலோ, அல்லது தனது எம்.பிக்களை எல்லாம் ராஜினாமா செய்து இருந்தாலோ, அழுத்தமான போரட்டங்களை நடத்தி இருந்தாலோ அல்லது... அப்படி நடத்தியபவர்களுக்கு உதவி இருந்தாலோ...

ஜெயலலிதா இந்த முறை முதல்வர் பதவியில் ஏறி இருக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

காலம் எல்லாவற்றையும் மாற்றி எழுத இன்று ஏழரை கோடி தமிழக மக்களுக்கு முதல்வராய் இருக்கும் ஜெயலலிதா, தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் ராஜபக்சே என்னும் அரக்கனின் உறக்கத்தை பறித்துக் கொண்டுவிட்டார் என்பதுதான் உண்மை. தமிழர் உணர்வினை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசின் செயல்பாடுகள் ஜனநாயக ரீதியாய் செயல்படுத்தப்படும் போது பயந்துதானே ஆகவேண்டும்.

கழுத்தில் துப்பாக்கி இருக்கும் ஒருவன் உயிருக்கு பயந்தாவது சில நிலைப்பாடுகளை எடுத்துதானே ஆகவேண்டும். தமிழக அரச தலைமையின் கழுத்தில் தமிழர்களின் இன உணர்வு என்னு துப்பாக்கி அழுத்திக் கொண்டிருக்க....தொடர்ச்சியான சிங்கள எதிர் நடவடிக்கைகள் தமிழகம் முழுதும் ஆர்ப்பரித்து எழ.....

கலைஞரும் தனது பங்கிற்கு கை விடப்பட்ட டெசோவை தூசி தட்டி எடுத்து உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை எல்லாம் அழைத்து.....ஒரு மாநாட்டினை நடத்தி அதன் அறிக்கையை இந்திய அரசுக்கு கொடுத்ததோடு அல்லாமல் ஐ.நாவிலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய....

ஆடிப்போனான் அயோக்கிய சிங்கள பெளத்த பேரினவாத அரசின் தலைவன் ராஜபக்சே. 

தமிழ்நாடு உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறது என்ற செய்தியை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தின் இரண்டு பெரும் தலைவர்கள் நடந்து கொண்டிருப்பது அரசியலுக்காய் ஆனாலும் சரி.....இல்லை உண்மையாய் இருந்தாலும் சரி.....சர்வநிச்சயமாய் பாரட்டப்படவேண்டிய செயல்கள் இவை.

இந்தியாவோடு பகடி  செய்து கொண்டிருந்த ராஜபக்சேயின் கண்களில் தைத்த முள்ளாக ஜெயலலிதாவின் அதிரடி தீர்மானங்களும், கலைஞரின் டெசோ மாநாடும்  அமைந்து போனது என்பதை மறுக்க முடியாது.. இதுவரை தமிழகத்தை ஆண்ட, ஆளும் முதல்வர்கள்....ஈழம் பற்றி பேசுகிறார்கள்,  ராஜபக்சே  என்னும்  அரக்கனை வெறுக்கிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட சுய விருப்பம் அல்ல....அது ஏழரை கோடி தமிழர்களின் உயிர் மூச்சு.. என்பதை நடுவண் அரசு இப்போது உணர ஆரம்பித்திருக்கிறது. 

சமீபத்தில் சென்னை வந்த கால்பந்தாட்ட வீரர்களை திருப்பி அனுப்பியதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழக முதல்வர் இப்போது சிம்ம சொப்பனமாகி இருக்கிறார். எரிச்சல் அடைந்த சிங்களவன், ஊடக தர்மங்களை எல்லாம் கடாசி எறிந்து விட்டு ஆபாசமாய் தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் வரைந்து கருத்துப் படம் எல்லாம் போடுகிறான். அதுவும் சிங்கள அரசின் பரிபூரண ஆதரவு ஊடகத்தின் மூலம்....! இவ்வளவு கீழ்த்தரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ராஜபக்சேயின் ஊடகத்துறையை வல்லரசு இந்தியா கண்டிக்குமா இல்லை வழக்கம் போல டர்பனுக்குள் மானத்தை மறைத்துக் கொண்டு பல்லிளிக்குமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!

ஈழப்பிரச்சினையில் தமிழகத்தின் இரு பெரும் தலைமைகள் ஒத்த நிலைப்பாடு கொண்டதற்கே தொடை நடுங்கிப் போயிருக்கும் சிங்கள பேரினவாதம், இரு கட்சிகளும் ஒன்றாய் நின்று போராடினால் என்ன நிலைமைக்குத் தள்ளப்படும் என்று எண்ணி பார்க்கையில்...சிரிப்புதான் வருகிறது...?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கலைஞரும், ஜெயலலிதாவும் மட்டுமே ஈழ விசயத்தில் தொடர்ந்து பாரிய அழுத்தங்களைக் கொடுத்து... இந்திய அரசின் நிலைப்பாட்டினை அடிமேல் அடி வைத்து மாற்றி எழுத முடியும்...! தமிழ், தமிழ் என்று பேசிக் கொண்டிருப்பவர்களும், தனித்தமிழ் ஈழம் வேண்டும் என்று மேடை தோறும் முழங்குபவர்களும்,  இந்திய அரசியலில் கடுமையான ஆளுமையைக் கொண்ட இந்த இரு பெரும் தலைவர்களை ஈழத்திற்காக ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, தமிழர்களின் உணர்வினை எல்லாம் திரட்டி ஒரே முனையில் நிறுத்தும் போது தமிழ் ஈழம் அமைவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உருவாகித்தான் ஆகவேண்டும்.

ஈழத்தை அரசியலாய் பார்க்காமல் அவசியமாய் அரசியல்வாதிகள் பார்க்கவேண்டுமெனில், வலிமையான ஆளுமையான தலைவர்கள் பிரச்சினையை முன்னெடுத்துச்  செல்ல எல்லா வகையிலும் தமிழக மக்களும் உதவியாய் இருக்க வேண்டும். அரசின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மட்டுமே சிங்களவனை ஒடுக்கி நம் உறவுகளுக்கான ஈழ மண்ணை வென்றெடுக்க முடியும். இதை விடுத்து சுற்றுலா வரும் பயணிகளையும், ஆன்மீக பயணம் வருபம் சாதரண சிங்களப் பொது மக்களையும் தாக்கி அழித்து வெறியாட்டம் ஆடினால்.. அது எந்த வகையிலும் நமக்குப் பயனளிக்காமல் மேலும் அசாதாரண சூழலை ஈழ மண்ணில் ஏற்படுத்தி விடும் என்பதையும் அறிக;

எழுத்திலும், பேச்சிலும், மூச்சிலும், ஈழத்தை நமது உணர்வாகக் கொண்டு அறிவாயுதம் ஏந்துவோம்....! தமிழரெல்லாம் ஒன்று கூடி தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம்...!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



4 comments:

Unknown said...

கட்டுரை அருமை! உண்மையான கருத்துக்கள்! இந்த கருத்தின் அடிப் படையிலே தான் இரண்டுநாட்களுக்கு முன் என் வலையில் கவிதை ஒன்று எழுதி இருந்தேன்

அருள் said...

இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க.

http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html

Rabbani said...

ஈழம் மக்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டும் அம்மக்களின் மீது உண்மையான அக்கரையிலும் எழுதப்பட்ட அருமையான கட்டுரை

Rabbani said...

////ஈழத்தை அரசியலாய் பார்க்காமல் அவசியமாய் அரசியல்வாதிகள் பார்க்கவேண்டுமெனில், வலிமையான ஆளுமையான தலைவர்கள் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல எல்லா வகையிலும் தமிழக மக்களும் உதவியாய் இருக்க வேண்டும்.////
தமிழக மக்கள் அவசியம் உணர்ந்து செயல்படவேண்டிய கருத்து

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes