Friday, April 25, 2014

எப்போது நிகழும் எழுவரின் விடுதலை..?

எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள்  மனிதர்களே.....? காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்களையெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் நாங்கள் சகித்துத் கொள்வது..? இதிகாசமென்று  சொல்லி நீங்கள் ஒரு கதை சொல்வீர்கள் அதில் கடவுள் கதாபாத்திரம் உங்களுக்கு குரங்கு பாத்திரம் எங்களுக்கு! அவதாரம் என்ற பெயரில்   எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள்  என்ன நியாயம் இது? யார் சொல்லி சென்ற  சமமற்ற  சமூக   நீதி இது..? ராமாயணகாலத்தில் இருந்து திரிக்கப்பட்ட பொய்கள்   இதோ  ராஜிவ்காந்தி கொலை வழக்கு வரை  நீண்டு...

Monday, April 21, 2014

வாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு !!!!

பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் மீது இன்னும் நமக்கு கூடுதல் வன்மம் உண்டு என்பதற்கு ஒரே ஒரு காரணம் ஈழம். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடுமையான போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி என்னும் போது காங்கிரசை ஒரு மானமுள்ள சுயமாரியதைக் கொண்ட எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான்.... ஆதரிக்கவும் கூடாது!!!!! இப்படியான சூழலில் காங்கிரஸ் ஆளவில்லை எனில் வேறு யார் ஆள இருக்கிறார்கள் என்று பார்த்தால் இங்கே நமக்கு இருக்கும் ஒரே மாற்று மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி மட்டும்தான்....என்பதற்காக மோடியை ஆதரிக்க முடியுமா என்ன...? காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று முடிவு செய்து பிஜேபியை ஆதரிக்க கூடாது தோழர்களே மோடி இந்துத்துவா அடிப்படையைக் கொண்டவர். இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு, இந்து மதம் என்பது எளிமையாய் சிக்கலில்லாமல் வாழ பயிற்றுவித்து...

Sunday, April 20, 2014

மோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...!

நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை. என் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்.... இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம்...

Saturday, March 08, 2014

வெற்றிக் கொடி கட்டும் கழகம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!

பாரளுமன்றத் தேர்தலுல் கூட்டணி வியூகத்திற்கான பல்வேறு கட்சிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கும் போது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பம் முதலே தெளிவான போக்கோடு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது. 40 தொகுதிகளுக்கும் எதேச்சதிகாரமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிராச்சாரத்துக்கு பிரதமர் கனவோடு புறப்பட்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளைப் பற்றிய எந்த ஒரு கவலையுமின்றி தன் மீதிருக்கும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின் காரணமாய இயங்க ஆரம்பித்திருப்பது தமிழக மக்களிடையே ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெறுப்பு சர்வ நிச்சயமாய் பாரளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்து வெற்றிவாய்ப்புகளின் எண்ணிக்கையை குறைக்கத்தான் போகிறது.  விஜயகாந்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணியோடு...

Thursday, February 20, 2014

ஏழு தமிழர்கள் விடுதலை....விஸ்வரூபமெடுத்திருக்கும் தமிழக அரசு..மிரட்சியில் மத்திய அரசு...!

இங்கே ஒரு விசயத்தை நாம் அனைவரும் தெளிவாக உணர வேண்டும். சட்ட சபையில் இவ்வளவு ஆணித்தரமாக மத்திய அரசுக்கு சவால் விட்டு தமிழக முதல்வர் விதி எண். 110ன் கீழ் ஒரு  அறிக்கையை அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு வாசித்தார் என்பதை தயவு செய்து யாரும் சாதரணமாக கடந்து சென்று விடாதீர்கள்...! இதில் அரசியல் இருக்கலாம் ஆனால் மத்திய அரசினை எதிர்த்து சட்டத்தின் போக்கில் போய் நியாயத்தை மனசாட்சியோடு அணுகி அதுவும் மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் கெடு வைத்து அவர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு.... சுதந்திர இந்தியாவில் எந்த கொம்பனும் இதுவரையில் செய்யாத ஒன்று. இதற்காக முதலில் நாம் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாரட்டியே ஆகவேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஏகாதிபத்தியத்தை தன் காலில் அணிந்துகொண்டு செயல்படும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு...

Wednesday, February 19, 2014

நாங்கள் தமிழர்கள் உங்களை எண்ணி பெருமையடைகிறோம்...!

மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு ஒரு சாமனியனின் மடல். சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் ஆளுமை நிறைந்த முதல்வர் நீங்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. வாழ்க்கையின் ஏதோ ஒரு திசையில் பயணித்து பின் புரட்சித் தலைவரோடு திரைப்படங்களில் நடித்து அதன் நீட்சியாக அரசியலில் ஈடுபட்டு இன்று அவர் உருவாக்கிய அனைந்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னிகரற்ற தலைவியாய் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். இது ஓரிரு வாக்கியத்தில் நான் எழுதியதைப் போலவோ அல்லது வெறுமனே வாசித்து கடந்து விடுவதை போலவோ எளிதானது அல்ல...! ஆணாதிக்கம் இச்சமூகத்தில் மிகுந்து கிடந்த காலச்சூழலில் யாதொரு பின்புலமும் இல்லாமல் அரசியலில் மேலேறி வருவது எவ்வளவு கடினம் என்பது சாமனியனின் கற்பனைகளுக்கு எட்டாத விசயம். அதுவும் சுதந்திர இந்தியாவில் அந்த சுதந்திரத்துக்காக...

Tuesday, January 28, 2014

கலைஞரின் அதிரடி.....அஞ்சாநெஞ்சனுக்கு விழுந்த அடி..!

  கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான். தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின்  அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes