Tuesday, September 07, 2010

தேனம்மையுடன் ஒரு நேர்முகம்....



கழுகு கொஞ்சம் லேட்டாக வந்ததற்கு முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே சொன்னது... எல்லா நேரமும் ஃப்ரியா இருக்க முடியுமா? சில நேரங்களில் வேலைப்பளு அதிகம் சலித்துக் கொண்டது கழுகு அதன் பிண்ணனியில் உண்மை அதிகம்... ஜில்லென்று பருகிய குளிர்பானத்துக்கு பிறகு... சும்மா உக்காந்துகிட்டு இருக்காம... சும்மா ஜம்முனு பேட்டியை போடுங்க.. சும்மா கலக்கலா இருக்கும் பாருங்க.. பேட்டியை வாங்கி சும்மா பார்த்தோம்.............



கவிதைகளிலும் கருத்துக்களிலும் தெளிவான பார்வை கொண்ட...தேனம்மை லெக்ஷ்மணன் .. தன்னுள் பரவியிருக்கும் கருத்துக்களை ஒரு மகிழ்ச்சியின் செய்தியாய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்...! எல்லோரையும் குறைவில்லாமால் நேசிக்கும் தேனம்மையின் கவிதைகள் எல்லாம் எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பவை. புதியாய் வந்து எழுதுபவர்கள் கண்டிப்பாய் தேனம்மையின் தளத்தில் கற்றுக் கொள்ள நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை... தேனம்மையின் பேட்டி இதோ உங்களுக்காக...

1 )
சும்மானு எப்படி ஒரு தலைப்பு வச்சீங்க...உங்க வலைப்பக்கத்துக்கு ?

சும்மா வீட்டுல வெட்டியாதானே இருக்கோம்னு சிம்பாலிக்கா வைச்சேன் கழுகாரே.


2) சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்?
பாட்டுப் பாடுவேன்.. டான்ஸ் ஆடுவனான்னு கேக்காதீங்க..

சின்னப் பிள்ளைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்பேன்..




3) உங்கள் கணவர் உங்கள் பதிவுகளைப் பற்றி என்னசொல்லுவார் ?
படிச்சாதானே சொல்றதுக்கு..:)) எப்பாவாவது படிக்க நேர்ந்தால்.. ( அதாவது நாம லாப்டாப்பை கண்ணுக்குக் கிட்ட கொண்டு காமிச்சால் ) நல்லா இருக்கு என்பார்..:))




4) பெரும்பாலும் உங்கள் கவிதைகளுக்கு கருவாக இருப்பது எது ?


அன்பு., காதல்., பாசம்., வெறுப்பும் விரக்தியும் கூட



5) சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா ?


தவறான தகவல் பரப்பும் ஊடகங்கள்., அழகிகள் கைது என வரும் ஃபோட்டோக்கள்.. (அப்ப அழகன்கள் படங்களையும் போடவேண்டியதுதானே..)., மேலும்., பார்த்தாலே வளைந்து விடுவது போல் இருப்பவர்களை.. சம்பந்தமே இல்லாத கேஸில் சாராய கேன்களோடு உக்கார வைத்து படம் போடுவது..
., அடுத்தவர்கள் படுக்கை அறைவரை சென்று விஷயம் பரப்பும் மீடியாக்களும் அதை ஆதரிக்கும் பொது மக்களும
Justify Full6) நகர வாழ்க்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


கிராம வாழ்க்கை ஆனந்தம் என்றால்.. நகர வாழ்க்கை முன்னேற்றம் என நினைக்கிறேன்



7) பெண் பதிவர்களை கிண்டல் செய்து பதிவு வருகிறதே அதை பற்றி?


எழுதுமுன் யோசிக்க வேண்டும்.. மிதமான கிண்டல் படைப்புகள் பற்றி என்றால் பரவாயில்லை.. தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.


8) பெண் பதிவர்கள் என்றால் சமையல் குறிப்பு கவிதை இது மட்டுதான் எழுத வேண்டுமா?


ஏன் ரோஹிணி சிவா மருத்துவப் பதிவுகள் எழுதுகிறார்.. துளசி கோபால் சுற்றுலாபற்றி., விக்னேஷ்வரி இண்டீரியர் டெக்கரேஷன் மற்றும் ஃபாஷன் பற்றி., ஜெசி விதம் விதமான இடங்கள்., மர வீடுகள் மரங்கள் பற்றி ., ராமலெஷ்மி ஃபோட்டோகிராஃபி பற்றி பகிர்கிறார்கள்..

ஒவ்வொருவரின் ஆர்வத்தைப் பொறுத்தது .




9) பூ பற்றி நிறைய எழுதி இருக்கீங்க.... இப்போ ஒரு கவிதை சொல்ல முடியுமா கழுகை பற்றி ?

ராஜாளி.,
உயர்வின் சிறப்பை உணர்ந்து ...
உயர உயர பறந்து..




10) பதிவுலகில் பெண்களின் நிலை பற்றி உங்கள் கருத்து ?


நல்ல ஆரோக்கியமாதான் இருக்கு.




11) செட்டி நாடு பகுதியை சேர்ந்தவர் நீங்கள்.....அது பற்றிஒரு கேள்வி...பெரிய பெரிய வீடுகள் கட்டி விட்டு இன்று அவை இன்று யாரும் இல்லாமல் வெறுமனே கிடப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?


வருத்தம் தரும் நிகழ்வுதான்,, என்ன செய்ய,, வேலை காரணமாக., அல்லது வறுமை காரணமாக விட்டுச் செல்லப்படும் வீடுகள் அன்றைய பெருமையின் சாட்சியாக.
வீடுகள் மட்டும் தனித்து விழித்து இருக்கின்றன.... உயிரோட்டம் இல்லாமல்.




12) கவித்துவமாய் இருக்கும் நீங்கள்...எதார்த்த வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறீர்கள் ?



எல்லாம் இலகுவாகவே அமைந்து விட்டது.. எந்தப் போராட்டமும் இல்லாமல்...
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலால் இப்போதுதான் சிறிது சிரமப் படுகிறேன்




13) மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன?


வெறுப்பது அன்பற்ற தன்மை.. ரசிப்பது ., ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதுதான்.




14) புத்தகம் வலைபதிவு இரண்டையும் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் ?


புத்தகம் அதிகம் பேரை சென்றடைகிறது.. வலைப்பதிவு என்றைக்கு இருந்தாலும் பார்க்கப்படும் ஒரு சௌகர்யத்தில் உள்ளது..( நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்)



15) தனியாக ஒரு பெண்களுக்கான இதழ் ஒன்று நடத்துவதாக அறியப் பெறுகிறோம்....அது பற்றி கொஞ்சம் கூறுங்கள்?


நான் நடத்தவில்லை.. பெண்களுக்கான இதழான லேடீஸ் ஸ்பெஷல் என்ற மாதந்திரி திருமதி கிரிஜா ராகவனால் நடத்தப் படுகிறது.. அதில் சில விஷயங்கள் என் பொறுப்பாக இருக்கிறது.. அவ்வளவே.. அதில் நம் வலையுலக சகோதரிகளை அறிமுகப்படுத்துதல்... ஷேர் மார்க்கெட் சம்பந்தமான பேட்டி., யங் லேடீஸ் கவிதைப்போட்டி., ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதைகள்., புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்துதல்.. என ..



16) பொதுவாக பெண் பதிவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


ஏகப்பட்ட பேர் நல்லா எழுதிக்கிட்டு இருக்காங்க.. எனவே எந்த சந்தர்ப்பத்திலும் எழுத்தைமட்டும் விட்டுடாதீங்கன்னு சொல்ல நினைக்கிறேன்



17) கல்லூரி காலங்களில் கவிதை எழுதியதுண்டா...ஆம் எனில் ஒன்று சொல்லுங்கள்....
நிறைய..
பயணம்..
*************
அரிக்கேன் விளக்கு...
யாருடன்
யாருக்காக .,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்
என்பது புரியாமல்.,
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
எந்தக் கரத்திலோ
வளையமாய்த் தொற்றிக்கொண்டு.,
எந்த மாட்டுவண்டியிலோ
எதிர்க்கூதலில் ஆடிக்கொண்டு.,
இருளைத்தேடி..
இருளைத்தேடி..
முன்னே பரவும்
வெளிச்ச வட்டத்தைப் பிடிக்க...
பாலைவன மண்வீச்சுகளுக்குள்..
சிகப்பு வளையமாய்..
தூரப்புள்ளியாய்..
செவ்வாய்க் கோளாய்..
திரிக்குள் ஒளிரும்.,
கண்ணாடிக்குள் ஜ்வல்லிக்கும்
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
யாருடன்.,
யாருக்காக.,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்..
என்பது தெரியாமல்...



18) சமையல் செய்வது என்பது பெரும்பாலும் பெண்கள் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது...இது சரியா?
வீட்டில் மட்டும்தான் பெண்கள்.. விருந்து வைபவங்களில் ஆண்கள்தானே சமைக்கிறார்கள்..

ஆண்கள் கற்றுக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..:))




19) எழுத்துலகில் உங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?


ஜோசியம் சொல்லதெரியவில்லை..
இதே போன்ற மொக்கைகளை முடியும் வரை வழங்கிக் கொண்டிருப்பேன் என உறுதியளிக்கிறேன்



20) உங்களின் ஒரு ஆசை நிறைவேற்றப்படும் என்ற வரம் கிடைக்கிறது எனில் எதை வேண்டுவீர்கள்
?



ஒரு குடும்பத்தலைவியா என் பிள்ளைகள் சிறப்பா நீடூழி வாழணும்னு வேண்டிப்பேன். ஒரு வலைப்பதிவரா என்னுடைய கவிதைகள் புத்தகங்களா வந்து பலரையும் சென்றடையணும் வெற்றியடையணும்..என்று வேண்டிக்குவேன்.


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

21 comments:

செல்வா said...

///
(அப்ப அழகன்கள் படங்களையும் போடவேண்டியதுதானே..).///
இது யோசிக்கப்படவேண்டியது தான் ...

செல்வா said...

///ஒரு வலைப்பதிவரா என்னுடைய கவிதைகள் புத்தகங்களா வந்து பலரையும் சென்றடையணும் வெற்றியடையணும்..என்று வேண்டிக்குவேன்.///

நிறைவேற வாழ்த்துக்கள் ..!!

Chitra said...

அக்கா, ஒவ்வொரு பதிலிலும் உங்கள் முத்திரையை பதிச்சு சொல்லி இருக்கீங்க..... உங்கள் கவிதைகளும் கருத்துக்களும் என்றுமே கலக்கல்தான்.

இம்சைஅரசன் பாபு.. said...

//வெறுப்பது அன்பற்ற தன்மை.. ரசிப்பது ., ஒருவருக்கொருவர் அன்பாக
இருப்பதுதான்.//
அத்தனை பதில்களிலும் என்னை பெரிதும் ஈர்த்த பதில்

Prathap Kumar S. said...

//புத்தகம் அதிகம் பேரை சென்றடைகிறது.. வலைப்பதிவு என்றைக்கு இருந்தாலும் பார்க்கப்படும் ஒரு சௌகர்யத்தில் உள்ளது..( நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்)//

புத்தகங்களும் எழுதியவர் இல்லாவிட்டாலும் மக்களை சென்றடைகிறது.
சுஜாதா,சுரா..இன்னும் பலபேர்...
எதில் எழுதுகிறோம் என்பது முக்கிமல்ல எப்படி எழுதுகிறோம் என்பதை பொறுத்தே வாசகர்களை சென்றடைகிறது...

ஜெய்லானி said...

தேனக்கா கவிதையைப்போலவே உங்கள் வார்த்தைகளும் அழகு

கருடன் said...

//தவறான தகவல் பரப்பும் ஊடகங்கள்., அழகிகள் கைது என வரும் ஃபோட்டோக்கள்.. (அப்ப அழகன்கள் படங்களையும் போடவேண்டியதுதானே..)., மேலும்., பார்த்தாலே வளைந்து விடுவது போல் இருப்பவர்களை.. சம்பந்தமே இல்லாத கேஸில் சாராய கேன்களோடு உக்கார வைத்து படம் போடுவது..
., அடுத்தவர்கள் படுக்கை அறைவரை சென்று விஷயம் பரப்பும் மீடியாக்களும் அதை ஆதரிக்கும் பொது மக்களும//

அருமையான பதில்....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அக்கா.. அனைத்து பதில்களும் அருமை.. அருமையான பேட்டி குடுத்த கழுகிற்கு நன்றி..

///படிச்சாதானே சொல்றதுக்கு..:)) எப்பாவாவது படிக்க நேர்ந்தால்.. ( அதாவது நாம லாப்டாப்பை கண்ணுக்குக் கிட்ட கொண்டு காமிச்சால் ) நல்லா இருக்கு என்பார்..:)) ///

ஹா ஹா.. ஒய் ப்ளட்... சேம் ப்ளட் :-))))

சசிகுமார் said...

ஒவ்வொரு கேள்விக்கும் தேனக்காவின் பதில்கள் அருமை

Thenammai Lakshmanan said...

அடுத்தவர்களுக்கும் நேரம் ஒதுக்கி உங்க வலைப்பதிவில் என்னோட பேட்டியை வெளியிட்டமைக்கு நன்றி கழுகாரே..

Ahamed irshad said...

நல்ல கேள்விகள் அதற்குதகுந்த அருமையான பதில்கள்..சிறப்பான பதிவு..

pinkyrose said...

பேட்டி அருமை ...

கவிதை அதிலும் கழுகிற்கான கவிதை நல்லார்க்கு

'பரிவை' சே.குமார் said...

அக்கா, உங்கள் கவிதைகளும் கருத்துக்களும் என்றுமே கலக்கல்தான்.

ப்ரியமுடன் வசந்த் said...

பதில்கள் அருமை தேனம்மா வாழ்த்துகள்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பேட்டி..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஒய் ப்ளட்... சேம் ப்ளட் :-)))) //

இதை தான் பின்னூட்டமா போட நினைத்தேன். ஆனந்தி போட்டுட்டாங்க
ஏன் ப்ளட் சேம் ப்ளட்; ஸோ மெனி சேம் ப்ளட்;

ஹுஸைனம்மா said...

அக்கா, உங்களின் பன்முகத் திறமைக்கு வாழ்த்துகள்!!

Jaleela Kamal said...

தேனக்க்கா உங்கள் பேட்டி தேனை போலவே இனிக்கிறது

ஸாதிகா said...

உங்களைப்போலவே "பளிச்"பதில்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கேள்விகள். நல்ல தேர்ந்தெடுத்த சரியான பதில்கள்.
வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

தேனக்காவின் தேனான பதில்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes