Wednesday, July 13, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...


கழுகு ஆபிஸ் வாசல்ல வெயிட் பண்றேன்னு சொன்ன பயல எங்க காணோம்.? அட நான் யாருன்னு கேக்குறீங்களா.....? பெசல் கழுகு ரிப்போர்ட்டருங்க.. யார்கிட்டயும் சொல்லீறாதீங்க.!! உள்ள நியூசு நியூசுன்னு போட்டு கொல்றாய்ங்க. நம்ம கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கனகு டீ குடிக்க வாரேனு சொன்னான். அடிக்கடி டீக்கடையில் வடையோட சேத்து ஊர மெல்லுறது எங்க பயக வயக்கமுங்க..என் பேரு என்னனு கேக்குறீகளா. ரிப்போர்ட்டர் ரெங்குன்னா தெரியாத ஆளே இல்ல இப்புடி கேட்டு புட்டீகளே.! அந்தா கனகு வந்துட்டான். அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம்.. ! நீங்க கூச்சப்பட்டாம கேட்டுகிட்டே இருங்க..சரிதானுங்களே!!!!

ரி.ரெங்கு: யோவ் கனகு..வாய்யா சீக்கிரம்..ஊரெல்லாம் சுத்தி சேதி சேத்து சேந்து மண்டை வெடிச்சுடும் போல இருக்கு.....என்னம்மோ கலைஞர் குடும்பத்தை பழிவாங்கத்தான் ஆட்சிய பிடிச்ச மாதிரி அம்மா திமிரா இருக்க மாதிரில்ல நீ நிறுத்தி நிதானமா வர்ற....

கனகு: ஆமாங்கரேன்....என்னமோ அழிச்சாட்டியமா ஊடகத்தை வச்சு எல்லாத்தையும் சாதிச்சுப் புட்டு கடைசில ஊடகம் நினைச்சா என்ன வேணா செய்யலாம்னு கலிஞர் சொல்ற மாதிரி சம்பந்தம் இல்லாம பேசாதய்யா ரிப்பு...!

ரி. ரெங்கு: சரி அத்த விடு.. டீ சொல்லு முதல்ல..! என்னய்யா உங்க தலிவரு உடம்ப தேத்திகிட்டு வந்துட்டாரு போல...மறுபடியும் ராணாவா....?????

கனகு: கிண்டல் பண்றீராய்ய நீர்.? ஒரு விசயத்த சொல்றேன் கேளும். அவர் சென்னையில் இருக்கும் போதே படு சூப்பராகிட்டாரு. இங்க இருந்து உடம்ப தேத்துறதுகுள்ள ஊரே அவர பாக்க வந்து தொல்லை கொடுக்கும்னு சொல்லிட்டுத்தான்...சிங்கப்பூர்ல போய் ரெஸ்ட் எடுத்தார். ராணா கண்டிப்பாய் உண்டு ஓய்...!!!

ரி.ரெங்கு: என்ன ஓய்.. நீர் இப்போ ரிப்போர்ட்டர் ஆயிட்டீரு....!!! உம்ம தலைவரு ராணா எல்லாம் நடிக்கட்டும் எந்திரன் பார்ட் 2 எல்லாம் நடக்குறது கஷ்டம்னு தெரியுமா உமக்கு...! சன் பிக்சர்ஸ ஒழிச்சு கட்டிட்டுத்தான் மறுவேலை செய்யணும்னு எல்லா டிப்பார்மெண்டையும்...உலுப்பி விட்டிருக்காங்களாம் முதல்வர்....

கனகு: என்னத்த உலுப்பி விடுறாங்களோ தெரியல.! இந்துத்துவா பேஸ விட்டு வெளில வந்த கொஞ்சம் நல்லா இருக்கும். வீடு வீடுக்கு மாடு தரேன்னு அறிவிச்சதுக்கு அப்புறம் நம்ம ராம கோபாலன் சாமி நாட்டு பசுவா கொடுக்க சொல்லியிருக்காரு. தெய்வீகத்தன்மையோட....எப்டி உள்ள வர்றார் பாருங்க..

ரி.ரெங்கு: ஊர் பேச்சு பேச்சா இருக்கட்டும்..டீய குடியும்யா....ஈ விழுந்துடப் போகுது.!! உனக்கு தெரியுமா இலவசத்த கொடுக்குறேன் பேர்வழின்னு ரூபாய். 4,200 கோடி வரிச்சுமைகள ஏத்தி விட்டு இருக்காங்க நம்ம சி.எம்.

கனகு: எப்டி பாத்தாலும் மக்களுக்கு பழைய ஆட்சிய தூக்கினதுல சந்தோசம்தான் ஓய்..!!! ஒரு குடும்பம் மட்டும் வாழ்றதுக்கு ஒரு நாட்டையே கொடுக்க முடியாதுல்லயா? இதுல ஒரு விசயம் பாரும்....காங்கிரஸ்காரனுக்கு இது வரைக்கும் லாஜிக் படி பாத்தா ஒரு இழப்பும் இல்லை...நோகாம நொங்கு சாப்டிட்டு இருக்கான்..

ரி.ரெங்கு: அவன் எல்லாம் புத்திசாலி ஓய்..!!! கூட்டணி வலுவா இருக்குனு வலுவாவே திகார்குள்ள தூக்கி வக்கிறான் பாரு எல்லாரையும்... நீ வேணா பாரு பார்லிமெண்ட் எலக்சன் வர்றப்ப தி.மு.கவுக்கு ஆப்பு அடிச்சுட்டுட்டு அ.தி.முக கூட்ட கூட்டணி வைக்கிறானா இல்லையான்னு....?

கனகு: ஹி ஹி...ஹி அப்போ சீமான் என்ன செய்வார்? மறுபடி கலைஞருக்கு சப்போர்ட் பண்ணுவாரா? எலக்சன் நேரத்துல எரிமலையா வெடிச்ச மனிசன்..புஸ்வானமா ஒடுங்கிட்டாரேய்யா....?

ரி.ரெங்கு: அதுல்ல ஓய் இப்ப காமெடி..வடிவேலு தூது மேல தூது விட்டுட்டு இருக்காராம் அம்மாவுக்கு...சமயம் பாத்து அம்மா கால்ல விழுந்து....அந்தாளு விசயகாந்தாம்மா எனக்கு எதிரி. உங்கள பத்தி ஒண்ணியும் பேசல தெய்வமேன்னு கால்ல விழுறதா பிளான்...

கனகு: அட காலுல இருக்கிறவனயே காமெடியன் மாதிரி பாப்பாங்களே அவுங்க. இந்த காமெடியன என்ன பண்ணுவாங்களோ.!? ஆமாம், என்னயா ஆனாரு கேப்டன் சவுண்டே இல்லையே....இப்போ எல்லாம்?

ரி.ரெங்கு: ஓ அதுவா.. பண்ருட்டியார கட்சிப் பணிகள எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு அவரு லுங்கிய கட்டிக்கிட்டு ஓய்வெடுக்கிறாரு ஓய்.....! 5 வருசம் அம்மா ஓய்வெடுத்துட்டு ஆட்சிக்கு வரலையா அதே மாதிரி அவரும் வந்தாலும் வந்திடுவாரு....

(க்ளாஸில் டீ காலியானதும்...)

அய்யய்யோ உன்கிட்ட பேசிகிட்டு கிடந்தா ஊரு உலகத்து நியூஸெல்லாம் பேசிகிட்டே கிடந்திடுவேன். உன்ன போல கம்ப்யூட்டர தட்டுற பொலப்பு இருந்தாலும் பரவால.நாளைக்கு போடுறதுக்கு நியூசோட வரலேன்னா கொன்னே புடுவான் அந்த எடிட்டரு......... டீக்கு காச கொடுத்திடு அப்பாலிக்கா பாப்போம்...சரியா ! போயி உருப்படியா நாளைக்கு போடப் போற கட்டுரைய நீ ரெடி பண்ணு.....வரட்டா.....

கனகு: உம்ம டீக்கு காசு கொடுக்க இப்படி ஒரு அலப்பறையா.!? சரி ஓய்...கெளம்பு! கெளம்பு...பொழப்ப பாப்போம்...! பாய்!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


4 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Superbbbbbbbbbb!!!!

//ஒரு குடும்பம் மட்டும் வாழ்றதுக்கு ஒரு நாட்டையே கொடுக்க முடியாதுல்லயா?//

...இது நச் :)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அப்படியே எனக்கும் ஒரு டீ, சொல்லிருங்க. :)

சேலம் தேவா said...

நல்ல கூட்டணிதான்..!! :)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes