Monday, February 07, 2011

விவசாயம் - ஒரு ஆழமான பார்வை...!


பதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் அடங்கிய வலைப்பூக்கள் மிகைப்பட்டவர்களின் பார்வைக்கு வராமலேயே உறங்கிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.




சமூக அக்கறை கொண்ட பதிவுகளை தூசு தட்டி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் இன்னும் நிறைய பேர்கள் அறியவேண்டும் என்ற நோக்கிலும், நல்ல எழுத்தாளர்களை எல்லாம் ஊக்குவிக்கும் ஒரு நேர் சிந்தனையிலும்... இந்த களப்பணியில் கழுகு இறங்கியுள்ளது.




கழுகின் குழும நண்பர்கள் உறுதுணையாய் இருந்து கழுகின் ஒவ்வொரு அடிக்கும் உறுதுணையாய் இருப்பதை நன்றிகளோடு நினைவுகூறும் இந்த தருணத்தில் ஒத்த கருத்துள்ள புதிய நண்பர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறது.




விவசாயத்தினைப் பற்றிய தெளிவான கட்டுரை சமைத்துள்ள தோழர் சதீஷ் அவர்கள் ஈரோட்டை சேர்ந்தவர். இவரின் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிப்பதில் கழுகு பெருமையடைகிறது.

விசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, "ஒரு நிலம்", மற்றும் கலாச்சாரம், "சாகுபடி" ஆகியவை "நிலத்தில் பயிரிடுதல்" என்ற அர்த்தத்திலேயே வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த வார்த்தைக்கான நேரடி அர்த்தம் "நிலத்தில்/நிலங்களில் பயிர்செய்தல்" என்பதாக இருக்கிறது.


வேளாண்மை (அல்லது விவசாயம்) என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தாவரங்களின் உதவியைக் (பயிர்கள்) கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட முக்கியமான வளர்ச்சியாகும். உணவு உபரிகளை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள்தொகை அடுக்கு கொண்ட சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது.விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது (இது சார்ந்த தாவரவளர்ப்பு என்பது தோட்டக்கலை எனப்படுகிறது

கால்வாய்களை வெட்டுதல் மற்றும் மற்ற வகையிலான நீர்ப்பாசனம் மூலம் தாவர வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது.

இதன் வளர்ச்சி 10,000 கி மு ஆண்டுகள் என்பதால் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன,
ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. விவசாய வரலாறு மனித வரலாற்றில், உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் நிலையில், விவசாய முன்னேற்றம் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். காட்டுவாசி கலாச்சாரங்களில் அரிதாக இருக்கும் வளம்-மையப்படுத்தல் மற்றும் ராணுவமய சிறப்புக்கூறுகள்

விவசாய சமூகங்களில் பொதுவானதாக இருக்கின்றன. இவை காவிய இலக்கியம் மற்றும் நினைவுச்சின்ன கட்டிடக்கலை போன்ற கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.


சாகுபடி செய்யக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்து வளர்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன. கடந்த நூற்றாண்டில் விவசாயத்தின் பல்வேறு வடிவங்களை அடையாளம் கண்டு அளவிட நிறைய பிரிவுகள் இருந்துள்ளன. இப்பிரிவுகள் வழக்கமாக நீடிக்கக்கூடிய விவசாயம் (எ.கா. விவசாய முறை அல்லது ஆர்கானிக் விவசாயம்) மற்றும் வலுவான பண்ணையிடல் (எ.கா.தொழில்துறை விவசாயம்) ஆகியவற்றிற்கிடேயேயான உறவுமுறையை நீடிக்கிறது.


நவீன உழவுமுறை, தாவர வளர்ப்பு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை சாகுபடியிலிருந்து கிடைக்கும் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளன, அதே நேரத்தில் பரவலான சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பாதகமான மனித ஆரோக்கிய விளைவுகளுக்கும் காரணமாகியுள்ளன. [மேற்கோள் தேவை] தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை மற்றும் விலங்கு வளர்ப்பில் நவீன பயிற்சிகள், அதாவது மும்முரமான பன்றி வளர்ப்பு (இதுபோன்ற பயிற்சிகள் கோழி வளர்ப்பிற்கும் பொருந்துகிறது) இறைச்சியின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆனால் இது விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்ற கருத்தை அதிகரிக்கச் செய்வதோடு, நோயெதிர்ப்புத் திறன் குறித்த உடல்நலப் பிரச்சினை, ஹார்மோன் வளர்ச்சி மற்றும் தொழில்சார் இறைச்சி உற்பத்தியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் குறித்த பிரச்சினையையும் அதிகரிக்கச் செய்கிறது.


பிரதான விவசாய உற்பத்திப் பொருட்களை உணவுகள், இழைமங்கள், எரிபொருள்கள், மூலப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் ஊக்க மருந்துகள், மற்றும் ஒப்பனை வகைகள் அல்லது அயல்நாட்டு பெஞ்சட் பொருட்கள் என பலவாறு வகைப்படுத்தலாம். இரண்டாயிரமாவது ஆண்டுகளில் தாவரங்கள் இயற்கை எரிபொருள்கள், இயற்கை மருந்துப்பொருள்கள், இயற்கைபிளாஸ்டிக்குகள் மற்றும் மருந்துகளை வளர்த்தெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மற்றும் இறைச்சிகள் ஆகியவை குறிப்பிட்ட உணவுப்பொருட்களை உள்ளடக்கியவையாகும். இழைமங்கள் என்பவை பருத்தி, கம்பளி, சணல், பட்டு மற்றும் ஆளி ஆகியவற்றை உள்ளிட்டதாகும். மூலப்பொருட்கள் என்பவை மரத்துண்டு மற்றும் மூங்கில் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்

ஊக்கப்பொருட்கள் என்பவை புகையிலை, ஆல்கஹால், ஓபியம், கோகெய்ன் மற்றும் டிஜிடலிஸ் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. பிற பயன்மிக்க பிசின்கள் போன்ற மூலப்பொருட்கள் தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன. இயற்கை எரிபொருட்கள் பயோமாஸில் இருந்து கிடைக்கும் மீத்தேன், எத்தனால் மற்றும் பயோடீசல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.வெட்டியெடுக்கப்படும் பூக்கள், தாவர வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் வீட்டுப்பிராணி விற்பனைக்கான பறவைகள் ஆகியவை அலங்காரப் பொருட்களுள் சிலவாகும்.

2007 ஆம் ஆண்டின்படி உலகிலுள்ள தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும், பண்ணையிடல் சார்ந்த முக்கியத்துவம் தொழில்மயமாக்கல் தொடங்கியதிலிருந்து படிப்படியாக குறைந்துவருகிறது. 2003 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சேவைத்துறையானது உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்களை வேலைக்கமர்த்தும் பொருளாதாரத் துறையாக விவசாயத்தை கைப்பற்றிக்கொண்டது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை விவசாயம் வேலைக்கமர்த்திக்கொண்டுள்ள போதிலும், விவசாயப் பொருட்களின் உற்பத்தி நிகர உலக உற்பத்தியில் (நிகர உள்நாட்டு உற்பத்தியின் கூடுதல்) ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவானதாகவே இருக்கிறது


காலநிலை மாற்றம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத பிரதேசங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி விவசாயத்தை பாதிக்கும் திறனுள்ளது. விவசாயம் புவி வெப்பமடைவதை தணிக்கவோ அல்லது மோசமாக்கவோ செய்யலாம்.கார்பன்டைஆக்ஸைடு காற்றுமண்டலத்தில் அதிகரிப்பது மண்ணில் உள்ள உயிர்மப் பொருளின் சிதைவிலிருந்து வருகிறது. காற்று மண்டலத்திற்குள் உமிழப்படும் பெரும்பாலான மீத்தேன் நெற்பயிர் நிலங்கள் போன்ற ஈரமான நிலங்களில் உயிர்மப் பொருள் சிதைவடைவதால் உருவாகிறது. மேலும், ஈரமான அல்லது அனேரோபிக் நிலங்களும் நைட்ரஸ் இழப்பின் மூலமாக நைட்ரஜனை இழந்து பசுமையில்ல வாயுவான நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் பசுமையில்ல வாயு வெளியீட்டைக் குறைக்கலாம், மண்ணை மேற்கொண்டு காற்றுமண்டலத்திலுள்ள சில கார்பன் டை ஆக்ஸைடுகளைத் தனிமைப்படுத்தியாவும் பயன்படுத்தலாம்



அரசும் வேளாண்மை கொள்கையும்


விவசாயக் கொள்கை விவசாய உற்பத்தியின் இலக்குகள் மற்றும் முறைகளிலேயே கவனம் செலுத்துகிறது. இத்துடன் வியசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தின் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:


* பாதுகாத்தல்
* பொருளாதார நிலைப்புத்தன்மை
* சுற்றுச்சூழல் தாக்கம்
* உணவுத் தரம்: உணவுவளிப்பு சீராகவும் தரம் தெரிந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வது.
* உணவு தன்னிறைவு: சனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.
* உணவு பாதுகாப்பு: உணவு அளிப்பு மாசுபாடு இன்றி இருப்பதை உறுதிப்படுத்துவது.
* உணவு பாதுகாத்தல்: உணவு அளிப்பு மக்கள்தொகை தேவைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது.
* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு
* சுற்றுச்சூழல் தாக்கம்
* பொருளாதார உறுதிப்பாடு.
* வறுமை குறைப்பு


வழிமுறைகள் 

1. பருவத்திற் கேற்ப பயிர்* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு

* சுற்றுச்சூழல் தாக்கம்
* பொருளாதார உறுதிப்பாடு. செய்வது முக்கியமான முதல் படி ஆகும்

2. என்ன பயிர் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தபின் நிலத்தை தயார் செய்வது இரண்டாம் படியாகும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே எருவிட்டு நன்றாக உழ வேண்டும். பயிர் வகைக்கு தகுந்தாற்போல் பாத்தி அல்லது பார் போடுவது அடுத்த செயல் ஆகும். நெல் என்றால் நீர் வெள்ளம் போல் சுமார் ஐந்து சென்டி மீட்டெர் அளவு எப்பொழுதும் இருக்கும்படி செய்யவும்.

3. இப்பொழுது நிலம் தயார். விதைத்தல் அடுத்த செயல் ஆகும்.

கீழ்கண்டவற்றுக்கு திருத்தம் அவசியம்.

* நீர்விவசாயம் (Hydroponics)
* ஏர்கொண்டு உழுதல்
* நீர்ப்பாசனம்
* உரங்கள்
* சுழற்சிப் பயிர்
* களையகற்றல்
* வேலியிடல்
* சேதன வேளாண்மை

கழுகுகுழுமத்தில் இணைய....




கழுகிற்காக
சதீஷ் குமார் 


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 

23 comments:

எஸ்.கே said...

சிறப்பான கட்டுரை. விவசாயம் பற்றி இவ்வளவு விரிவாக எங்கேயும் படித்ததில்லை. இன்னும் உரம்/பூச்சிக் கொல்லிகள் பற்றிய தகவ்ல்கள் இருந்தால் முழுமையான விவசாயக் கட்டுரையாக அமைந்திருக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

விவசாயத்தை எவ்வளவு மேன்படுத்துரோமோ அவ்வளவுக்கு நாடு செழிக்கும் என்பதை நம்மாழ்வார் அவர்கள் கரடியா கத்திகிட்டு இருக்கார்.......எவன் கேக்குறான்.....!!!!
இப்போ தமிழ்நாட்டு கவலை என்னன்னா ஸ்டாலின் ஊக்கை முழுங்கிட்டாராம்...[ப்பூப்ப்]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விரிவான தேவையான அலசல். உரம்/பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயம் பற்றி ஒரு கட்டுரை எழுதிட நண்பர் சதீஷ் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

karthikkumar said...

நல்ல ஒரு விரிவான பதிவு .....

Sathish said...

கழுகு தளத்திற்கு எனது நன்றிகளை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

Sathish said...

//நல்ல விரிவான தேவையான அலசல். உரம்/பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயம் பற்றி ஒரு கட்டுரை எழுதிட நண்பர் சதீஷ் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்//

அம்புட்டுதானே எழுதிபுடுவோம்..

மங்குனி அமைச்சர் said...

நல்லா தெளிவா எழுதி இருக்கீங்க சதீஷ் குமார்

இம்சைஅரசன் பாபு.. said...

விவசாயத்தினை பற்றி நல்ல அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சதீஷ் ..அற்புதம்

arasan said...

விரிவான அலசல் ...
நல்ல கருத்தாழமிக்க கட்டுரை ...
நிச்சயம் நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் ....
வாழ்த்துக்கள் ...

வைகை said...

கட்டுரை எழுதிய சதீசுக்கு வாழ்த்துக்கள்!!

வைகை said...

இப்பொழுது உள்ள சூழ்நிலையில்....விவசாயத்தின் உற்பத்தி செலவிற்கும் அரசின் கொள்முதல் தொகைக்கும் கட்டுபடி ஆகவில்லை என்பதே உண்மை!

தனி காட்டு ராஜா said...

இந்த கட்டுரையை எத்தனை விவசாயிகள் படிப்பார்கள் ?

Asiya Omar said...

மிக்க நன்றி கழுகு,இதனை நாம் ஒரு வேளாண் கையேடாக வைத்து கொள்ளலாம்.அவ்வளவு விஷயம் இருக்கு.அருமை.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் சதீஷ்குமாருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Sathishkumar கூறியது...
//நல்ல விரிவான தேவையான அலசல். உரம்/பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயம் பற்றி ஒரு கட்டுரை எழுதிட நண்பர் சதீஷ் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்//

அம்புட்டுதானே எழுதிபுடுவோம்../////

நன்றி சதீஷ்!

Anonymous said...

மிக விரிவான தகவல்கள்! வாழ்த்துக்கள் சதீஷ் :)

Kousalya Raj said...

விவசாயம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என்று இனியும் நாம் இருக்க இயலாது...உணவு பொருள் பற்றாகுறை இப்போதே தாண்டவமாடுகிறது . விவசாய நிலங்கள் வேறு காணாமல் போய் கொண்டு இருக்கின்றன...விவசாயம் ஒரு நாட்டின் உயிர்நாடி என்பதை மறந்து நிலங்கள் எல்லாம் பிளாட் போடப்பட்டு கட்டிடங்களாக மாறி வருகின்றன...

விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்...

அதற்கு முதல் படியாக விவசாயம் என்றால் என்ன என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த பதிவு கூறுகிறது. இன்னும் இதை தொடர்ந்து விவசாயம் பற்றிய பதிவுகள் வெளிவர வேண்டும்.

இந்த பதிவை எழுதிய நண்பர் சதீஷ்க்கு என் நன்றிகள். இது போன்ற நல்ல பதிவுகளை தேடி வெளியிடும் கழுகிற்கு என் பாராட்டுகள்.

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த கட்டுரையை எத்தனை விவசாயிகள் படிப்பார்கள் //

இந்த பதிவை படித்து விட்டு விவசாயி இடம் சேர்ப்பார்கள என்று கேட்டு இருக்கலாம் .......

கண்டிப்பாக கழுகை படிக்கும் அனைத்து நண்பர்களும் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன் .உள்நாட்டில்

.நிறைய நண்பர்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் .மேலும் இங்கு இருப்பர்வர்கள் அப்படியே கணினி முன் இருப்பவர்கள் எல்லாம் விவசாயம் செய்யவில்லை என்று என்ன வேண்டாம் ....நான் எவ்வளவு சம்பாதித்தாலும் இன்னும் விவசாய நிலங்கள் தான் வாங்கி ..........அதை பயிரும் செய்கிறான் .என் தாத்த ஒரு விவசாயி .....என் தகப்பனார் ஒரு Gazzeted officer That means Deputy registarar of co operative socities .இப்பொழுது ஓய்வு பெற்று விவசாயம் தான் செய்கிறார்கள் .நான் கல்லூரி படிக்கும் நாளில் இருந்து இன்று வரை விவசாயமும பார்த்து வருகிறேன் .இன்மேலும் பார்ப்பேன் ...........

Kousalya Raj said...

babu @@

//இன்று வரை விவசாயமும பார்த்து வருகிறேன் .இன்மேலும் பார்ப்பேன் .......//

கணினி சம்பந்தப்பட்ட சொந்த தொழில் செய்தாலும், விவசாயத்தையும் விட்டுவிடாமல் தொடர்ந்து நீங்கள் ஈடுபாடு காட்டி வருவது சிறப்பு.

இப்போது விவசாயத்தில் பல புதிய முறைகள் கையாளபடுகின்றன...குறிப்பாக இயற்கை விவசாயத்தில் பல விவசாயிகளும் இறங்கி இருப்பது நல்லதொரு விஷயம். என்ன ஒன்று சிறந்த விசயங்கள் எதுவும் கடைகோடி விவசாய மக்களுக்கு சரியாக சென்று சேருவதில்லை. அரசு கொஞ்சம் முயற்சி செய்து விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுத்தால் எங்கும் பசுமை புரட்சி ஏற்படுவது நிச்சயம்.

மாணவன் said...

விவசாயம்பற்றி தெளிவான பார்வையுடன் விரிவான அலசல்...

மாணவன் said...

விவசாயத்தைபற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கட்டுரை எழுதிய நண்பர் சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்......

Sathish said...

பாராட்டிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி... என் பதிவை பிரபலமாகிய கழுகு குழுவுக்கும், சிபாரிசு செய்த தோழி கௌசல்யாவிர்க்கும் மிக்க நன்றி.. நாளை தமிழக நேரப்படி காலை 10 மணிக்கு விவசாயத்தை பற்றி மேலும் ஒரு பதிவு போட இருக்கிறேன்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

வெளங்காதவன்™ said...

///Sathishkumar கூறியது...
பாராட்டிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி... என் பதிவை பிரபலமாகிய கழுகு குழுவுக்கும், சிபாரிசு செய்த தோழி கௌசல்யாவிர்க்கும் மிக்க நன்றி.. நாளை தமிழக நேரப்படி காலை 10 மணிக்கு விவசாயத்தை பற்றி மேலும் ஒரு பதிவு போட இருக்கிறேன்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..
///

வாழ்த்துக்கள் நண்பா....
நெறைய எழுதுங்க..... நெறையப் பேருக்கு விழிப்புணர்வு உண்டாக்குங்க.... நாங்க துணை நிக்கிறோம்....

arul said...

thanks for sharing

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes